Just In
- 8 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 9 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 11 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 12 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வாழ்க்கைத்துணையை பிரிந்தவர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை என்ன தெரியுமா?
குழந்தைகளை வழிநடத்தும் மிக முக்கிய பொறுப்பு அவர்களின் பெற்றோருக்குத் தான் இருக்கிறது.ஆனால் தன் இணையை பிரிந்து தனியாக வாழ்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்.
நம் வாழ்க்கையில் இடையில் சேரும் உறவு அடுத்து வரப்போகிற நாட்கள் முழுமைக்கும் உடனிருக்கும் என்று சொல்ல முடியாது. பல்வேறு காரணங்களால் இணையை பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தனியாக இந்த வாழ்க்கையை சந்திக்கும் அதே வேலையில் உங்களின் குழந்தையையும் தனியொருவராக பராமரிக்க வேண்டும். அப்படி சிங்கிள் பேரண்ட்டாக இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் சில..
நேரம் :
வீடு,வேலை என இரண்டையும் சமன் செய்ய பாடுபட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். குழந்தைகளுக்காக,தங்களுக்காக என நேரம் செலவிடுவதே அபூர்வமாக இருக்கும். தன்னுடைய வேலை குறித்தெல்லாம் சிந்திக்கவோ அல்லது நேரம் செலவிடவோ முடியாது.
பணம் :
மிகப்பெரிய பிரச்சனை இது. பணப்பிரச்சனை, தனியாளாக பணத் தேவைகளை சமாளிக்க வேண்டும். மருத்துவம்,கல்வி,வீட்டுச் செலவுகள் என அவர்களுக்கு தேவைப்படும் பணத்திற்காக உழைக்க வேண்டியிருக்கும்.
குழந்தைகள் :
வேலைக்குச் சென்றுவிட்டு வந்தபிறகு குழந்தைகளையும் வாரி அணைத்து கொஞ்சுவதற்கு பலருக்கும் நேரமிருப்பதில்லை . பிறரை நம்பி நம் குழந்தையை விட்டுச் செல்வதும் கடினம் அதனால் வரும் மனரீதியான பதட்டங்களை தினந்தோறும் சந்திக்க வேண்டி வரும்.
பழக்க வழக்கம் :
குழந்தைகளின் நடத்தையில்,அவர்களது பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். எப்போதுமே தனிமையில் இருக்க நேர்வதால் மன அழுத்தம் உண்டாவது, அடிக்கடி கோபப்படுவது, படிப்பில் நாட்டமில்லாமல் இருப்பது போன்ற சிக்கல்கள் ஏற்படும். ஆண்குழந்தைகள் என்றால் டாமினேட்டிங் கேரக்டர்களாகவும், பெண் குழந்தைகள் என்றால் பயந்த சுபாவம் உள்ளவர்களாகவும் வளர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.
தனக்கான நேரம் :
உங்களுக்கென்ற ஒர் தனிமை கிடைக்காது. உங்கள் உடலை பராமரிக்க, உங்கள் பிடித்த விஷயங்களை செய்வதற்கு, உங்களுடைய நண்பர்களுடன் வெளியில் செல்வதற்கு என எதுவுமே முடியாது. எப்போதும் பரபரப்பாக எச்சரிக்கை உணர்வுடன் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.
குற்றவுணர்வு :
சிங்கிள் பேரண்டிங் பொறுப்பை ஏற்றிருப்பவர்களுக்கு, பிறரிடம் உதவி கேட்பதில் தயக்கம் இருக்கும். இந்த உதவி வாங்குவதால் அவருக்கு கடமைப்பட்டவர்களாகிவிடுவோமா அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்படுவோமா? அல்லது இதனை கேட்பதால் அவர்களுக்கு நாம் பாரமாக இருப்போமா என்ற குற்றவுணர்வு இருக்கும்.