Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
ரம்ஜான் ஸ்பெஷல்: பட்டர் கீமா மசாலா
பலருக்கும் கீமாவை எப்படி சமைப்பதென்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை கீமா கொண்டு செய்யப்படும் பட்டர் கீமா மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. மேலும் இந்த கீமா மசாலா சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும். ரசம் சாதத்திற்கும் இது சூப்பராக இருக்கும்.
அதிலும் ரம்ஜான் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ரமலான் மாத நோன்பு இருப்போர் மாலை வேளையில் செய்து சாப்பிடும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். சரி, இப்போது பட்டர் கீமா மசாலாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கீமா - 1 கிலோ (நன்கு நீரில் அலசிக் கொள்ளவும்)
வெண்ணெய் - 1 கப்
தயிர் - 500 கிராம்
இஞ்சி பேஸ்ட் - 3 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கிராம்பு - 5-7
பட்டை - 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் - 2
பச்சை ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 6-7
பிரியாணி இலை - 2
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீமாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
பின் அதில் வெண்ணெயை சேர்த்து நன்கு பிரட்டி, மற்றொரு அடுப்பில் உள்ள வாணலியில் போட்டு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கீமாவை வேக வைக்க வேண்டும்.
அடுத்து அதில் தயிர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து கீமா தயிரை முற்றிலும் உறிஞ்சியதும், அடுப்பில் இருந்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பட்டர் கீமா மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications