Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது !! ஏன் தெரியுமா?
காலையில் சாப்பிடும் உணவு மிக ஆரோக்கியமாகவும் , வயிறு நிரம்புவது போலவும் உண்ண வேண்டும். அது போலவே நீங்கள் காலையில் சாப்பிடக் கூடாத உணவுகளைப் பற்றியும் இங்கே பட்டியிலிடப்படுள்ளது.
காலையில் சாப்பிடும் உணவே மிக முக்கியமானது. அன்றைய நாள் முழுவதும் உங்களை எனர்ஜியாக வைத்துக்கொள்ளவும், தேவையான் சத்துக்களை உடல் பெறவும் காலையில் சாப்பிடும் உணவுகள் மிக முக்கியமானது.

நல்ல ஆரோக்கியமன உணவை சாப்பிடுவதோ எவ்வளவு முக்கியமோ அதைவிட தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடக் கூடாது. எந்த மாதிரியான உணவுகளை நீங்கள் காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் இதனை தொடர்ந்து படியுங்கள்.

தயிர் :
தயிரில் இருக்கும் நல்ல பேக்டீரியா உடலுக்கு நல்லதுதான். ஆனால் அதனை காலையில் சாப்பிடும்போது அவை குடல்கலின் மேல் இருக்கும் மெல்லிய படல்த்தின் மீது வினைபுரிந்து வயிற்று உப்புசத்தை தந்து விடும்.

வாழைப் பழம் :
வாழைப்பழத்தில் அதிக மெக்னீசியம் இருப்பதால் அவை கால்சியம் அளவை குறைக்கச் செய்து விடும். ஆகவே காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.

தக்காளி :
தக்காளி அமிலத்தன்மை கொண்டது. இதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அவை இரைப்பை அமிலத்துடன் கலந்து கரைக்க முடியாத படிமமாக மாறி சிறு நீரகத்தில் கற்களை உண்டாக்கிவிடும்.

மாத்திரைகள் :
சிலர் தினமும் வெறும் வயிற்றில் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இது மிகவும் தவறு. இவை வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்து அமில காரச் சம நிலையில் ஏற்ற தாழ்வை தரும். இதனால் உடல் நிலை பாதிக்கும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு :
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின் குடல் வாலை தூண்டி அதிக ஜீரண அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால் வாயு, நெஞ்செரிச்சல் ஆகியவை உண்டாகும்.

காபி, தேநீர் :
காபி தேநீரில்தான் நிறைய பேர் தங்களது காலை நேரத்தை ஆரம்பிப்பார்கள். இதனை வெறும் வயற்றில் குடிப்பதால் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே 2 கிளாஸ் நீரை குடித்து குறைந்தது 15 நிமிடங்கள் கழித்து காபி அல்லது தேநீரை குடிக்கவும்.



Click it and Unblock the Notifications











