Just In
- 5 min ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 1 hr ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
Don't Miss
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஒவ்வொரு சனிக்கிழமையும் இத செஞ்சா.. ஏழரை சனியின் தாக்கம் குறையுமாம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க...
ஒருசில செயல்களை சனிக்கிழமைகளில் செய்து வந்தால் சனி பகவானை மகிழ்வித்து ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
நீதிமான் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு 2023 ஜனவரி 17 ஆம் தேதி சென்றார். சனி பகவான் ஒரு ராசிக்கு செல்லும் போது, அதன் தாக்கம், முன் மற்றும் பின் இருக்கும் ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் சனி பகவான் கும்ப ராசிக்கு சென்றதால், மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் ஏழரை சனி நடக்கிறது. அதில் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் மூன்றாம் கட்டமும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டமும், மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டமும் தொங்குகிறது.
சனி பகவானின் தாக்கம் ஒரு ராசிக்கு ஏழரை ஆண்டுகள் இருக்கும். இந்த ஏழரை ஆண்டுகள் சனி பகவான் பல சோதனைகளை தருவதோடு, பல இழப்புக்களையும், பல நன்மைகளையும் வழங்குவார். மொத்தத்தில் வாழ்க்கையைப் புரிய வைப்பார். ஆனால் ஒருசில செயல்களை சனிக்கிழமைகளில் செய்து வந்தால் சனி பகவானை மகிழ்வித்து ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
பரிகாரம் #1
சனிக்கிழமைகளில் இரும்பு, கருப்பு உளுந்து, கருப்பு எள்ளு விதைகள் மற்றும் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்வதன் மூலம், சனிபகவானை மகிழ்விக்கலாம். அதுவும் ஏழரை சனி நடப்பவர்கள், இதை ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்து வருவதன் மூலம், சனியின் அசுப பலன்களைத் தவிர்க்கலாம்.
பரிகாரம் #2
சனி பகவான் அரச மரத்தில் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே சனி பகவானை மகிழ்விக்க வேண்டுமானால், சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட வேண்டும். அத்துடன் சனி ஸ்தோத்திரத்தையும் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி ஏழரை சனி நடப்பவர்கள் செய்து வர, சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
பரிகாரம் #3
ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவான் இருக்கும் கோவிலுக்கு சென்று, அவருக்கு எள்ளு எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயுடன் கருப்பட்டி சேர்த்து அர்ச்சனை செய்தால், சனி தோஷம் பாதி குறையும் என்பது நம்பிக்கை.
பரிகாரம் #4
ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்க சனி பகவானை மட்டும் தான் வழிபட வேண்டும் என்பதில்லை. அனுமனை வழிபடுவதன் மூலமும், அனுமன் சாலிசாவை பாராயண்ம் செய்வதன் மூலமும், சனியின் தாக்கத்தை மற்றும் அசுப பலன்களைக் குறைக்கலாம்.
பரிகாரம் #5
ஒவ்வொரு சனிக்கிழமையும் பறவைகள், விலங்குகளுக்கு உணவளிப்பதன் மூலமும் சனியின் தாக்கம் குறையும். குறிப்பாக ஏழரை சனி நடப்பவர்கள் இச்செயலை ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்து வந்தால், ஏழரை சனியால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
பரிகாரம் #6
சனி பகவானை மகிழ்விக்க விரும்பினால், ஏழை எளியோருக்கு உங்களால் முடிந்ததை தானம் செய்யுங்கள். இதனால் சனி பகவானின் கோபம் குறைவதோடு, ஏழரை சனி உங்களுக்கு நடந்தால், அதன் தாக்கமும் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)