Just In
- 27 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 9 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 9 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது தெரியுமா?
முகத்தை சுத்தம் செய்ய பலரும் பயன்படுத்தும் ஓர் பொதுவான பொருள் தான் சோப்பு. ஆனால் இந்த சோப்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இதற்கு சோப்பில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் சரும செல்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும்.
மேலும் அனைவருக்குமே அனைத்து சோப்புகளும் பொருந்தும் என்று கூற முடியாது. எனவே ஒவ்வொருவரும் சரியான சோப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி அவற்றை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அப்படியெனில் முகத்தை எப்படி சுத்தம் செய்வது என்று கேட்கலாம். முகத்தை சுத்தம் செய்ய சோப்பு மட்டும் தான் உதவும் என்றில்லை, சில இயற்கை பொருட்களும், ஏன் சரும வகைக்கேற்ப விற்கப்படும் மைல்டு ஃபேஸ் வாஷ்களையும் பயன்படுத்தலாம்.
இங்கு ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது என்பதற்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சரும செல்கள் பாதிப்பு
சோப்புக்களில் உள்ள மோசமான கெமிக்கல்கள், சரும செல்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சரும செல்கள் பாதிப்பிற்குள்ளானால், அதனால் முக அழகு பாதிப்பிற்குள்ளாகும். ஆகவே சோப்பை அதிகமாக முகத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்.
சரும வறட்சி
சோப்புக்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள நேச்சுரல் எண்ணெய் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் மிகுந்த வறட்சிக்குள்ளாகும்.
கொழுப்பு அமிலங்கள் நீங்கும்
சோப்புக்கள் சருமத்திற்கு பாதுகாப்பளிக்கும் கொழுப்பு அமிலங்களை முழுமையாக வெளியேற்றி, அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மையைக் குறைத்துவிடும். இதனால் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
முகப்பரு
சோப்புக்கள் சருமத்தில் இருக்கும் கொழுப்பு அமிலங்களை வெளியேற்றி, பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளின் தாக்கத்தை அதிகரித்து, அதன் காரணமாக முகப்பரு அடிக்கடி வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
வைட்டமின்கள் வெளியேறும்
சோப்புக்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் வெளியேற்றப்பட்டு, அதனால் சரும பொலிவும், ஆரோக்கியமும் குறைந்துவிடும்.
pH அளவு பாதிக்கப்படும்
சோப்புக்களில் உள்ள கெமிக்கல்கள், சருமத்தின் ஈரப்பசையைக் குறைப்பதோடு, சருமத்தின் pH அளவை பாதித்து, அதனால் பல பிரச்சனைகள் வர வழிவகுக்கும்.
சருமத்துளைகள் அடைக்கப்படும்
நிறைய சோப்புக்களில் ஃபேட்டி அமிலங்கள் அதிகமாக உள்ளது. இவை சருமத்துளைகளில் தேங்கி அடைப்பை ஏற்படுத்தி, அதனால் முகப்பரு பிரச்சனையை மேன்மேலும் அதிகரிக்கும்.