Latest Updates
-
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
சாப்பிடுவதற்கு முன் கல் உப்பு கலந்த எலுமிச்சை சாறு சாப்பிடவேண்டியதன் அவசியம் என்ன ?
உணவுதான் நம் வாழ்க்கைக்கு ஆதாரம். நல்ல சத்தான உணவை சாப்பிடுவதால் வளமான வாழ்க்கையை பெறலாம். நீங்கள் சாப்பிடும்போது செய்யக் கூடாத தவறுகள் என்ன என்பதுதான் இந்த கட்டுரை.
ஆரோக்கியமான உணவை சாப்பிட உங்களுக்கு ஆசை. இருந்தாலும் எதோ உணவை எடுத்தோம், சாப்பிட்டோம் என்பது முறையான உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
உணவு சாப்பிடும்போதும் பல விஷயங்களை நாம் கவனிப்பது அவசியம். சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடலில் ஒட்டாது என்பார்கள்.

இன்னும் சிலருக்கு சிறிது சாப்பிட்டாலும் உடல் குண்டாகிவிடும். இதற்கு காரணம் நாம் உணவை தவறான முறையில் அணுகுவதால்தான். சாப்பாட்டு விஷயத்தில் நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை .

பசி எடுத்தால் சாப்பிடுங்கள் :
பசி நன்றாக எடுத்த பின்புதான் சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவை கரைக்கும் நொதிகள் நன்றாக வேலை செய்யும். சக்தியும் கிடைக்கும். இல்லையெனில் அஜீரண கோளாறில் சிரமப் படவேண்டும்.

உறுப்புகளுக்குள் ஒழுங்கை கொண்டு வாருங்கள் !!
நீங்கள் சரியான குறிப்பிட்ட நேரத்த்திற்கு சாப்பிட்டால் அந்த கட்டுப்பாட்டை உங்கள் உறுப்புகளும் பின்பற்றும்.
இதனால் வியாதி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கண்ட நேரத்திற்கு சாப்பிட்டு உறுப்புகளில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்.

சரியான காம்பினேஷனில் சாப்பிடுங்கள் :
தயிரை சாப்பிட்ட பின் பால் குடிப்பதோ, அல்லது பாலை குடித்தவுடன் புளித்த பழங்கள் சாப்பிடுவது, இப்படி உணவை தவறான காம்பினேஷனுடன் எடுத்துக் கொண்டால் அஜீரணம் உண்டாகும். அதோடு வயிறு சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாக்கும்.

கல் உப்பு கலந்த எலுமிச்சை சாறு சாப்பிடுவதற்கு முன் :
உணவை சாப்பிடுவதற்கு இஞ்சியை எலுமிச்சை சாறில் தட்டி, அதில் ஒரு சிட்டிகை கல் உப்பை போட்டு குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். இதனால் உணவு நன்றாக செரிக்கும்.

இரவுகளில் என்ன சாப்பிடுகிறீர்கள் :
இரவுகளில் சில்லிடும் ஐஸ் பானங்கள், ஐஸ் டீ, ஆகிய்வற்றை தவிர்க்க வேண்டும். பொதுவாக இரவில் குளிர்ச்சியான பண்டங்கள் செரிமான பிரச்சனையை உண்டாக்கும். தூக்கமின்மையும் ஏற்படுத்தும்.

நீரை எப்போது எப்படி குடிக்க வேண்டும்?
நீங்கள் அதிக தாகத்துடன் இருந்தால் சாப்பிடக் கூடாது. அதுபோல் அதிக பசியுடன் இருக்கும்போது நீர் அருந்தக் கூடாது. உணவுகளுக்கு இடையே நீர் அருந்தக் கூடாது. வேண்டுமானால், உணவு அடைக்காமலிருப்பதை தவிர்க்க ஒரு சிப் அளவு வெதுவெதுப்பான நீரைஅவ்வப்போது குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications