Just In
- 17 min ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
Don't Miss
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நவராத்திரியின் போது இந்த நிற உடையணிவது மற்றும் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு பாவத்தை சேர்க்குமாம்!
நவராத்திரி என்பது பக்தர்கள் தங்கள் ஆன்மாவை பக்தியில் மூழ்கடித்து, துர்கா தேவியின் 9 அவதாரங்களையும் 9 நாட்களுக்கு வழிபடும் நேரம் இது.
நவராத்திரி என்பது பக்தர்கள் தங்கள் ஆன்மாவை பக்தியில் மூழ்கடித்து, துர்கா தேவியின் 9 அவதாரங்களையும் 9 நாட்களுக்கு வழிபடும் நேரம் இது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை செப்டம்பர் 25ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் துர்க்கை மாதா பூமியை தன் பிரசன்னமாக கொண்டு அருள்பாலிக்கிறார் என்று நம்பப்படுகிறது.
இந்து நாட்காட்டியின்படி, இந்த ஆண்டு ஷார்திய நவராத்திரி செப்டம்பர் 26, 2022 இல் தொடங்கி, அக்டோபர் 4, 2022 வரை தொடரும், அதைத் தொடர்ந்து ராவண வதம் வருகிறது. நவராத்திரியை மிகவும் எளிதாகவும், அதேசமயம் பயனுள்ள வகையிலும் அனுசரிக்க உதவும் சில விரத விதிகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
நவராத்திரியின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
இந்திய பண்டிகைகளில் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் உண்ணாவிரதம் மற்றும் விருந்து இரண்டும் கைகோர்த்துச் செல்கின்றன. இந்த 9 நாட்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில உணவுகள் மற்றும் விரத விதிகள் உள்ளன. வழக்கமான உணவுகள் மற்றும் அரிசி, கோதுமை அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவு போன்ற தானியங்களைத் தவிர்க்க வேண்டும்.
பழங்கள்
நவராத்திரியின் இந்த 9 நாட்களில் அனைத்து பழங்களையும் ருசிக்கலாம். இவை தேவிக்கு பிரசாதமாகவும் வழங்கப்படலாம். பூஜையை முடித்த பிறகு அந்த பழங்களை சாப்பிடலாம்.
உப்பு மற்றும் வலுவான மசாலாப் பொருட்களைத் தவிர்க்கவும்
சுவையான உணவுகள் மற்றும் பிரசாத ரெசிபிகளில் உப்பு மற்றும் வலுவான மசாலாப் பொருள்களைச் சேர்ப்பது கண்டிப்பாகக் கூடாது . உப்புக்கு பதிலாக கல் உப்பு மற்றும் சீரகம் போன்ற நுட்பமான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.
எண்ணெய்
இந்த 9 நாட்களில், ஒருவர் கடுகு எண்ணெய் மற்றும் எள்ளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக கடலை எண்ணெய் அல்லது நெய்யைப் பயன்படுத்த வேண்டும்.
பால் பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்களை பிரசாத சமையல் செய்ய பயன்படுத்தலாம் அல்லது இந்த நேரத்தில் அவற்றை தாராளமாக உட்கொள்ளவும் செய்யலாம்.
காய்கறிகள்
இந்த நேரத்தில் உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு அல்லது சேனைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை போன்ற காய்கறிகளை ருசிக்கலாம்.
பூஜை செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
- பூஜை தொடங்குவதற்கு முன் அதிகாலையில் எழுந்து புனித நீராடுவது, வழிபாட்டுத் தலத்தை சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும்.
- ஆரத்திக்குப் பிறகு வழிபாட்டிற்குப் பிறகு, பக்தர்கள் கடவுளுக்கு பிரசாதம் படைக்கலாம் மற்றும் அவர்களின் சங்கல்பத்தின்படி அவர்கள் விரத உணவுகள் அல்லது பழங்களை உட்கொள்ளலாம்.
- இந்த நாட்களில் கருப்பு உடையணிதல், நகங்களை வெட்டுதல் அல்லது முடி வெட்டுதல் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
- கடைசியாக, பக்தர்கள் பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
- கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் நவராத்திரியின் போது விரதத்தைத் தவிர்க்கலாம்.