Latest Updates
-
ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் உருவாகும் கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது...! -
கருப்பான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப கடலை மாவை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
கல்யாண பந்தி உருளை பட்டை மசாலா ரெசிபி... இதை செஞ்சு பாருங்க... சாம்பார், ரசம் சாதத்துக்கு பட்டாசா இருக்கும்... -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு அசைவ சுவையில் சூப்பர் சைடு டிஷ் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்ப ஈகோ பிடித்தவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
ரத்னா கபே பேமஸ் சாம்பார் ரெசிபி...இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க..எல்லோரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க! -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு 30 வயதிற்கு மேல் சனி பகவானின் ஆசியால் வெற்றியும், பணமும் குவியும்.. -
120 ஆண்டுக்கு பின் உருவாகும் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுதாம்! -
வெந்தயக்கீரையை வாங்குனா.. இப்படி புளிக்குழம்பு செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
புரட்டாசி சனிக்கிழமைக்கும் சனிபகவானுக்கும உள்ள தொடர்பு...இதனால் உங்க வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?
தமிழ் நாள்காட்டியில் ஆறாவது மாதமான புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் பகவான் மகாவிஷ்ணுவிற்கும் அவரது அவதாரங்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தமிழ் நாள்காட்டியில் ஆறாவது மாதமான புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் பகவான் மகாவிஷ்ணுவிற்கும் அவரது அவதாரங்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் செய்யப்படும் ஹோமங்கள், பூஜைகள் மற்றும் அனைத்து சனிக்கிழமையும் மகத்துவம் வாய்ந்தது. மேலும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரியும் இந்த மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது.

இந்த மாதம் வெங்கடேஸ்வர பகவானுக்கு நன்றி சொல்வதற்காக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து மகாவிஷணுவை வழிபடுவது உங்கள் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும். புரட்டாசி சனிக்கிழமைகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மஹாளய அமாவாசை
புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் மஹாளய பக்ஷம் காலமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில், நம் முன்னோர்கள் இந்த பூமியில் நம்மை நெருங்குவதாக நம்பப்படுகிறது, இந்த காலக்கட்டத்தில் மக்கள் பொதுவாக தர்ப்பணம், மகாலய ஸ்ரார்த்தம் போன்றவற்றால் அவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நவராத்திரி
முன்னோர்களுக்கான சடங்குகள் முடிந்தவுடன், கொண்டாட்டத்திற்கான நேரம் நவராத்திரியுடன் தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் நாள் மஹாளய அமாவாசை முடிந்து அடுத்த பத்து நாட்கள் ஆகும். முதல் மூன்று நாள் பூஜைகள் பார்வதி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் பூஜை செய்யப்படுகிறது. சரஸ்வதி தேவியின் இறுதி நாள் பூஜைகள் சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகின்றன.

புரட்டாசி சனிக்கிழமை முக்கியத்துவம்
புதன் ஆளும் கன்னி ராசியில் சூரியன் இருக்கும் மாதம் புரட்டாசி. புதனின் அதிபதி விஷ்ணு, செல்வத்தின் கடவுள். எனவே, புரட்டாசி மாதம் மற்றும் குறிப்பாக சனிக்கிழமைகளில் விஷ்ணு பக்தர்களால் மிகவும் மதிக்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விஷ்ணுவை வெங்கடேஸ்வரராக வழிபடுவதால் செல்வம் மற்றும் வளம் பெருகும்.

புரட்டாசி சனிக்கிழமை பற்றிய புராணக்கதைகள்
புராணத்தின் படி, விஷ்ணு புரட்டாசி மாதத்தில் வெங்கடேஸ்வரராக மனித உருவில் திருப்பதி மலையில் பூமி விமானத்தில் இறங்கினார். மேலும், இந்த மாதத்தில் சனிபகவான் தனது சக்தியை இழப்பார் என்று நம்பப்படுகிறது. எனவே, சனிக்கிழமைகளில் விஷ்ணுவை வழிபடுவது அவருடைய அருளையும், ஆசீர்வாதங்களையும் கொண்டுவருகிறது மற்றும் சனியின் தீய விளைவுகளைக் குறைக்கிறது.

புரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் சடங்குகள்
அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும், விஷ்ணு பக்தர்கள் விரதத்தை கடைபிடிக்கின்றனர். சிலர் மாதம் முழுவதும் ஒரு பகுதி விரதத்தை கடைபிடித்தாலும், பலர் அனைத்து சனிக்கிழமைகளிலும் கடுமையான விரதத்தைப் பின்பற்றுகிறார்கள். புகைபிடித்தல் மற்றும் குடிப்பதைத் தவிர, அசைவ உணவை உட்கொள்ளும் பக்தர்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பக்தர்கள் மாவிலக்கு (அரிசி மாவு, வெல்லம் (கரும்பு சர்க்கரை) மற்றும் நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட விளக்கு) செய்கிறார்கள். மாவிளக்கு ஒளியின் மூலம் விஷ்ணுபகவான் பக்தர்களைப் பார்த்து புன்னகைக்கிறார் என்று நம்பப்படுகிறது. விரதத்தைக் கடைப்பிடிப்பது இறைவனின் இருப்பிடத்தை அடைவதற்கு அவசியமான அசுத்தங்களை நீக்கும் என்று நம்பப்படுகிறது.

புரட்டாசி சனிக்கிழமை விரதத்தைக் கடைப்பிடிப்பதன் நன்மைகள்
புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடேஸ்வரரை வழிபடுவது மற்றும் விரதத்தை கடைபிடிப்பது பின்வரும் நன்மைகளை உங்களுக்கு அளிக்கும்:
- நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை வழங்குகிறது
- சனி பகவானின் எதிர்மறை விளைவுகளை குறைக்கிறது
- ஒட்டுமொத்த நல்வாழ்வு, செழிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சியைக் கொண்டுவருகிறது
ஆசைகளை நிறைவேற்றுகிறது
- மோட்சத்தை அடைய உதவுகிறது



Click it and Unblock the Notifications











