Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஹரியாலி சமோசா
மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிட பல ரெசிபிக்கள் உள்ளன. அதில் ஒன்று தான் சமோசா. சமோசாவை ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதனை காய்கறிகள் கொண்டு செய்வதால் தான். மேலும் சமோசாவானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும்.
அந்த வகையில் இப்போது ஹரியாலி சமோசாவின் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதனை டீ அல்லது காபி குடிக்கும் போது செய்மு சாப்பிட்டு, மாலை வேளையை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்து மசித்தது)
பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கி, வேக வைத்தது)
அவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் சேர்த்து தாளித்து, பச்சை பட்டாணி மற்றும் பீன்ஸ் சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் அவல் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் சிறிது மைதா மாவை போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் கலந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சிறு சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒவ்வொன்றையும் கூம்பு வடிவத்தில் செய்து, அதனுள் பச்சை பட்டாணி கலவையை வைத்து, முனையை மைதா பேஸ்ட் உதவியால் மூடிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான ஹரியாலி சமோசா ரெடி!!! இதனை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











