Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
தீர்க்க ஆயுளுடன் வாழ நீங்கள் தினமும் குடிக்க வேண்டிய பானங்கள் !!
உங்கள் உடல் ஆரோக்கியம் உங்களில் மன வலிமையையும், மனோ நிலையையும் பறை சாற்றும். உணவிற்கும் குணங்களுக்கும் தொடர்பு உண்டு. செவ்வாய், வெள்ளிகளில் வெங்காயம் முதற்கொண்டு அசைவம் வரை ஏன் உண்ணக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என தெரியுமா?
பொதுவாக செவ்வாய் வெள்ளிகளில் கடவுளை ஒருமுகத்துடன் வணங்கும் நாள். அன்று மனதை அலைகழிக்கும் மற்றும் திசை திருப்பும் வகையில் இல்லாமல் இருக்கத்தான் அசைவம் , வெங்காயம் , மசாலா கலக்காமல் உண்ணும் பழக்கத்தை கொண்டு வந்தனர்.
அதிகமான மசாலா உணவுகள் அன்றாடம் சாப்பிட்டால் காரணமேயில்லாமல் டென்ஷன், கோபம் ஆகிவற்றை உண்டாக்கும் என்பது 100 சதவீதம் உண்மை.
நீங்கள் சாப்பிடும் மசாலா உணவுகளால் உண்டாகும் பாதிப்பினை சரி செய்யும் குணங்கள் காய்கறிகள் பழங்கள் பெற்றுள்ளது.
அப்படி உடலுக்கு ஆரோக்கியமான பழம் காய்களால் ஜூஸ் செய்து குடித்தால் பரிபூரண சத்துக்களை பெறலாம். முக்கியமாக அவற்றை வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். சர்க்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆரோக்கியத்தின் மேல் அக்கறை இருந்தால் படிப்பதை தொடருங்கள்.

கேரட்+ இஞ்சி + ஆப்பிள்
மூன்றையும் துருவி ஒரு டம்ளர் அளவு நீர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடித்து அதனை அப்படியே குடியுங்கள். வாரம் ஒருமுறை குடித்தால், வயிறிலுள்ள நச்சுக்களை, கிருமிகளை சுத்தப்படுத்தும்.

வெள்ளரிக்காய் + செலரி + ஆப்பிள் :
இவை தலைவலி, வயிற்று வலியை குணப்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.

அன்னாசி +தர்பூசணி + ஆப்பிள் :
இவை உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்று. சிறு நீரகத்தை சுத்தப்படுத்தும்.

பாவக்காய் +ஆப்பிள் +பால் :
இந்த ஜூஸ் உடலில் உள்ள அதிகப்படியான சூட்டை தணிக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கும்.

கேரட் + ஆப்பிள் +பேரிக்காய் :
இந்த ஜூஸ் ரத்த அழுத்ததை கட்டுப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றும்.

ஆப்பிள் + அன்னாசி + பால் :
இந்த ஜூஸ் மலச்சிக்கலை சரிபடுத்தும். ஜீரன சக்தியை அதிகப்படுத்தும். தேவையான சத்துக்களை அளிக்கும்.
உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!
Read more at: /health/wellness/2016/interesting-navel-facts-you-never-knew-before/slider-pf71551-012415.html



Click it and Unblock the Notifications











