Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்ப ஈகோ பிடித்தவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா?
ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி எப்படி ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறதோ அதேபோல அவர்களின் பிறந்த மாதமும் ஒருவரைப் பற்றிய குணாதிசயங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. அதன்படி ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.
மனிதராக பிறந்த அனைவருக்குள்ளும் நிச்சயம் ஈகோ இருக்கும். ஆனால் சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு இது கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஈகோ என்பது ஒருவரின் சுயமரியாதை மற்றும் சுய முக்கியத்துவத்தை குறிக்கிறது. நாம் யார் என்பதை நிர்ணயிப்பதில் நமது யோகா மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

சில மாதங்களில் பிறந்தவர்கள் அதிக அகங்காரம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதை அவர்கள் தன்னம்பிக்கை என்று நினைக்கலாம் ஆனால் மற்றவர்களுக்கு அது அகங்காரமாகவே தெரியும். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட அதிக ஈகோ கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் அவர்களின் வலுவான தலைமைத்துவ குணங்களுக்கும், எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த உந்துதலுக்கும் பெயர் பெற்றவர்கள். போர் மற்றும் சக்தியின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் அவர்கள் பெரும்பாலும் வெளிப்படையானவர்களாகவும், போட்டித்தன்மைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஈகோவின் உச்சமான இவர்கள் சவால்களை சந்திக்க பயப்படுவதில்லை, அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வார்கள், இது பல நேரங்களில் சுயநலமாக கருதப்படலாம். அவர்களின் துணிச்சலான அணுகுமுறை அவர்களை சிறந்த தலைவர்களாக மாற்றும், ஆனால் அவர்களின் ஈகோ அவர்களுக்கு சமூகத்தில் மோசமான பெயரை பெற்றுத்தரும்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் ராஜா மற்றும் ராணியாகக் கருதப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்களின் கவனத்தின் மையமாக இருக்க வேண்டும் என்ற பேராசைக் கொண்டவர்கள். அவர்கள் தன்னம்பிக்கையையும் கவர்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்கள், பெரும்பாலும் அவர்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்குகிறார்கள். அவர்களின் பாராட்டப்பட வேண்டும் என்ற ஆசை சில நேரங்களில் ஈகோவாகவும், அகங்காரமாகவும் வெளிப்படும்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் தீவிரமாக செயல்படுவார்கள். அவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு மற்றும் காந்தம் போன்ற வசீகரம் கொண்டவர்கள். அவர்கள் அதிகார மையமாகவும், ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் மனிதர்களை மட்டுமின்றி சூழலையும் கட்டுப்படுத்த ஆசைப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் உறுதியான மற்றும் பிடிவாதமான இயல்பு அவர்களை மிகவும் ஈகோ பிடித்தவர்களாக மாற்றும். அவர்கள் தங்கள் இலட்சியத்தை நோக்கி செல்லும் போது யாரையும் மதிக்கவும் மாட்டார்கள், சுயநலவாதியாகவும் இருப்பார்கள்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகள், வாழ்க்கையில் ஒழுக்கமான மற்றும் நடைமுறை அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். பொறுப்பு மற்றும் கட்டமைப்பின் கிரகமான சனியால் ஆளப்படும் அவர்கள் எப்போதும் உயர்ந்த இலக்கை அடைவார்கள், மேலும் உச்சத்தை அடைய உறுதியாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் தனிப்பட்ட இலக்குகள் மற்றும் சாதனைகளில் மிகவும் கவனம் செலுத்துவதால், இந்த லட்சிய உணர்வு சில நேரங்களில் ஒரு வலுவான ஈகோவாக வெளிப்படும். அவர்களின் ஈகோ அவர்களுக்கு சாதனையாக தெரிந்தாலும் மற்றவர்களுக்கு அது எதிர்மறை குணமாகவே தெரியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












