Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
பெண்களே! 'இத' நீங்க பண்ணுவது உங்க கர்ப்பத்திற்கு உதவாதாம்... என்ன பண்ணனும் தெரியுமா?
எடை இழப்பு சார்ந்த வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யாதவர்களுக்கு பிறப்பு முடிவுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது கண்டறியப்பட்டது. மலட்டுத்தன்மையின் போக்குகள் எல்லா நேரத்திலும் உச்சத்தில் உள்ளன.
வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் கருவுறாமை பிரச்சனையால் தம்பதிகள் அவதிப்படுகின்றனர். பொதுவாக கருவுறுதல் பிரச்சனைகள் ஆண், பெண் இருவருக்கும் உள்ளன. ஆனால், இங்கு பெரும்பாலும் கருவுறாமை பிரச்சனை என்றால் பெண்ணுக்குதான் இருக்கும் என்ற பிம்பம் நம்பப்படுகிறது. கருவுறாமை பிரச்சனைகளின் அதிர்வெண் சமீப காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போதைய போக்கு மற்றும் வாழ்க்கை முறையின் திடீர் அதிகரிப்புக்கு பல காரணங்கள் உள்ளன. உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கருத்தரிப்பதில் சிரமம் இருக்கும் என்பதும் நீண்ட நாட்களாகவே கூறப்படுகிறது.

ஆரோக்கியமான கருத்தரிப்பு செயல்முறையை முறியடிக்கும் சிக்கல்களை சமாளிக்க, பல வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் எடை இழப்பு, குறிப்பாக வழக்கமான உடற்பயிற்சி முறை பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய ஆய்வில், சில வாழ்க்கை முறை மாற்றங்களை அறிமுகப்படுத்துவது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என்று கண்டறிந்துள்ளது. இக்கட்டுரையில், எடை இழப்பு மற்றும் கருவுறாமை பிரச்சனையின் தொடர்பை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ஆய்வு
எடை இழப்பு மற்றும் கருத்தரிக்கும் நிகழ்தகவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் பற்றி ஒரு ஆய்வு ஒன்பது கல்வி மருத்துவ மையங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு பெண்களின் இரண்டு குழுக்களை உள்ளடக்கியது. முதல் குழுவானது, மருந்துகளுடன் அவர்களது தினசரி நடைமுறைகளில் பல வாழ்க்கை முறை மாற்றங்களை உள்ளடக்கியது மற்றும் உணவு தொடர்பான மாற்றங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தது. எடை இழப்பை அதிகரிக்க அவர்கள் அதிகமான உடல் செயல்பாடுகளையும் செய்தனர். மற்ற குழு எடை இழப்பு முயற்சிகள் இல்லாமல் தங்கள் உடல் செயல்பாடுகளை மட்டுமே செய்து வந்தனர்.

ஆய்வு முடிவுகள்
முதல் குழுவின் பெண்கள் தங்கள் உடல் எடையில் சராசரியாக ஏழு சதவீதத்தை இழந்தனர், அதே சமயம் இரண்டாவது குழுவின் பெண்கள் தங்கள் எடையில் கிட்டத்தட்ட எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், இரு குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும் ஆரோக்கியமான பிறப்புகளின் அதிர்வெண்ணிலும் கணிசமான வேறுபாடு இல்லை என்பது முறையாகக் குறிப்பிடப்பட்டது. உண்மையில், உடல் எடையைக் குறைப்பதை இலக்காகக் கொள்ளாத ‘ஒரே உடற்பயிற்சி' குழுவில் குழந்தை பெற்ற பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

முடிவுரை
வழக்கமான வாழ்க்கை முறை மற்றும் உணவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் பெண்களின் எடையைக் குறைக்க உதவியது மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியுடன் அவர்களுக்கு உதவியது. இது பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பல சிக்கல்களை குறைக்க உதவுகிறது. எடை இழப்பு மூட்டு வலி மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் முன்னேற்றம் போன்ற பிற நன்மைகளைக் கொண்டிருந்தது. ஆனால் கருவுறுதல் தொடர்பான வேறு எந்த நன்மையும் இல்லை.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
மேற்கூறிய ஆய்வின் நிலைமைகள் மற்றும் முடிவுகளை கவனமாகப் படித்த பிறகு, எடை இழப்பு சார்ந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவினாலும், எடை இழப்பு திட்டங்கள் எப்படியும் பெண்களை அதிக வளமானதாக மாற்றவில்லை என்று நிபுணர்கள் முடிவு செய்தனர்.

இறுதிகுறிப்பு
எடை இழப்பு சார்ந்த வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யாதவர்களுக்கு பிறப்பு முடிவுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது கண்டறியப்பட்டது. மலட்டுத்தன்மையின் போக்குகள் எல்லா நேரத்திலும் உச்சத்தில் உள்ளன. மேலும் எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு அதிக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தேவைப்படும் தலைமுறையில் இது ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது என்று மேலும் குறிப்பிடப்பட்டது.



Click it and Unblock the Notifications