Just In
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 5 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
குறைபிரசவத்தில் குழந்தை பிறந்தால், உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஒரு மாதத்தில் தாய்ப்பால் நிறைய அளித்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி, கவனிக்கும் திறன், கற்கும் திறன் ஆகியவை அதிகரிக்கும். அதேபோல் அந்த குழந்தைக்கு வயது 7 ஆகும்போது, மூளையின் செயல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை தீவிர குழந்தை சிகிச்சை பிரிவில் வைத்திருக்கும்போது, உடனடியாக முடிந்த வரை தாய்மார்கள் தாய்ப்பால் கொடுபது மிக அவசியம் . இவை மருத்துவ சிகிச்சையோடு, தாய்ப்பாலின் மகத்துவமும் சேர்ந்து விரைவில் குழந்தை முழுவளர்ச்சி அடைய உதவுகின்றது.
போதிய வளர்ச்சி இல்லாமல் முன்னதாக பிறக்கும் குழந்தைக்கும், கல்லீரல், மூளை மற்றும் மற்ற உறுப்புகள் சரிவர முழுமையடைந்திருக்காது.
அந்த சமயங்களில் தாய்ப்பால்கள் கொடுக்கும்போது, வேகமான முன்னேற்றம் காணப்படுகிறது என அமெரிக்காவிலுல்ள, பிரிக்காம் மகப்பேறு மருத்துவமனையின் தலைமை ஆராய்ச்சியாளரும், மருத்துவருமான மேண்டி பிரவுன் கூறுகிறார்.
தாய்ப்பாலின் மகத்துவம் எவ்வாறு குறைபிரசவக் குழந்தைகளுக்கு நன்மைகளைத் தருகிறது என ஆராயும் நோக்கில் இந்த ஆராய்ச்சியை சுமார் 180 குறைப் பிரசவ குழந்தைகளிடம் மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சி அவர்கள் 7 வயது ஆகும் வரை தொடர்ந்தது.
ஆனால் நிறைய தாய்மார்கள் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க சிரமப்படுகின்றனர். காரணம் அந்த குழந்தைகளுக்கு உதடுகள் சரிவர வளர்ச்சி அடைந்திருக்காது.
மேலும் குழந்தையால் குடிக்க முடியாமல் திணரும். இந்த நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது சவாலாகவே இருக்கும். இதற்கு மருத்துவ மனைகளிலுள்ள மருத்துவர்கள், ஊழியர்களின் தக்க உதவியோடு, தாயால் குழந்தைக்கு தாய்ப்பாலை கொண்டு சேர்க்க முடியும் என அவர் கூறுகிறார்.
காரணம் இந்த சமயத்தில் தாய்களுக்கு மன அழுத்தம், சரியான தூக்கமில்லாமலும், ஹார்மோன் மாற்றங்களாலும், அவர்களின் உடல் பாதிக்கப்படும். இந்த மாதிரியான கட்டங்களில் அவளுக்கு அரவணைப்பும், போதிய ஊடச்சத்தும் மிக முக்கியம்.
இந்த 7 வருட ஆய்வில், குறைபிரசவக் குழந்தைகளுக்கு அதிகம் தாய்ப்பால் தரப்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சி, கற்கும் திறன் ஆகியவை , மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக காணப்பட்டது.