Just In
- 35 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 3 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 7 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
Don't Miss
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- News மாலை 71%.. இரவு 12 மணிக்கு 64% ! ஏறி இறங்கிய வாக்குச் சதவீதம்! நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Automobiles மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
தெரிந்தோ, தெரியாமலோ ஆண்கள் செய்யும் இந்த 4 தவறுகள் பெண்கள் உச்சமடைவதை பாதிக்கின்றன!
காமசூத்ராவில் இருந்து பார்ன் வரை அனைத்தையும் கரைத்து குடித்துவிடும் சில ஆண் மகன்கள் அவர்களது துணையிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தும் போது தான் உறவில் சில சிக்கல்கள் எட்டிப்பார்க்கும்.
உடலுறவையும் கூட நமது முன்னோர்கள் ஒரு கலையாக தான் கருதி எழுத்துக்களாகவும், சிற்பங்களாகவும் பல வடிவில் வடித்து வைத்து சென்றுள்ளனர். இந்தியாவில் பல கோவில் கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களில் நாம் இதை காண முடியும்.
காமசூத்ராவில் இருந்து பார்ன் வரை அனைத்தையும் கரைத்து குடித்துவிடும் சில ஆண் மகன்கள் அவர்களது துணையிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தும் போது தான் உறவில் சில சிக்கல்கள் எட்டிப்பார்க்கும்.
இச்சை உணர்வு என்பது மிருகங்களிலிருந்து, மனிதர்கள் வரை அனைவர் மத்தியிலும் இயல்பு. ஆனால், மனது என்று ஒன்றிருக்கிறதே அதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டாமா?
உடலுறவில் ஈடுபடும் போது அழுவது ஏன்? 6 பெண்கள் பகிர்ந்துக் கொண்ட உண்மைகள்!
தெரிந்தோ, தெரியாமலோ ஆண்கள் செய்யும் இந்த நான்கு தவறுகள் பெண்கள் உச்சமடையும் உணர்வை வலுவாக பாதிக்கின்றன....
உடலுறவு கொள்ளும் நிலை!
காமசூத்திரம் எழுதியதே இந்தியர்கள் தான். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்பது தவறு. உங்கள் துணையின் நிலையை சற்று யோசித்து, அவரும் ஓர் ஜீவன் என்ற மதிப்பு, மரியாதை அளித்து நடந்துக் கொள்ள வேண்டும்.
வற்புறுத்த வேண்டாம்!
சில ஆண்கள் வற்புறுத்திக் கூட அவர்களுக்கு பிடித்த மாதிரி உடலுறவில் ஈடுபடுவது உண்டு. இதனால், அவர்கள் உச்சம் அடைவது தடைப்படுவதின்றி, பிறப்புறுப்பும் வலிமிகுந்ததாக உணர வாய்ப்புகள் உண்டு.
யோசிப்பது!
உடலுறவில் ஈடுபடும் போது, இடையே வேறு விஷயங்கள் பற்றி பேசுவது, யோசிப்பது. பல நேரங்களில் ஆண்கள் இந்த தவறை செய்வதுண்டு. உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சம்மந்தமே இல்லாத ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசுவார்கள். இது கண்டிப்பாக துணை உச்சம் அடைவதை தடுக்கும்.
வேகமாக செயல்படுதல்!
வேகமாக செயல்படுதல், அல்லது வேகமாக செயல்படும் போது திடீரென உடனடியாக உறவில் ஈடுபடுதை நிறுத்துவது! உங்கள் துணையும் ஓர் உயிர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி வேகமாக உடலுறவில் ஈடுபடுவது அவருக்கு மிகுதியான வலியை தரும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
திடீரென நிறுத்துவது!
மேலும், உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென நிறுத்துவது தான் அவர்களது உணர்ச்சி மற்றும் உச்சம் காணுதலை தடைப்பட்டு போக முக்கிய காரணமாக இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேறு வேலை!
உடலுறவில் ஈடுபடும் போது அல்லது ஈடுபட்டு முடித்த பின்னர் உடனே வேறு வேலை / விஷயங்களில் (டிவி, மொபைல்) கவனம் செலுத்த ஆரம்பிப்பது. ஆண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது தான் உணர்ச்சி அதிகமாக வெளிப்படும்.
உணர்ச்சி மேலோங்குதல்!
ஆனால், பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் உணர்ச்சி மேலோங்க ஆரம்பிக்கும். எனவே, உறவில் ஈடுபட்ட பிறகு உங்கள் துணையுடன் சிறிது நேரம் பேசியோ, கொஞ்சியோ நேரம் செலவழிக்க மறக்க வேண்டாம்.