Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
செட்டிநாடு வரமிளகாய் சட்னி
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் உங்களுக்கு காரசாரமான சைடு டிஷ் செய்ய வேண்டுமானால் செட்டிநாடு வரமிளகாய் சட்னியை செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் உங்களுக்கு காரசாரமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் செட்டிநாடு வரமிளகாய் சட்னியை செய்யுங்கள். இது அளவான காரத்துடன் இருப்பதோடு, இட்லி, தோசைக்கு அற்புதமாகவும் இருக்கும்.

கீழே செட்டிநாடு வரமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 1/2 கப்
* தக்காளி - 1
* வரமிளகாய் - 2
* காஷ்மீரி வர மிளகாய் - 2
* புளி - 1 டீஸ்பூன்
* கல் உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், தக்காளி, வர மிளகாய், காஷ்மீரி வர மிளகாய், புளி மற்றும் கல் உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள வெங்காய மிளகாய் பேஸ்ட் சேர்த்து கிளறி, பத்து நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, பச்சை வாசனை போயுள்ளதா என்பதைப் பார்த்து, பச்சை வாசனை இருந்தால், மீண்டும் 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
* இப்போது சுவையான செட்டிநாடு வரமிளகாய் சட்னி தயார்.
* இந்த கார சட்னி இட்லி, தோசை, பனியாரம் என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
குறிப்பு:
* உங்களிடம் காஷ்மீரி வரமிளகாய் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் இந்த வகை மிளகாய் சட்னிக்கு நல்ல நிறத்தை அளிப்பதோடு, சட்னியின் காரத்தையும் குறைக்கும்.
* இந்த சட்னிக்கு நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது தான் சட்னிக்கு நல்ல ஃப்ளேவரைத் தரும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











