Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பாலூட்டும் தாய்மார்கள் ஆரோக்கியமா இருக்க... இந்த உணவுகள கட்டாயம் சாப்பிடணுமாம் தெரியுமா?
Mothers Day 2023 In Tamil: புதிய தாய்மார்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தவுடன் அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள். பாலூட்டும் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைக் கடைப்பிடிப்பது மிக முக்கியம்.
பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலங்களிலும், பிரசவத்திற்கு பிறகும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிக அவசியம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது முதல் வைட்டமின்களை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது வரை சரியாக செய்ய வேண்டும்.

ஓர் குழந்தையை பெற்றெடுத்த பிறகு, பெண்களின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இந்நிலையில், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் அனைவரும் அறிந்தபடி, தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நிறைய நன்மைகளை அளிக்கும் மற்றும் அவர்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் போது எந்த தொற்று அல்லது நோயையும் பிடிப்பதைத் தடுக்கிறது.
தாய்ப்பால் கொடுப்பதற்குத் தேவையான ஆற்றலை அடைவதற்கும், பால் அளிப்பை அதிகரிப்பதற்கும் முக்கியமானது, சமச்சீரான உணவு. ஒவ்வொரு பாலூட்டும் தாய்மார்களும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும், அது அவர்களுக்கும் குழந்தைக்கும் பயனளிக்கும். பாலூட்டும் தாய்மார்கள் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளால் தங்கள் உடலை எரிபொருளாகக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தை வலுவாகவும், புத்திசாலியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
சர்வதேச அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் மே14ஆம் தேதி அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த அன்னையர் தினத்தில், புதிய தாய்மார்கள் தாங்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன சாப்பிட வேண்டும் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
பப்பாளி
பப்பாளியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ள வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், இது நிச்சயமாக ஒரு 'சூப்பர்ஃபுட்' ஆகும். புதிய தாய்மார்களின் தாய்ப்பாலின் அளவையும் தரத்தையும் அதிகரிக்க உதவும். பப்பாளியின் வழக்கமான உட்கொள்ளல் உண்மையில் செரிமான அமைப்பிலும் அதிசயங்களைச் செய்யும். பப்பாளி செல்லுலைட் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. எனவே, புதிய தாய்மார்கள் அனைவரும் பப்பாளியை சாப்பிடலாம்.
கோதுமை ரவை
கோதுமையில் தயாரிக்கப்படும் கோதுமை ரவை பலவிதமான ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. இது ஜீரணிக்க மிகவும் எளிதானது. அதனால், மிகவும் பிரபலமான உணவாக உள்ளது. கோதுமை ரவையில் பல ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால், இது புதிய தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், டாலியா ஆற்றல் மட்டங்களுக்கு சிறந்த உணவுகளில் ஒன்றாக நம்பப்படுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழங்கள் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பி வைட்டமின்கள் மற்றும் பெக்டின் நிறைந்தவை. இந்த சூப்பர் பழம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது ஒரு ப்ரீபயாடிக் என்பதால், பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவு வழங்க உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும், பாலூட்டும் தாய்மார்களின் ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.
அமராந்த்
பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு கடுமையான முடி உதிர்தலுடன் போராடுகிறார்கள். எனவே, நீங்கள் புதிய தாயாக இருந்தால், பிரசவத்திற்குப் பிறகு அதிகளவு முடி உதிர்ந்திருந்தால், அமராந்தைச் சாப்பிட வேண்டும். ஏனெனில், இது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். உண்மையில், இதில் இரும்பு, மாங்கனீஸ், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. வலிமையை மீண்டும் பெற உதவும் அமராந்த், ராஜ்கிரா என்றும் அழைக்கப்படுகிறது.
ஊறவைத்த நட்ஸ்கள்
இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் மற்றும் வைட்டமின் கே மற்றும் பி வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால் நட்ஸ்கள் ஊட்டச்சத்துக்கான மற்றொரு சக்தியாகும். அவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தில் நிறைந்துள்ளன. எனவே, புதிய தாய்மார்கள் மறக்காமல் நட்ஸ் சாப்பிட வேண்டும். ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
பால்
தாய்ப்பால் கொடுக்கும் போது பால் குடிப்பது ஒரு சிறந்த தேர்வாகும். இருப்பினும், புதியா தாய்மார்கள் குழந்தைக்கு ஒவ்வாமை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது. இது தினசரி தேவைகளில் 50 சதவீத வைட்டமின் பி12, கால்சியம் தேவையில் 25 சதவீதம் மற்றும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி தேவைகளில் 15 சதவீதம் வழங்குகிறது.



Click it and Unblock the Notifications













