Latest Updates
-
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ரத்தத்தை சுத்தப்படுத்தி ஆரோக்கியமா வாழ இந்த ஒரே ஒரு அற்புத ஜூஸை குடியுங்க!!.
ரத்தம்!! இது எப்படி இருக்கோ அப்படி உங்கள் மன ஓட்டமும், உடல் ஓட்டமும் இருக்கும். சத்துக்கள், ஆக்ஸிஜன் ஆகியவற்றை உடலின் தலையிலிருந்து பாதம் வரை கடத்திச் செல்வது உங்க ரத்தம்தான்.
சுத்தமான அடர்த்தியில்லாத ரத்தம் வேகமாக உடல் முழுவதும் பாயும்போது எல்லா உறுப்புகளும் தேவையான சத்தும் ஆக்ஸிஜனும் கிடைக்கும். இதனால் பலத்தோடு உங்களால் வலம் வர முடியும்.

ரத்த ஓட்டம் ஏன் குறைகிறது?
நாம் சரியாக உடல் உழைப்பை பெறாத போதும் , கண்ட உணவுக் குப்பைகளை(சத்தில்லாத எதுவும் குப்பைதானே) சாப்பிடும்போதும், உணவுகளிலுள்ள நச்சுக்கள், கொழுப்பு ஆகியவை ரத்தத்தில் அதிகமாக இருக்கும்போது ரத்த ஓட்டம் குறையும்.
இதன் காரணமாக ரத்த அழுத்தம் முதற்கொண்டு பல வியாதிகள் வர காரணமாகிவிடும். எனவே உண்ணும் உணவே உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

ரத்தம் சுத்தம் செய்ய :
ரத்தத்தை சுத்தப்படுத்த வெளியிலிருந்து நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது உள்ளே செல்லும் உணவுப் பொருட்களால் மட்டுமே முடியும்.
அவ்வாறு ரத்தத்தை சுத்தப்படுத்த இங்கே சிறந்த வல்லுநர்கள் கூறிய இந்த ஜூஸை குடித்துப் பாருங்கள். இது நிஜமாகவே அற்புதத்தை தரக் கூடியது.

தேவையானவை :
கேரட் - 5
மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1
இஞ்சி-1 துண்டு
வெள்ளரிக்காய் - 1
ஆரஞ்சு - 1

ஜூஸ் செய்யும் முறை :
கேரட், எலுமிச்சை இஞ்சி வெள்ளரி, ஆரஞ்சு ஆகியவற்றின் தோலை மட்டும் நீக்கிக் கொள்ளுங்கள். இவற்றை எல்லாம் கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு 1 கப் நீர் ஊற்றி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். வடிகட்டாமல் அதனை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள்.

குடிக்கும் முறை :
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்தும் பாருங்கள். நிஜமாகவே இதன் பலன் கண்டு வியப்பீர்கள். தினமும் ஃப்ரஷாக செய்து குடியுங்கள். அதன் முழுப் பலனை அனுபவியுங்கள்.



Click it and Unblock the Notifications