Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
அனைத்து விதமான தழும்புகளையும் விரைவில் போக்கும் அற்புத எண்ணெய்!
விளக்கெண்ணையை கொண்டு முகத்தில் உள்ள தழும்புகளை நீக்குவது எப்படி?
தழும்புகள் பெண்களின் அழகை குறைத்து காட்டும். இதனாலேயே பெண்கள் தழும்புகளை வெறுக்கின்றனர். பிரசவத்திற்கு பின்னர், உடல் எடை குறைவதால் உண்டாகும் தழும்புகள், அம்மை தழும்புகள், பருக்கள் உண்டான இடத்தில் வரும் தழும்புகள் என அனைத்து தழும்புகளும் பிரச்சனை தரகூடியது தான்.
அதுமட்டுமில்லாமல், நாமாகவே சில தழும்புகளை ஏற்படுத்திக்கொள்கிறோம். புடவை, பிளவுஸ் போன்றவற்றை அணியும் இடத்தில் சில தழும்புகள் காணப்படுகின்றன. இதற்காக மருத்துவரிடம் சென்றாலும், அதிக செலவாகும். ஆனால் இந்த தழும்பு பிரச்சனைக்கு இயற்கையாக ஒரு சிறந்த தீர்வு உள்ளது.

1. விளக்கெண்ணை பயன்கள்:
1. விளக்கெண்ணெயில் இயற்கையான ஃபேட்டி ஆசிட் மற்றும் மினரல்கள் அதிகளவில் அடங்கியுள்ளன. இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
2. முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்குகிறது.
3. தழும்புகளை போக்குகிறது.
4. முகத்தில் உள்ள அனைத்து மாசு, மருக்களையும் நீக்கி க்ளியர் ஸ்கின்னை தருகிறது.
5. இதில் ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளதால், சரும தொற்றுகளை போக்குகிறது.

2. சூடான எண்ணெய்
தேவையான அளவு விளக்கெண்ணையை 40 நிமிடங்களுக்கு குறைவாக காய்ச்சிக்கொள்ள வேண்டும். இதனை ஆற வைத்து பின்னர், மேலிருந்து கிழாகவும், வட்ட வடிவாகவும் மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் சூடான நீரில் நனைய வைத்த துண்டினால் முகத்தை முடி 20 நிமிடங்கள் அமர வேண்டும். இந்த முறையை காலை, இரவு என தினமும் செய்து வந்தால் நல்ல பலனை கண்கூட காணலாம்.

3. விளக்கெண்ணை மற்றும் கற்றாழை
கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொண்டு, அதில் 6 ஸ்பூன் விளக்கெண்ணையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து, அதனை தழும்புகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 30 - 45 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.
இந்த முறையை தினமும் இரவு செய்து வரலாம். இரவு முழுவதும் விட்டுவிட்டு கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

4. டீ ட்ரீ ஆயில் மற்றும் விளக்கெண்னை
டீ ட்ரீ ஆயில் மற்றும் விளக்கெண்ணையை சம அளவு கலந்து கொள்ள வேண்டும். முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின்னர் இதனை அழுத்தாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை இரவு முழுவதும் கூட விட்டுவிடலாம். இது நல்ல பலனை தரும்.

5. பீட்ரூட் மற்றும் விளக்கெண்ணை
பீட்ரூட் சாறை விளக்கெண்ணையுடன் கலந்து முகத்திற்கு தேய்த்து 20 நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் விரைவில் தழும்புகள் மறையும்.

குறிப்பு :
1. சுத்தமான கெமிக்கல்கள் இல்லாத விளக்கெண்ணையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2. புண்கள் மற்றும் தோலின் திறந்த பகுதிகளின் மீது போட கூடாது.
3. எரிச்சல் மற்றும் தோல் சிவந்தால், உடனடியாக குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
4. கண்டிப்பாக வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மேலே குறிப்பிட்டுள்ள கால இடைவெளிப்படி இந்த முறையை செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications