Just In
- 43 min ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 5 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 8 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 9 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மிகச் சீக்கிரம் தூங்கச் செல்கிறீர்களா? ஆண்களே இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!
சீக்கிரம் தூங்குவது உடலுக்கு நல்லது எனக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தூங்குவது ஆண்களுக்கு பிரச்சனைகளின் அறிகுறி என கூறுகிறார்கள். ஹிரோஷிமா அடாமிக் பாம் கேசுவாலிட்டி என்ற ஆராய்ச்சி நிறுவனம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆண்களுக்கான ஆய்வு :
விரைவில் சோர்வு உண்டாகி சீக்கிரம் தூங்கச் செல்பவர்களுக்கு அதாவது (8 -9 மணிக்குள்) உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரவதற்கான அறிகுறி என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த ஆய்வு ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது.
நோய்களின் அறிகுறி :
இந்த ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 2400 பேரிடம் நடத்தியது. இவர்களில் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் விரைவில் தூங்குபவர்கள் என தெரிய வந்துள்ளது.
உடல் அசதி :
இதய மற்றும் அதிக ரத்தக் கொதிப்பின் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உடலில் விரைவில் அசதி உண்டாகி படுக்கைக்கு செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான தூக்கம் வருவதில்லை.
இதய பாதிப்பு :
உடலின் உள்ளுறுப்பு செயல் கடிகாரத்தை(Internal body clock ) பாதிப்பதால், இதய செயல்களும் (circadian rhythms)பாதிக்கின்றன. இதனால் விரைவில் களைத்து சீக்கிரம் தூங்கச் செல்கிறார்கள் என தலைமை ஆராய்ச்சியாளர் நோபு சசாகி என்பவர் கூறுகிறார்.
ஆழ்ந்த தூக்கம் :
இவ்வாறு விரைவில் படுத்துக் கொள்பவர்களின் தூக்கமும் குறைவாகத்தான் இருக்கிறது . இதெல்லாம் ரத்தக் கொதிப்பின் அறிகுறி என்கிறார்கள்.
ஆனால் தாமதமாக தூங்கச் செல்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. அவர்கள் ஆரோக்கியமாக திகழ்கிறார்கள் எனவும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.