Just In
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 3 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 4 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மழைக்கால சருமப் பிரச்சனைகளுக்கான 6 சரியான தீர்வுகள்!
மழைக்காலம் என்பது ஒரு இனிமையான காலம், ஒரு குளுமையான காலம் மட்டுமல்ல. இந்த சமயத்தில் தான் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சில பிரச்சனைகளும் ஏற்படும்.
இந்தப் பிரச்சனைகள் எப்போது தோன்றும் என்றே நம்மால் ஊகிக்க முடியாது. மழைக் காலம் வருவதற்கு முன்பே இதுப்போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
மேலும் நம் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், பூஞ்சைத் தொற்றுக்கள் போன்றவையும் அத்தகைய மழைக்காலப் பிரச்சனைகளில் ஒன்று தான். இந்த சருமப் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்பதற்கான சில வழிகளை நாம் பார்க்கலாமா?
முகம் கழுவ வேண்டும்
எந்த வகை சருமமாக இருந்தாலும் சரி. அழுக்கு, கறை எதுவும் அதில் தங்கி விடக் கூடாது. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை முகத்தைக் கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். ஈரத்துணி கொண்டும் முகத்தைத் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தரமான சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.
டோனர் பயன்படுத்த வேண்டும்
மழைக் காலத்தில் அடிக்கடி உலர்ந்து போகும் சருமத்தைக் காக்க டோனரை உபயோகிக்க வேண்டும். ஒரு நாளுக்கு 2 முறை டோனரைத் தடவுவது நலம். அதிலும் ஆல்கஹால் இல்லாத கற்றாழை டோனரைப் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
லோஷன்/க்ரீம் தடவ வேண்டும்
மழைக் காலத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் ஹெவி லோஷன் அல்லது க்ரீம்களைப் பயன்படுத்தக் கூடாது. மிருதுவான மாய்ஸ்சுரைசிங் க்ரீம்களைத் தடவினால் தான் அவை முகத்தில் ஒட்டாமல் இருக்கும்.
ஆவி பிடிக்க வேண்டும்
சருமத்தில் உள்ள தோல்கள் மழைக் காலத்தில் அடைத்துக் கொள்ளும். இந்த அடைப்புகளை நீக்க, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆவி பிடிக்க வேண்டும். இந்த ஆவி சருமத்தில் நன்றாக ஊடுருவி, துளைகளில் அடைத்துள்ள அழுக்குகளை அகற்றும். ஆவி பிடித்து சில நிமிடங்கள் கழித்து, ஐஸ்கட்டிகளை முகத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.
உலர் தோலை உரிக்க வேண்டும்
மழைக் காலங்களில் சில சமயம் தோல்களின் மேல் புறம் உலர்ந்து செதில்களாகத் தங்கியிருக்கும். அதை அவ்வப்போது மெல்லிய துடைப்பான் கொண்டு உரித்து நீக்கிவிட வேண்டும். வாரத்திற்கு 2 முறை இதைச் செய்வது நலம். மாதத்திற்கு 2 முறை இரசாயன க்ளைக்கோலிக் பீல் முறையிலும் தோலை உரிப்பதால் முகம் பளபளப்பாக இருக்கும்.
புதினா/பப்பாளி ஃபேஸியல் செய்ய வேண்டும்
மழைக் காலத்தில் புதினா அல்லது பப்பாளி ஃபேஸியல் செய்வது மிகவும் ஆரோக்கியமானது. புதினா குளுமையானது மட்டுமல்ல, சருமத்தையும் மிருதுவாக்கும். பப்பாளியோ உலர்ந்த தோலை ஈரப்பதமாக்கும்.