Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
ஈஸியான.. கறிவேப்பிலை சட்னி
உங்களுக்கு கறிவேப்பிலையை பார்த்தால் சாப்பிடத் தோன்றவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு சட்னி தயாரித்து சாப்பிடுங்கள். இந்த கறிவேப்பிலை சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
பலர் சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் கறிவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலை சாப்பிட்டால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து மற்றும் பிற சத்துக்கள் கிடைக்கும். உங்களுக்கு கறிவேப்பிலையை பார்த்தால் சாப்பிடத் தோன்றவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு சட்னி தயாரித்து சாப்பிடுங்கள். இந்த கறிவேப்பிலை சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு கறிவேப்பிலை சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* கறிவேப்பிலை - 1/2 கப்
* தேங்காய் - 1/4 கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 சிறியது
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிறிய சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அத்துடன் புளியை சேர்த்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், வறுத்த பருப்புகள், புளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்தால், கறிவேப்பிலை சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











