Latest Updates
-
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?
இந்த ஜூஸை தினமும் மூன்று டம்ளர் குடித்தால், இதயக் குழாயில் ஏற்படும் அடைப்பைத் தடுக்கலாம்!
இன்றைய காலத்தில் ஏராளமானோருக்கு இதயத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை செலுத்தும் இரத்த குழாயான தமனியில் அடைப்பு ஏற்படுகிறது. இதற்கு நாம் உண்ணும் உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் தான் முதன்மையான காரணம்.
முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
இந்த கொழுப்புக்கள் தமனிகளின் சுவர்களில் மெதுவாக படிய ஆரம்பித்து, நாளடைவில் அடைப்பை ஏற்படுத்தும். இப்படி தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால், அதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புக்கள் கூட அதிகம் உள்ளது.
தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
எனவே இந்த பெருந்தமனியில் ஏற்படும் அடைப்பைத் தடுக்க ஒவ்வொருவரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு, கெட்ட பழக்கங்களைக் கைவிட முயற்சிக்க வேண்டும்.
தினமும் காலையில் சுடுநீரில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?
மேலும் தற்போதைய உணவுப் பொருட்களில் அதிகம் கொழுப்புக்கள் இருப்பதால், தினமும் பெருந்தமனிகளை சுத்தம் செய்யும் ஒரு ஜூஸைக் குடித்து வந்தால், வாழ்நாளின் அளவை நீட்டிக்கலாம்.

எண்ணெயில் பொரித்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமான அளவில் உண்பதோடு, தினமும் இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டு வந்தால், விரைவில் பெருந்தமனி தடிப்பால் அவஸ்தைப்படக்கூடும்.

நீரிழிவு
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இல்லாமல், ஏற்றத்தாழ்வுடன் இருந்தால், அதன் காரணமாகவும், பெருந்தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படும்.

புகைப்பிடித்தல்
தினமும் புகைப்பிடித்து வருவோருக்கு பெருந்தமனி தடிப்புக்கள் மிகவும் வேகமாக வரும் வாய்ப்புக்கள் உள்ளது. உங்களுக்கு நீண்ட நாட்கள் வாழ ஆசை இருந்தால், முதலில் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பெருந்தமனி தடிப்புக்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்து. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் தமனிகள் கடினமாவதால், பெருந்தமனிகளில் அடைப்புக்கள் வேகமாக ஏற்படும்.

இயற்கை வழிகள்
பெருந்தமனி தடிப்புக்களுக்கு மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் நாம் உண்ணும் உணவுகளிலும், வாழ்க்கை முறையிலும் சிறு மாற்றங்களைக் கொண்டு வந்தால், பெருந்தமனி தடிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

உணவுகள் உதவும்
பெருந்தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துவது கொழுப்புக்கள் தான். எனவே பெருந்தமனியை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் பெருந்தமனிகள் சுத்தமாகி, பெருந்தமனி தடிப்பு ஏற்படும் அபாயம் குறையும்.

உணவுப் பொருட்கள்
பூண்டு, வெங்காயம், மிளகு, மஞ்சள் தூள், இஞ்சி, க்ரீன் டீ, பார்ஸ்லி, அன்னாசி, பப்பாளி போன்றவை பெருந்தமனிகளில் படிந்துள்ள கொழுப்புக்கள் மற்றும் ப்ளேக்குகளை வெளியேற்றும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்களில் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் இதய நோய்கள் வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.

மற்றொரு முறை
பெருந்தமனிகளை சுத்தம் செய்யும் ஜூஸ் ஒன்று உள்ளது. இந்த ஜூஸை தினமும் மூன்று டம்ளர் குடித்து வருவதன் மூலமும் பெருந்தமனி தடிப்பு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம்.

ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்
துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
தக்காளி ஜூஸ் - 1 கப்
எலுமிச்சை ஜூஸ் - 1/4 கப்
செலரி - 2 கொத்து
Image Courtesy

ஜூஸ் செய்யும் முறை
முதலில் செலரி கீரை மற்றும் அதன் தண்டுகளை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போடவும்.
பின் அத்துடன் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றி குடிக்கவும்.

குறிப்பு
இந்த ஜூஸ் குடிப்பதால் இதய நோய்கள் வராமல் இருக்கும் என்று சொல்வதை நம்ப முடியாது தான். ஆனால் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இந்த ஜூஸை தினமும் 3 டம்ளர் குடித்து வந்து பாருங்கள். பின் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். குறிப்பாக இந்த ஜூஸை மூன்று வேளை உணவு உண்ட பின் எடுத்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications