Latest Updates
-
எடைக்குறைப்பு மருந்தை உட்கொள்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் - புதிய ஆய்வு சொல்வது என்ன? -
IPL 2026: சிஎஸ்கே வீரர்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய சென்னையின் பிரபல தெருவோர உணவுகள்! -
விஜய்க்கு எதிராக போட்டியிடப்போகும் 252 தேர்தல்களில் தோற்ற ' தேர்தல் மன்னன்' யார் தெரியுமா? -
மட்டன் பஞ்சு போல சாப்ட்டா இருக்கணுமா? அப்ப சமைக்கும் போது இந்த 2 பொருட்களை சேத்துக்கோங்க போதும்! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: ஏப்ரல் 16-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்! -
கொங்குநாடு ஸ்பெஷல் தட்டைப்பயறு சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க -
வருடத்திற்கு 2 ரயில்கள் மட்டுமே வரும் இந்தியாவின் மிகவும் வினோதமான ரயில் நிலையம் எது தெரியுமா? -
40 வயதிற்கு மேல் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டிய சைவ மற்றும் அசைவ உணவுகள்! - பட்டியலிடும் டாக்டர்! -
இந்த 5 ராசிக்காரங்க யார் பொய் சொன்னாலும் ஈஸியா கண்டுபிடிக்கும் அசாத்திய புத்திசாலிகளாம்
தஞ்சாவூர் ரோசாப்பூ கார சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
Thanjavur Rosapoo Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து அலுத்துவிட்டதா? சமைக்கும் உங்களுக்கே அலுத்துப் போகும் போது, சாப்பிடுபவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். எனவே உங்கள் வீட்டில் இருப்போருக்கு வாய்க்கு ருசியாக ஒரு அட்டகாசமான மற்றும் சற்று காரமான, கண்ணைக் கவரும் சட்னியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் கண்ணைக் கவரும் நிறத்தில் அட்டகாமான சுவையில் தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ மிளகாய் சட்னியை செய்யுங்கள். இந்த ரோசாப்பூ சட்னி என்பது அதன் சுவையால் அல்ல மாறாக அதன் நிறத்தால் ரோசாப்பூ சட்னி என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்னி சுவையாக இருப்பதுடன் 4 நாட்களுக்கு மேல் கெட்டுப்போகாமல் இருக்கும்.

உங்களுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஞ்சாவூர் ஸ்பெஷல் ரோசாப்பூ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 10
- வர மிளகாய் - 5
- காஷ்மீரி மிளகாய் - 4
- புளி - சிறிதளவு
- சிறிய தக்காளி - 1
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும், பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் வர மிளகாய் மற்றும் காஷ்மீர் மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்கிய பின்னரே மிளகாயைச் சேர்க்க வேண்டும், அப்போதுதா இந்த சட்னியின் கவர்ச்சிகரமான சிவப்பு நிறம் கிடைக்கும்.
- பின்னர் தக்காளி மற்றும் புளியைச் சேர்த்து, தக்காளி குழைந்துபோகும் வரை நன்றாக வதக்கவும்.
- பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். நன்கு ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பைப் பொரியவிட்டு, கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
- சட்னி நன்கு சுருங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்தால் சூப்பரான தஞ்சாவூர் ரோசாப்பூ சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











