Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது !! ஏன் தெரியுமா?
காலையில் சாப்பிடும் உணவு மிக ஆரோக்கியமாகவும் , வயிறு நிரம்புவது போலவும் உண்ண வேண்டும். அது போலவே நீங்கள் காலையில் சாப்பிடக் கூடாத உணவுகளைப் பற்றியும் இங்கே பட்டியிலிடப்படுள்ளது.
காலையில் சாப்பிடும் உணவே மிக முக்கியமானது. அன்றைய நாள் முழுவதும் உங்களை எனர்ஜியாக வைத்துக்கொள்ளவும், தேவையான் சத்துக்களை உடல் பெறவும் காலையில் சாப்பிடும் உணவுகள் மிக முக்கியமானது.

நல்ல ஆரோக்கியமன உணவை சாப்பிடுவதோ எவ்வளவு முக்கியமோ அதைவிட தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடக் கூடாது. எந்த மாதிரியான உணவுகளை நீங்கள் காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் இதனை தொடர்ந்து படியுங்கள்.

தயிர் :
தயிரில் இருக்கும் நல்ல பேக்டீரியா உடலுக்கு நல்லதுதான். ஆனால் அதனை காலையில் சாப்பிடும்போது அவை குடல்கலின் மேல் இருக்கும் மெல்லிய படல்த்தின் மீது வினைபுரிந்து வயிற்று உப்புசத்தை தந்து விடும்.

வாழைப் பழம் :
வாழைப்பழத்தில் அதிக மெக்னீசியம் இருப்பதால் அவை கால்சியம் அளவை குறைக்கச் செய்து விடும். ஆகவே காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.

தக்காளி :
தக்காளி அமிலத்தன்மை கொண்டது. இதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அவை இரைப்பை அமிலத்துடன் கலந்து கரைக்க முடியாத படிமமாக மாறி சிறு நீரகத்தில் கற்களை உண்டாக்கிவிடும்.

மாத்திரைகள் :
சிலர் தினமும் வெறும் வயிற்றில் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இது மிகவும் தவறு. இவை வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்து அமில காரச் சம நிலையில் ஏற்ற தாழ்வை தரும். இதனால் உடல் நிலை பாதிக்கும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு :
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின் குடல் வாலை தூண்டி அதிக ஜீரண அமிலத்தை சுரக்கச் செய்யும். இதனால் வாயு, நெஞ்செரிச்சல் ஆகியவை உண்டாகும்.

காபி, தேநீர் :
காபி தேநீரில்தான் நிறைய பேர் தங்களது காலை நேரத்தை ஆரம்பிப்பார்கள். இதனை வெறும் வயற்றில் குடிப்பதால் அமிலத்தன்மை அதிகரித்துவிடும். எனவே 2 கிளாஸ் நீரை குடித்து குறைந்தது 15 நிமிடங்கள் கழித்து காபி அல்லது தேநீரை குடிக்கவும்.



Click it and Unblock the Notifications