இட்லிக்கு.. இந்த செட்டிநாடு கார சட்னியை செய்யுங்க.. இன்னும் 2 இட்லி எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவாங்க..

Posted By:

Chettinad Kara Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னியை தான் சைடு டிஷ்ஷாக அதிகம் செய்வீர்களா? குறிப்பாக சட்னி என்றால் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை அதிகம் செய்வீர்களா?

உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார சட்னி பிடிக்குமானால், எப்போதும் ஒரே சுவையில் கார சட்னியை செய்யாமல், ஒருமுறை செட்டிநாடு கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைல் சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

Chettinad Kara Chutney How To Make a Chettinad Milagai Kara Chutney

உங்களுக்கு செட்டிநாடு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* பூண்டு - 7-8
* சின்ன வெங்காயம் - 1 கப்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பூண்டு பற்களை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் 1 கப் சின்ன வெங்காயத்தை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் வரமிளகாயையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஜாரில் அதிகமாக நீரை ஊற்றாமல் மிதமான அளவில் நீரை ஊற்றி அலசி, சட்னியில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான செட்டிநாடு கார சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, January 19, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion