Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 8 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நம்ம பூசற விபூதிக்கும் சிவபெருமானுக்கும் நிஜமா ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஏன் பூசறோம்?
நாம் நெற்றியில் பூசும் விபூதிக்கும் சிவனுக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.
எல்லாரும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவதோடு நெற்றி நிறைய பட்டை யையும் போட்டுப்போம். இப்படி நெற்றியில் அணியும் விபூதிக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்னு உங்களுக்கு தெரியுமா? இந்த சாதாரண விபூதி கடவுளின் சக்தி என்று கூறப்படுகிறது.
கடவுளின் ஆன்மீக சாம்பலின் வடிவமாக கருதப்படுகிறது. இயற்கையாகவே இது பக்தியை வழங்கக் கூடியது என்று நம்பப்படுகிறது. அந்தளவுக்கு ஆன்மீக மரியாதை இந்த விபூதிக்கு கொடுக்கப்படுகிறது என்றே சொல்லலாம்.
விபூதி என்று பெயர் வரக்காரணம்?
விபூதி என்ற பெயர் 'விபூ' என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு ஆத்மார்த்தமான, சக்தி வாய்ந்த, நித்தியமான இறைவன் என்று பொருளாகும். இது கடவுளின் மிக உயர்ந்த சக்தியின் வெளிப்பாடு ஆகும்.
MOST
READ:
உங்க
பிரபல
நட்சத்திரங்களோட
அழகான
பெண்
செக்ரட்டரிகளை
பார்த்திருகீங்களா?
இதோ
பாருங்க...
புனித அடையாளம்
விபூதி இந்து மதத்தின் படி சிவனின் அடையாளமாக கூறப்படுகிறது. அதனால் தான் சிவன் பக்தர்கள் நெற்றியில் பட்டையும் கழுத்தில் ருத்திராட்சை கொட்டையும் அணிகின்றனர். இது தூய்மை, பாதுகாப்பு, தியாகம் மற்றும் சக்தியை உறிஞ்சும் ஒன்றாக கருதப்படுகிறது.
நமது உடல் சாம்பலாகும் போது, மாட்டுச் சாணத்தை எரிக்கும் போது கிடைக்கும் சாம்பல் தான் இந்த திருநீறு. இது நெருப்பில் இடும் தியாகத்தை காட்டுகிறது. இந்த புனித சாம்பலை மக்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.
புனித சாம்பலின் பயன்கள்
உடலின் அடையாளமாக உள்ளது
உடலில் ஆத்ம சக்தியை தக்க வைக்கிறது.
குணப்படுத்துவதற்கான மருந்து
எதிர்மறை சக்திகளிடமிருந்து நம்மை காக்கிறது.
மாய வித்தை காட்ட, பேயை விரட்ட போன்ற மர்ம செயலுக்கும் பயன்படுத்துகின்றனர்.
உடலையும் மனதையும் சுத்தப்படுத்துகிறது.
அவநம்பிக்கையை குறைத்து தெய்வ நம்பிக்கையை ஊட்டுகிறது.
MOST READ: விஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்? அதான் டுவிஸ்ட்...
சிவனும் விபூதியும்
ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய ஆரம்பத்தை பறைசாற்றுகின்றன. அது போன்று தான் நமது பிறப்பும் இறப்பும். இதற்கெல்லாம் தலையாய கடவுள் சிவன் தான். உலகில் உள்ள உயிர்களை படைப்பதும் அழிப்பதும் அவனே. அவரது மூன்றாவது கண் சர்வ வல்லமையும் படைத்த அறிவுக் கண்.
நம் வாழ்க்கை எல்லாம் ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும், மிஞ்சுவது நம் சாம்பல் மட்டுமே. மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணுவால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் கடைசியில் சாம்பாலாக்கப்படுவது தான் பிரபஞ்சம் சொல்லுகிறது.
அந்த புனித சாம்பலை உடம்பு முழுவதும் நாம் பூசிக் கொள்வது சிவனின் சக்தியை ஈர்க்க வழிவகுக்கிறது. இந்த சாம்பல் சிவனின் கோபத்தையும் எடுத்துரைக்கிறது. உயிர்களிடத்து உள்ள தீங்குகளை பாவங்களை போக்கி சாம்பலாக்கி புத்துயிர் மறுபிறவி கொடுக்கிறார் என்பது பொருள்.
காமத்தின் கட்டுப்பாடு
விபூதி சிவனின் அடையாளமாக பார்க்கப்படுவதோடு பாலியல் ஆற்றலின் எஞ்சிய சக்தியாக விளங்குகிறது. வேதவாக்கியங்களின்படி விபூதி தேஜஸை அதாவது காமத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை தருகிறது. உடம்பில் ஏற்படும் காம இச்சைகளை எரித்து மனசு தூய்மையாக இருக்க உதவுகிறது.
உடம்பில் உள்ள சூட்டை குறைத்து காமத்தை கட்டுப்படுத்துகிறது. சிவன் தனது மூன்றாவது கண்ணான தன் நெற்றிக் கண்ணை திறந்து மன்மதனின் காமத்தையும், ஆசையும் எரிக்கலானார் என்று கூறப்படுகிறது.
MOST
READ:
குபேரனின்
ஆசி
பெற்று
பணமழையால்
நனையப்
போகும்
ராசிக்காரர்
இவர்தான்...
விபூதிகளின் 8 வகையான சக்திகள்
அனிமன் - சிறிய சக்தி
பிரப்தி - பெரும் சக்தி
பிரக்மியாம் - வெளிப்படையான சக்தி மற்றும் ஆசைகளை நிறைவேற்ற கூடியது.
லெகிமேன் - இலகுவான சக்தி
இஸ்கிதா - அதிகாரத்தை பெறுவதற்கான சக்தி
வசிதா - களிப்பு, மயக்கம், வசியம் மற்றும் ஏமாற்றும் சக்தி
மஹிமான் - மாய மந்திரவாதிகளுக்கு பலத்தை வலிமையை கொடுக்கும் சக்தி
காமவசியாதா- காமம், ஆசைகளை கட்டுப்படுத்தும் சக்தி.