Just In
- 1 hr ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 7 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 9 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 9 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சாணக்கிய நீதியின் படி இவர்களை நம்பவும் கூடாது நண்பராக வைத்துக்கொள்ளவும் கூடாதாம்... ஜாக்கிரதை...!
சாணக்கியர் நம் நாட்டின் சிறந்த அறிஞர்களில் ஒருவராவார், அவர் கூறிய கருத்துக்களும், போதனைகளும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை.
சாணக்கியர் நம் நாட்டின் சிறந்த அறிஞர்களில் ஒருவராவார், அவர் கூறிய கருத்துக்களும், போதனைகளும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. இந்திய வரலாற்றை மாற்றியதில் இவருக்கு தனிப்பங்கு உண்டு. அவரது இராஜதந்திரம்தான் சாதாரண மனிதனான சந்திர குப்தனை மகத ராஜ்ஜியத்தின் மன்னனாக மாற்றியது. அவரது சாணக்கிய நீதியும், அர்த்த சாஸ்திரமும் இந்தியாவின் முக்கியமான நூல்களாகும்.
"சாணக்ய நீதி" என்பது சாணக்கியரின் கொள்கைகளின் அற்புதமான தொகுப்பாகும், இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூல் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கை தவிர்க்க வேண்டிய தவறான விஷயங்கள் என்னென்ன என்பது இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முட்டாளுடன் வாதாடக்கூடாது
முட்டாள்தனமான மக்களுடன் நாம் ஒருபோதும் வாக்குவாதம் செய்யக்கூடாது என்று சாணக்யா கூறுகிறார். முட்டாள் மக்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை, நீங்கள் அவர்களுடன் தகராறு செய்தால் இழப்பு உங்களுடையதாக இருக்கும். அத்தகையவர்களுடன் நீங்கள் வாதிட்டால், உங்கள் மரியாதை குறையும். அத்தகையவர்கள் உங்களை மனரீதியாக பலவீனப்படுத்தக் கூடியவர்கள்.
பலவீனத்தை யாரிடமும் சொல்லக்கூடாது
பெரும்பாலான மக்கள் தங்கள் பலவீனங்களை தங்கள் நெருங்கிய உறவினர்களிடம் வெளிப்படுத்துகிறார்கள். நீங்கள் பிறந்தவுடன் உங்கள் உலக உறவுகள் தொடங்குகின்றன. காலப்போக்கில் நீங்கள் பல ஆழமான உறவுகளில் ஈடுபடுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த உறவுகளிடம் நம்முடைய பலவீனத்தை நாங்கள் சொல்கிறோம். பிற்காலத்தில் பிறருக்கும் இது தெரியும். இது நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஒவ்வொரு நபருக்கும் சில பலவீனங்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பலவீனத்தை யாரிடமும் சொல்லாதீர்கள். அது உங்கள் நண்பராக அல்லது உங்கள் மனைவியாக இருந்தாலும் சரி. உங்கள் ஆன்மாவை பலப்படுத்த இதைத் தவிர்க்கவும்.
ஒரு தவறு உங்கள் அனைத்து தகுதிகளையும் அழிக்கும்
பொதுவாக மக்கள் செல்வம், வசதி, மகிழ்ச்சியை பெறுவதற்காக சில தவறுகளை செய்வார்கள், இது அவர்களின் வாழ்க்கையை நரகமாக மாற்றும். நம்முடைய ஒரு தவறு நம்மிடம் இருக்கும் அனைத்து நல்ல குணங்களையும் ஒன்றும் இல்லாமல் செய்துவிடும். சமூகத்தில் எவ்வளவு நல்ல பெயர் இருந்தாலும் ஒரு தவறான குணம் நமக்கு அவமரியாதையை ஏற்படுத்தும். சூதாட்டம், அவதூறு பேசுவது, போதைப்பழக்கம் போன்றவை உங்களின் அனைத்து நல்ல குணங்களையும் மக்களை மறக்க வைக்கும்.
MOST READ: இந்த ராசிக்காரங்க கோபத்தால அவங்க அழிவை அவங்களே தேடிக்குவாங்க... பார்த்து பழகுங்க இவங்ககிட்ட...!
புத்திசாலித்தனமாக பணத்தை செலவிட வேண்டும்
இந்த உலகில் செல்வம் இல்லாத வாழ்க்கை என்பது பல சிரமங்கள் நிறைந்தததாகவே இருக்கிறது. நம் வாழ்வில் பணம் ஒரு சிறப்பு பங்கு வகிக்கிறது. இந்த செல்வத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் கடின உழைப்பு மற்றும் வியர்த்தல் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள், பின்னர் அந்த பணத்தை தவறான காரியங்களுக்காகக பயன்படுத்துகின்றனர். நீங்கள் பணத்தை வீணடிக்க கடினமாக உழைப்பதில் என்ன பயன் உள்ளது?. உங்களிடம் அதிக பணம் இருந்தால், அதை ஒரு வரம்புடன் செலவிடுங்கள். "குபேரரும் தனது வருமானத்தை விட அதிகமாக செலவு செய்தால், அவர் ஒரு ஏழையாக மாறுவார்" என்று சாணக்கியர் கூறியுள்ளார். எனவே பணம் சம்பாதிக்கவும், சேமிக்கவும், தேவைப்படும்போது மட்டுமே செலவழிக்கவும்.
அவதூறு மீதான பயம்
அவமானப்பட்டு வாழ்வதை விட இறப்பது நல்லது என்று சாணக்யா கூறுகிறார். "மரணம் ஒரு கணம் துக்கத்தைத் தருகிறது, ஆனால் அவமானம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் துக்கத்தைத் தருகிறது". நம் அனைவருக்கும் அவதூறு பயம் இருக்க வேண்டும். இந்த பயம் இல்லை என்றால் உலகம் சீர்குலைந்து விடும். நீங்கள் தவறு செய்கிறீர்கள், நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று நம் ஆன்மா சொல்லும்போது இது நிகழ்கிறது. எனவே வாழ்க்கை முழுவதும் அவமானத்தை ஏற்படுத்தும் செயலை ஒருபோதும் செய்யாதீர்கள்.ஒருமுறை இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் நீங்கள் பழைய நிலையை மீண்டும் ஒருபோதும் அடைய இயலாது.
சோம்பேறித்தனத்தை விரட்டவும்
உலகில் 100% மக்களில், 20% மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். மீதமுள்ள 80% மக்கள் ஏன் வெற்றிபெற முடியாமல் இருக்கிறார்கள் தெரியுமா? இந்த மக்களுக்கு இடையிலான ஒரே வித்தியாசம் சோம்பேறித்தனம். 80% மக்கள் எதைச்செய்தாலும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள், 20% பேர் எந்த வேலையை செய்தாலும் சோம்பேறித்தனத்துடன் செய்கிறார்கள். எனவே, நீங்கள் வாழ்க்கையை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற விரும்பினால், சோம்பலை மறந்து கடினமாக உழைக்க வேண்டும். "சோம்பேறி மனிதனுக்கு நிகழ்காலமும் எதிர்காலமும் இல்லை" என்பதை நினைவில் கொள்ள வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார்.
வாழ்க்கையில் நம்பக்கூடாதவர்கள்
உங்களிடம் சிரித்து பேசும் அனைவரையும் உங்களின் நண்பர்களாக நினைத்து விடாதீர்கள். நீங்கள் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போது உங்கள் பேச்சை கவனமாகக் கேட்காமல் புறக்கணித்தால், அவர் நிச்சயமாக உங்களை ஏமாற்றுவார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அத்தகையவர்களை நம்புவதைத் தவிர்க்கவும். நீங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடியவற்றை மட்டுமே இந்த நபர்களிடம் சொல்லுங்கள். அத்தகைய நபர்களுடன் உங்கள் தனிப்பட்ட அல்லது முக்கியமான விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். உங்கள் முக்கியமான விஷயங்களை இதுபோன்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், இந்த விஷயங்கள் இனி உங்களுக்கு தனிப்பட்டவை அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் உங்களின் ரகசியங்களை மற்றவர்களிடம் கண்டிப்பாக கூறுவார்கள்.
MOST READ: விந்தணுக்கள் பெண்கள் உடலுக்குள் எவ்வளவு காலம் உயிர்வாழும்? விந்தணுக்களின் ஆயுளை அதிகரிப்பது எப்படி?
நட்பு வைத்துக்கொள்ள கூடாதவர்கள்
சாணக்யா கூற்றின்படி "உங்களை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அந்தஸ்து உள்ளவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ளாதீர்கள். அத்தகைய நட்பு உங்களை ஒருபோதும் மகிழ்ச்சியடையச் செய்யாது ". உங்களை விட குறைவான அந்தஸ்து உள்ளவர்களுடன் நீங்கள் நட்பு வைத்தால், நீங்கள் எப்போதும் சிக்கலில் இருப்பீர்கள். அத்தகைய நண்பர்கள் எப்போதும் உங்களிடமிருந்து உதவியை எதிர்பார்ப்பார்கள், உங்களைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பார்கள். நீங்கள் எப்போதாவது சிக்கலில் இருந்தால், அத்தகைய நண்பர்கள் உங்களுக்கு உதவ முடியாது. உங்களை விட உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களுடன் நீங்கள் நட்பு வைத்தால், நீங்கள் எப்போதும் உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள், உங்களிடம் பொறாமை உணர்வு இருக்கும். நீங்கள் எப்போதும் அவருக்கு முன்னால் உங்களை சிறியதாக கருதுவீர்கள், இது உங்கள் சுயமரியாதைக்கு நல்லதல்ல. கஷ்ட காலங்களில் அவர் உங்களுக்கு உதவ முடியாவிட்டால், உங்கள் நட்பின் மீது நீங்கள் கோபப்படுவீர்கள். எனவே உங்கள் நட்பு உங்கள் மட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நிகழ்காலத்தில் வாழ வேண்டும்
சாணக்கியர் கூறுகிறார், "நாம் ஒருபோதும் கடந்த காலத்திற்கு வருத்தப்படக்கூடாது, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படக்கூடாது." ஞானிகள் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள் ". உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால், இன்றைய நாளை வாழ வேண்டும். உங்களிடம் கடந்த காலமோ நாளையோ இல்லை. உங்கள் கையில் உள்ள ஒரே விஷயம் - இன்று. கடந்துவிட்டதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து வருந்தினால், நீங்கள் உங்கள் கவலையை அதிகரித்துக் கொள்வீர்கள். நேற்று கழித்ததை நினைவில் வைத்துக் கொண்டு திரும்பி வரப்போவதில்லை. எனவே நேற்று பற்றி சிந்திப்பது பயனற்றது. நாளை பற்றி நீங்கள் நினைத்தால், அதுவும் உங்களை கவலையடையச் செய்யும். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து உங்கள் இன்றைய நாளை கெடுக்க வேண்டாம். உங்களுக்கு இந்த தருணம் மட்டுமே உள்ளது, எனவே அதை வாழுங்ள் என்று சாணக்கியர் கூறுகிறார்.