Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பப்பாளி காயை வைத்து இந்த பக்குவத்தில் கூட்டு செஞ்சு பாருங்க... டேஸ்ட் சும்மா அட்டகாசமா இருக்கும்...!
Green Pappaya Kootu Recipe in Tamil: பொதுவாக சாம்பார், புளிக்குழம்பு என எதுவாக இருந்தாலும் அதற்கு ஏதாவது ஒரு காய்கறியை வைத்து பொரியல் செய்து விடுவோம். அதேசமயம் என்ன காய்கறியை பொரியல் செய்வது என்பது அடுத்த கவலையாகும். சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு பொதுவாக பொரியல்தான் சைடிஷாக செய்வார்கள், ஆனால் பொரியல் போலவே சாதத்துக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும் மற்றொரு ஐட்டம் என்றால் அது கூட்டுதான்.
பொதுவாக கூட்டு என்பது பூசணிக்காய், சுரைக்காய் மற்றும் புடலங்காயை வைத்துதான் செய்வார்கள், ஆனால் உண்மையில் சில வித்தியாசமான காய்கறிகளை வைத்து கூட்டு செய்யலாம். அப்படி ஒரு தனித்துவமான மற்றும் வித்தியாசமான காய்தான் பப்பாளி காய். பழுக்காத பிஞ்சு பப்பாளியை வைத்து செய்யப்படும் இந்த கூட்டு மதிய உணவுக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்த பதவில் பப்பாளி காயை வைத்து எப்படி கூட்டு செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- அரை பழுக்காத பப்பாளி
- அரை கப் பாசிப்பருப்பு
- 1 ஸ்பூன் மஞ்சள்
- உப்பு தேவையான அளவு
மசாலா அரைக்க:
- அரை கப் துருவிய தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- அரை ஸ்பூன் அரிசி மாவு
- அரை ஸ்பூன் சீரகம்
- 2 சின்ன வெங்காயம்
தாளிக்க:
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- அரை ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- பப்பாளியின் தோலை பச்சை நிறம் இல்லாமல் நன்றாக சீவி வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி ஓரமாக வைத்து விடவும்.
- ஒரு சிறிய பிரஷர் குக்கரில், பாசிப்பருப்பைச் சேர்த்து, அதன் மேல் நறுக்கிய பப்பாளி, உப்பு, மஞ்சள் மற்றும் காய்கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
- விசில் போட்டு மூடி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- அதே நேரத்தில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் அரிசி மாவை தண்ணீர் சேர்க்காமல் அல்லது குறைவான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- பின்னர் சீரகம் மற்றும் தோல் நீக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- வேகவைத்த பப்பாளி கலவை மீது தேங்காய் விழுதை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- இறுதியாக ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதை கூட்டின் மீது ஊற்றி நன்கு கிளறவும்.
- சூப்பரான பப்பாளி காய் கூட்டு ரெடி. இது சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











