Just In
- 3 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 8 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 10 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 11 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சர்க்கரை நோயாளிகளே! உங்க உயிருக்கு ஆபத்தான அதிகளவு சர்க்கரையை உடலிலிருந்து எப்படி வெளியேற்றலாம்?
காலப்போக்கில், உயர் இரத்த சர்க்கரை அளவு சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது மற்றும் சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் நாட்பட்ட நோயான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறார்கள். 30 வயதை கடந்தவுடன் சர்க்கரை பெரும்பாலான மக்களை பாதிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள், பரம்பரை வழியாக ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வு மிகவும் இயற்கையானது. சில நேரங்களில் அது மிகக் குறைவாகவும், மற்ற நேரங்களில் எந்த எச்சரிக்கை அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம்.
நீரிழிவு நோயாளிக்கு இரண்டு நிகழ்வுகளும் சமமாக இருப்பது ஆபத்தானது. ஏனெனில் அவை கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். இடைவேளையில் எதையாவது சாப்பிடுவதன் மூலம் இரத்தச் சர்க்கரையின் அளவைக் குறையாமல் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், அதிகரித்த இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது சவாலானது. இக்கட்டுரையில், உயர் இரத்த சர்க்கரையின் போது அதிகப்படியான சர்க்கரையை எவ்வாறு வெளியேற்றுவது என்பதை பற்றி காணலாம்.
இரத்த சர்க்கரை அளவு
உயர் இரத்த சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியா என்பது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கும் ஒரு நிலை. இது பொதுவாக உடலில் இன்சுலின் குறைவாக இருக்கும்போது அல்லது உடலால் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது நிகழ்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு டெசிலிட்டருக்கு 180 முதல் 200 மில்லிகிராம்களுக்கு மேல் செல்கிறது (எம்ஜி/டிஎல்).
சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் என்ன நடக்கும்?
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் வாந்தி, அதிக பசி மற்றும் தாகம், விரைவான இதயத் துடிப்பு, பார்வைக் கோளாறுகள் மற்றும் பிற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இந்த அறிகுறிகள் விரைவான நடவடிக்கை தேவைப்படும் அவசரநிலையை குறிக்கும். இல்லையெனில் நோயாளி கோமா நிலைக்குச் செல்லலாம். அதிர்ஷ்டவசமாக, சில உணவுகள் மற்றும் பானங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.
சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது எப்படி?
உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர எளிதான வழி நிறைய தண்ணீர் குடிப்பதாகும். உங்கள் தினசரி நீர் உட்கொள்ளும் அளவு சாதாரணமாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். உடலில் இருந்து நச்சுகள் மற்றும் இன்சுலினை வெளியேற்ற சிறுநீரகங்களுக்கு தண்ணீர் உதவுகிறது. நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது, உங்கள் சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து இன்சுலினை அகற்றுவதை கடினமாக்குகின்றன. மேலும், இரத்த சர்க்கரை அளவு அதே நிலையில் இருக்கும்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
காலப்போக்கில், உயர் இரத்த சர்க்கரை அளவு சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது மற்றும் சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது அவசியம்.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா என்பதை எப்படி அறிவது?
உயர் இரத்த சர்க்கரையின் பல நுட்பமான அறிகுறிகள் உள்ளன. நீங்கள் அந்த அறிகுறிகளைக் கண்டறிந்து அவற்றை இயல்பு நிலைக்குக் கொண்டுவர சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றில் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- அதிகரித்த தாகம்
- மங்கலான பார்வை
- சோர்வு
- தலைவலி
- குமட்டல் மற்றும் வாந்தி
- மூச்சு திணறல்
- வறண்ட வாய்
- பலவீனமாக உணர்வது
- குழப்பம்
- கோமா
- வயிற்று வலி
அறிகுறிகள்
நீடித்த ஹைப்பர் கிளைசீமியா உங்கள் இரத்தத்திலும் சிறுநீரிலும் (கெட்டோஅசிடோசிஸ்) நச்சு அமிலங்களை (கீட்டோன்கள்) உருவாக்கலாம். கெட்டோஅசிடோசிஸின் அறிகுறிகள் பின்வருமாறு:
எச்சரிக்கை
நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஹைப்பர் கிளைசீமியா என்பது பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பார்க்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரு சிறிய ஸ்பைக்கை சரியான நேரத்தில் அடையாளம் காணப்பட்டால் எளிதாக நிர்வகிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், ஏதேனும் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரிபார்க்கவும்.
செய்ய வேண்டியது
'தான் ஒரு நீரிழிவு நோயாளி' எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும். 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.