Latest Updates
-
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம்
கருவளையம் சீக்கிரம் மறைய என்ன செய்யலாம்?
கரு வளையம் கண்களின் அழகை கெடுக்கும். அதோடு அது ஆரோக்கியமற்ற உடல் நிலையையும் காட்டுகிறது. கண்களில் உண்டாகும் கருவளையத்தை போக்கச் செய்யும் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கருவளையம் கண்களை மட்டுமல்லாது முக அழகையும் கெடுக்கும். வயதான தோற்றத்தை தரும். கருவளையத்திற்கு மிக முக்கிய காரணம் தூக்கமின்மையே.
அதன் பின் அதிக நேரம் மொபைல், டிவி பார்ப்பது. கவலைகள், மாத்திரகள் என பலவிதமன காரணங்களாலும் கருவளையம் உண்டாகிறது.
எத்தனையோ குறிப்புகளை பயன்படுத்தியிருப்பீர்கள். இருப்பினும் சரியாகவில்லையா. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் விரைவில் பலன் தரும். செய்து பாருங்கள்.

அரிசி மற்றும் கருஞ்சீரகம் :
அரிசி, கருஞ்சீரகம் தலா 2 ஸ்பூன் எடுத்து அரை கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பின் அந்த நீரை ஆற வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த நீரில் ரோஸ் வாட்டரை கலந்து இந்த நீரை பஞ்சினால் தொட்டு கண்கலில் வைக்கவும். தினமும் இரவில் செய்து வந்தால் வேகமாக கருவளையம் மறையும்.

சாமந்தி இதழ் :
நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கொதிக்க வையுன்ங்கள் பின் அடுப்பை அணைத்து அதில் சாமந்தி இதழ்களை போட்டு மூடி வைக்கவும் அதனை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது பஞ்சினால் கண்கலீல் ஒற்றிக் கொள்ளுங்கள். உடனடியாக பலன் தரும்.

தாமரை பூ :
தாமரை பூ இதழை தண்ணி விடாமல் அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் மற்றும் தேன் 1 ஸ்பூன் கலந்து 7 மணி நேரம் அறை வெப்பத்திலேயே வைத்திருங்கள். பின்னர் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து, இரவுகளில் இந்த கலவையை கண்களை சுற்றியும் போடுங்கள்.

முள்ளங்கி பீட்ரூட் :
முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் கேரட் சாறை சம அளவு எடுத்து அதனை கண்களை சுற்றியும் தடவுங்கள். தினமும் செய்தால் ஒரே வாரத்தில் பலனை காணலாம்.



Click it and Unblock the Notifications