For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உணவில் பிரியாணி இலையை ஏன் தினமும் சேர்க்க வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்!!

பிரியாணி இலை அல்லது இலவங்கபத்திரி நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக உள்ளது. இந்த இலை தன்னுள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டு உள்ளது. அதைப் பற்றி போல்டு ஸ்கையின் ஒரு பார்வை

|

பிரியாணி இலை அல்லது இலவங்கபத்திரி நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக உள்ளது. இந்த அரோமேட்டிக் இலை மத்திய தரைக்கடல் பகுதியில் காணப்படும் பே லாரல் மரத்திலிருந்து கிடைக்கிறது.

இந்த இலைகள் தீஜ் பட்ட என்ற பெயரில் புகழ் பெற்று விளங்குகிறது. சமையலில் நறுமணப் பொருளாக இது சேர்க்கப்படுகிறது. இது நன்றாக உலர்ந்த அல்லது பொடி வடிவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது. பட்டையை போன்று இதுவும் மிதமான நறுமணத்தை கொடுக்கிறது.

10 Reasons Why You Must Add Bay Leaf (Tej Patta) To Your Diet

இந்த இலை பொதுவாக இந்திய ஆடம்பர உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது பவுடர் வடிவில் கரம் மசாலா போன்றவற்றில் பயன்படுகிறது.

இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த பிரியாணி இலைகள் எண்ணிலடங்காத மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளன. இந்த அரோமேட்டிக் பொருளில் ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள், டையூரிடிக் மற்றும் கட்டுப்படுத்துகிற பொருட்கள் போன்ற ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

சரி வாங்க இப்பொழுது இந்த பிரியாணி இலையின் மருத்துவ பயன்களை பற்றி பார்ப்போம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீரண சக்தியை அதிகரிக்கிறது

சீரண சக்தியை அதிகரிக்கிறது

வாய்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற சீரண பிரச்சினைகளை இது சரி செய்கிறது. தொடர்ந்து சீரண பிரச்சினைகளான மலச்சிக்கல், அமிலத்தன்மை, தொடர்ச்சியில்லாமல் மலம் கழித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பிரியாணி இலைகளை போட்டு ஒரு கப் டீ குடித்தால் போதும் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக மாறும்.

இந்த இலையில் உள்ள என்ஜைம் அசைவ சாப்பாட்டில் உள்ள புரோட்டீனை உடைத்து சாப்பாட்டிற்கு தனிச் சுவையை தருகிறது. சீரண பிரச்சினையால் அவதிப்பட்டால் 5 கிராம் பிரியாணி இலை, ஒரு துண்டு இஞ்சி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து தண்ணீர் 1/4 பங்காக குறையும் வரை கொதிக்க விடவும். பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை உண்ண வேண்டும்.

இப்படி செய்து வந்தால் நீண்ட நாட்களாக உங்கள் வயிற்றில் இருந்த பிரச்னைகள் மாயமாகி போகும்.

ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

உங்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் இருந்தால் பிரியாணி இலை சரியான மருந்தாகும். இந்த இலையில் உள்ள பைடோநியூட்ரியன்ட்ஸ் ஹாட் அட்டாக், மற்றும் பக்க வாதம் போன்றவற்றிலிருந்து காக்கிறது.

எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த 3 கிராம் பிரியாணி இலை, 3-4 கிராம் ரோஜா பூ மற்றும் 300 மில்லி தண்ணீர் எடுத்து கொள்ளவும். இந்த தண்ணீர் 75 மில்லி வரும் வரை காய்ச்ச வேண்டும். வடிகட்டி அருந்தவும். இதே முறையை வாரத்திற்கு 3 முறை செய்யவும்.

டயாபெட்டீஸ்யை குணப்படுத்துதல்

டயாபெட்டீஸ்யை குணப்படுத்துதல்

டயாபெட்டீஸ் பொதுவாக காணப்படும் நோயாக தற்போது உள்ளது. 10 ல் 9 நபர்களுக்கு டயாபெட்டீஸ் இருக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது.

நல்ல பலன் கிடைக்க 3-4 பிரியாணி இலைகளை பொடியாக்கி கொள்ளுங்கள். தினமும் ஒரு மாதத்திற்கு இந்த பவுடரை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஜலதோஷம் போக்க

ஜலதோஷம் போக்க

இந்த நூற்றாண்டில் பிரியாணி இலைகள் சலதோஷம் மற்றும் ப்ளூ போன்றவற்றை போக்க பயன்படுகிறது. நல்ல பலன் கிடைக்க 2-3 பிரியாணி இலைகளை 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி விடவும். பிறகு ஒரு சுத்தமான துணியை இந்த தண்ணீரில் நனைக்க வேண்டும். அந்த துணியை நெஞ்சில் போட்டால் ப்ளூவுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த முறை தொடர்ச்சியான தும்மலை நிறுத்தவும் பயன்படுகிறது.

டயாபெட்டீஸ்யை குணப்படுத்துதல்

டயாபெட்டீஸ்யை குணப்படுத்துதல்

டயாபெட்டீஸ் பொதுவாக காணப்படும் நோயாக தற்போது உள்ளது. 10 ல் 9 நபர்களுக்கு டயாபெட்டீஸ் இருக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது.

நல்ல பலன் கிடைக்க 3-4 பிரியாணி இலைகளை பொடியாக்கி கொள்ளுங்கள். தினமும் ஒரு மாதத்திற்கு இந்த பவுடரை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஜலதோஷம் போக்க

ஜலதோஷம் போக்க

இந்த நூற்றாண்டில் பிரியாணி இலைகள் சலதோஷம் மற்றும் ப்ளூ போன்றவற்றை போக்க பயன்படுகிறது. நல்ல பலன் கிடைக்க 2-3 பிரியாணி இலைகளை 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி விடவும். பிறகு ஒரு சுத்தமான துணியை இந்த தண்ணீரில் நனைக்க வேண்டும். அந்த துணியை நெஞ்சில் போட்டால் ப்ளூவுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த முறை தொடர்ச்சியான தும்மலை நிறுத்தவும் பயன்படுகிறது.

சிறுநீரக பிரச்சினையை சரி செய்தல்

சிறுநீரக பிரச்சினையை சரி செய்தல்

சிறுநீரகம் நமது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி வடிகட்டும் செயலை செய்கிறது. ஆனால் சிறுநீரக கற்கள் தோன்றி சிறுநீர் பாதையில் இடையூறை ஏற்படுத்துகிறது. இந்த பிரியாணி இலை சிறுநீரக கற்களை அகற்றுவதில்லை.

ஆனால் மறுபடியும் அது உருவாகாமல் தடுக்க உதவுகிறது. 200 மில்லி தண்ணீரில் 5 கிராம் பிரியாணி இலை சேர்த்து தண்ணீர் 50 மில்லியாக ஆகும் வரை கொதிக்க விடவும். பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு தடவை பருகி வந்தால் சிறுநீரக கற்கள் உருவாககாது.

மூக்கிலிருந்து இரத்தம் வடிதலை தடுத்தல்

மூக்கிலிருந்து இரத்தம் வடிதலை தடுத்தல்

போதுமான நீர்ச்சத்து அல்லது சூட்டால் மூக்கில் இரத்தம் வடியும். இந்த மாதிரியான சமயங்களில் 2-3 பிரியாணி இலைகளை நசுக்கி தண்ணீர் விட்டு குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மாதவிடாய் பிரச்சினையை சரியாக்குதல்

மாதவிடாய் பிரச்சினையை சரியாக்குதல்

நிறைய பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை காணப்படுகிறது. இதற்கு நீங்கள் 3-4 பிரியாணி இலைகளை வாயில் மென்றோ அல்லது உணவுகளில் சேர்த்தோ சாப்பிட்டால் சரியில்லாத மாதவிடாய் பிரச்சினை, வெஜினல் டிஸ்சார்ஜ் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

மன அழுத்தம் குறைத்தல்

மன அழுத்தம் குறைத்தல்

மன அழுத்தம் உங்கள் முகத்தையும் புத்துணர்ச்சி இல்லாமல் காட்டும். இந்த பிரியாணி இலைகள் மன அழுத்தத்தை குறைத்து உங்களை புத்துணர்ச்சியோடு வைக்கும். இதற்கு பிரியாணி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து போர்வையை மூடி ஆவி பிடித்தால் போதும் உங்கள் மன அழுத்தம் பறந்து போய் விடும்.

கேன்சரை தடுத்தல்

கேன்சரை தடுத்தல்

புற்று நோய் என்பது இறப்பை பரிசாக கொடுக்கும் கொடிய நோயாகும். இறக்கும் காலத்தை எண்ணிக் கொண்டே வாழக் கூடிய நோயாகும். இந்த நோயிலிருந்து நம்மை காக்க பிரியாணி இலைகள் பயன்படுகிறது.

இந்த பிரியாணி இலையில் உள்ள கெமோபுரோடெக்டிவ் பொருட்களான கேஃபிக் ஆசிட், க்யூயர்சிடின், யூஜினால், கேட்டசின்கள் போன்றவை புற்று நோய்க்கு எதிராக செயல்படுகின்றன. இதில் உள்ள பார்த்தேனலாய்டு கர்ப்பப்பை வாய் புற்று நோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நல்ல உறக்கம்

நல்ல உறக்கம்

நல்ல தூக்கம் வர வேண்டும் என்று நினைத்தால் பிரியாணி இலை எண்ணெய்யை தண்ணீரில் ஊற்றி சூடாக்கி அந்த ஆவியை நுகர்ந்தால் போதும் நிம்மதியான தூக்கத்திற்கு இழுத்து செல்லும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Reasons Why You Must Add Bay Leaf (Tej Patta) To Your Diet

10 Reasons Why You Must Add Bay Leaf (Tej Patta) To Your Diet
Story first published: Tuesday, November 7, 2017, 13:23 [IST]
Desktop Bottom Promotion