Just In
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் முக்கிய வேலைகளில் அலட்சியம் காட்டுவதைத் தவிர்க்கவும்....
- 16 hrs ago
சுவையான... மீல் மேக்கர் கட்லெட்
- 16 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் தெரிந்தால்... அது ஆபத்தான இந்த நோயோட அறிகுறியாம்... ஜாக்கிரதை...!
- 17 hrs ago
பப்பாளியை இந்த பொருளுடன் சேர்த்து சாப்பிடும்போது அது விஷமாக மாற வாய்ப்பிருக்காம்... ஜாக்கிரதை!
Don't Miss
- News
குற்றால சீசனுக்கு செல்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..மதுரை- செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கம்
- Sports
பட்டையை கிளப்பிய நியூசிலாந்து.. தனி ஒருவனாக போராடிய பாரிஸ்டோ.. ரோலர் கோஸ்டர் போல் மாறும் ஆட்டம்
- Movies
கேரளாவில் மற்ற ஹீரோக்களை ஓரம்கட்டிய விக்ரம் படம்.. விநியோகஸ்தர் ஷிபு தமீன்ஸ் பாராட்டு!
- Technology
பெற்றோர் போனில் ஆபாச தகவல்.. வீட்டிற்குள் 'கேமரா' வைத்து தொடர்ந்து மிரட்டல்.. 13 வயது மகன் தான் காரணமா?
- Finance
இனி சமையல் செய்ய கேஸ் சிலிண்டர் தேவையில்லை: ஐ.ஓ.சி அறிமுகப்படுத்தும் சூரிய அடுப்பு!
- Automobiles
விலை கம்மியா கிடைக்குதுனு சொகுசு கார்களை செகண்ட் ஹேண்டில் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இத படிச்சுட்டு போங்க!
- Travel
மன்றோ தீவு ஏன் சமீபகாலத்தில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சர்க்கரை நோயாளிகளே! உங்க உயிருக்கு ஆபத்தான அதிகளவு சர்க்கரையை உடலிலிருந்து எப்படி வெளியேற்றலாம்?
இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் நாட்பட்ட நோயான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறார்கள். 30 வயதை கடந்தவுடன் சர்க்கரை பெரும்பாலான மக்களை பாதிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள், பரம்பரை வழியாக ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வு மிகவும் இயற்கையானது. சில நேரங்களில் அது மிகக் குறைவாகவும், மற்ற நேரங்களில் எந்த எச்சரிக்கை அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம்.
நீரிழிவு நோயாளிக்கு இரண்டு நிகழ்வுகளும் சமமாக இருப்பது ஆபத்தானது. ஏனெனில் அவை கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். இடைவேளையில் எதையாவது சாப்பிடுவதன் மூலம் இரத்தச் சர்க்கரையின் அளவைக் குறையாமல் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், அதிகரித்த இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது சவாலானது. இக்கட்டுரையில், உயர் இரத்த சர்க்கரையின் போது அதிகப்படியான சர்க்கரையை எவ்வாறு வெளியேற்றுவது என்பதை பற்றி காணலாம்.

இரத்த சர்க்கரை அளவு
உயர் இரத்த சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியா என்பது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கும் ஒரு நிலை. இது பொதுவாக உடலில் இன்சுலின் குறைவாக இருக்கும்போது அல்லது உடலால் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது நிகழ்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு டெசிலிட்டருக்கு 180 முதல் 200 மில்லிகிராம்களுக்கு மேல் செல்கிறது (எம்ஜி/டிஎல்).

சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் என்ன நடக்கும்?
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் வாந்தி, அதிக பசி மற்றும் தாகம், விரைவான இதயத் துடிப்பு, பார்வைக் கோளாறுகள் மற்றும் பிற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இந்த அறிகுறிகள் விரைவான நடவடிக்கை தேவைப்படும் அவசரநிலையை குறிக்கும். இல்லையெனில் நோயாளி கோமா நிலைக்குச் செல்லலாம். அதிர்ஷ்டவசமாக, சில உணவுகள் மற்றும் பானங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.

சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது எப்படி?
உங்கள் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர எளிதான வழி நிறைய தண்ணீர் குடிப்பதாகும். உங்கள் தினசரி நீர் உட்கொள்ளும் அளவு சாதாரணமாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். உடலில் இருந்து நச்சுகள் மற்றும் இன்சுலினை வெளியேற்ற சிறுநீரகங்களுக்கு தண்ணீர் உதவுகிறது. நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது, உங்கள் சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து இன்சுலினை அகற்றுவதை கடினமாக்குகின்றன. மேலும், இரத்த சர்க்கரை அளவு அதே நிலையில் இருக்கும்.

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
காலப்போக்கில், உயர் இரத்த சர்க்கரை அளவு சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது மற்றும் சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது அவசியம்.

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா என்பதை எப்படி அறிவது?
உயர் இரத்த சர்க்கரையின் பல நுட்பமான அறிகுறிகள் உள்ளன. நீங்கள் அந்த அறிகுறிகளைக் கண்டறிந்து அவற்றை இயல்பு நிலைக்குக் கொண்டுவர சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றில் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- அதிகரித்த தாகம்
- மங்கலான பார்வை
- சோர்வு
- தலைவலி
- குமட்டல் மற்றும் வாந்தி
- மூச்சு திணறல்
- வறண்ட வாய்
- பலவீனமாக உணர்வது
- குழப்பம்
- கோமா
- வயிற்று வலி

அறிகுறிகள்
நீடித்த ஹைப்பர் கிளைசீமியா உங்கள் இரத்தத்திலும் சிறுநீரிலும் (கெட்டோஅசிடோசிஸ்) நச்சு அமிலங்களை (கீட்டோன்கள்) உருவாக்கலாம். கெட்டோஅசிடோசிஸின் அறிகுறிகள் பின்வருமாறு:

எச்சரிக்கை
நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஹைப்பர் கிளைசீமியா என்பது பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பார்க்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரு சிறிய ஸ்பைக்கை சரியான நேரத்தில் அடையாளம் காணப்பட்டால் எளிதாக நிர்வகிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், ஏதேனும் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க, சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை தவறாமல் சரிபார்க்கவும்.

செய்ய வேண்டியது
'தான் ஒரு நீரிழிவு நோயாளி' எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும். 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.