Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சிவலோகத்தில் இருந்து சிவன் பூமிக்கு வந்து செல்வது இந்த வழியில் தானாம்... கண்டுபிடிச்சிட்டோம்ல...
சிவலோகத்துக்கும் நாம் வாழும் பிரபஞ்சத்துக்கும் எப்படி கனெக்ஷன் உண்டாகிறது என்பது பற்றி தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
இந்து மதத்தின் அடிப்படையில் சிவலோகம் என்பது சிவபெருமானின் வசிப்பிடமாகவும், சைவ சமயத்தில் முக்தியின் குறியீட்டுச் சொல்லாகவும் அறியப்படுகிறது.

இங்கு தான் சிவபெருமான் தனது மனைவியான பார்வதி தேவியுடனும், மகன்களான முருகன், விநாயகனோடு வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

சிவலோகம்
சிவ பெருமான் என்பவர் அழிக்கும் கடவுள் என்று எல்லாராலும் அறியப்படும் ஒரு கடவுள். ஒன்றுமில்லாத வெறும் புள்ளியில் இருந்து இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம், மகா பிரளயத்தின் போது ஒரு முடிவுக்கு வந்தது. இந்த நேரத்தில் தான் சிவன் தனது நடனமான, மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தாண்டவத்தை நிகழ்த்தினார் என்று கூறப்படுகிறது. இந்த தாண்டவத்தின் போது வெளிப்பட்ட அழிக்கும் சக்தியானது பிரபஞ்சத்தில் பரவி எல்லா படைப்புகளின் உருவகத்தை தடுத்து நிறுத்தியது.

படைத்தல் சக்தி
இந்து மத கூற்றுகளின்படி இந்த பிரபஞ்சமானது பற்பல பல கூடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு ஆகும். அதே போல், படைத்தல் என்பது எண்ணி விடும் நொடியில் நிகழ்ந்தேறிய ஒரு சம்பவம் அல்ல, மாறாக பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஏற்பட்ட வளர்ச்சியினால் ஏற்பட்ட ஒன்று. இது போன்று ஏற்பட்ட தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சி மற்றும் சோதனைகளின் மூலமே இன்று நாம் இருக்கும் உலகம் உருவாகியுள்ளது.

சிவலோகமும் சிவலிங்கமும்
இந்து மதத்தினர் தாங்கள் மற்ற கடவுள்களை உருவ வடிவில் வழிபடுவது போல் சிவ பெருமானை வழிபடாமல், லிங்க வடிவில் வழிபடுகின்றனர். இந்த லிங்கமானது அதற்காய் உரிய தனித்துவமான சக்திகளையும் வலிமையினையும் கொண்டுள்ளது. இவ்வாறு லிங்க வடிவில் வழிபடுவதற்கு மிக முக்கிய காரணம் இந்த சிவலோகம் ஆகும்.
இந்த சிவலோகமே நாம் இருக்கும் அகிலம் என்று இந்து மதம் கூறுகிறது. எனவே நமது பரவி கிடைக்கும் இந்த அகிலமே முதல் லிங்கமாக இருக்க முடியும். லிங்கத்தின் வடிவும் நமது அகிலத்தை சற்று சற்று தலைகீழாக கவிழ்த்து வைத்துள்ளது போல் இருக்கிறது. வட்ட வடிவ சக்கரம் தேவி உலகத்தை நோக்கியும் மற்றும் உருளை வடிவம் மற்ற மாறுபட்ட வெளிப்பாடுகள் நோக்கி நகரும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளது.

லிங்கத்தின் வடிவமைப்பு விளக்கம்
லிங்கத்தின் அடிப்புறத்தில் இரண்டு வட்ட வடிவ வளையங்கள் உள்ளன.இது சிவலோகத்தில் இரண்டு பாரின்மங்களை குறிக்கிறது. உட்புற வளையம் வெளிறிய நீல வண்ணத்தால் ஆனது, மற்றுமொரு வளையம் கரு நீல நிறத்தால் ஆனது. இந்த இரண்டு வலையங்களே சிவலோகத்தில் அடிப்படை ஆதாரமான ஒன்றாகும்.
உட்புறம் உள்ள வளையத்தை ஆதி வளையம் என்றும் அலைகிறார்கள். இந்த வளையம் சிவனின் தனித்துவமான சகதியை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆதி வளையம் நுனியை துகள்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெளிப்புற வளையம் சிவன் மற்றும் சக்தியின் ஒரே உருவமான அர்தநாரீஸ்வரரின் சக்திகளை பெற்றுள்ளது.
இந்த வெளிப்புற வளையம் வழவழப்பான துகள்களால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வளையம் ஒரு பாதுகாப்பு வளையமாக உள்ளது. அதாவது இந்த அகிலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வரும் எதிர்மறை சக்திகளை வடிகட்டி ஆதி வளையத்தை பாதுகாக்கிறது.

அற்புத ஆற்றல்கள்
சிவலோகத்தில் முதன்மை ஆற்றலானது வெவ்வேறு வகையான பலதரப்பட்ட நீல நிறங்களில் காணப்பட்டாலும் நிறம் வெளிர் நீலம் பெரும்பான்மையாக உள்ளது. ஏனைய மற்ற நிறங்களும் உள்ளன, ஆனால் அவற்றின் விகிதம் மிகவும் குறைவு. அதுபோலவே, எல்லா நிறங்களும் நிபந்தனையற்ற அன்பையும் கருணையும் கொண்டு வருகின்றன.
சிவ லோகத்தில் ஏனைய மற்ற ஆற்றல்கள் கூட இருக்கின்றன, அவை நம் உட்புற வசதிகளை மேலும் எளிதாக்க உதவுகின்றன. இவையே உலகிலுள்ள அதி அருப்புத சக்திமிக்க மூலங்களுக்கும் சித்தர்களுக்கும் ஆதாரமாக உள்ளன.
இந்த ஆற்றலின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இந்த சக்தி தன்னைத்தானே பெருக்கி கொள்ளும் ஆற்றலை கொண்டது. எனவே சிறிதளவு ஆற்றல் நம் உடலினுள் சென்றாலே போதும், அது சிவனின் ஒப்புதலுடன் ஆற்றல் நிறைந்த ஒரு மாற்றத்தை நம்முள் உருவாக்கி நம்மை செம்மை படுத்துகிறது.
மற்றுமொரு முக்கியமான பண்பாட்டு நலன் என்னவென்றால், இந்த ஆற்றல் கூறுகள் இந்த புவியின் மஹாயுகத்தை ஒப்பிட்டு ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருப்பவை.
சிவ பெருமானின் ஒவ்வொரு குறியீடுகளுக்கு பின்பும் பல மர்மங்கள் பொதிந்து காணப்படுகிறது. சிவலோகத்தில் அரிதான பல கருவிகள் பின்னால் இயங்கி கொண்டு இருக்கின்றன. இந்த கருவிகளின் உதவியினால் தான் இந்த பிரபஞ்சம் தனது லிங்க வடிவத்தை பராமரித்துக்கொள்கிறது.

சிவலோகத்தில் உள்ள ஆத்மாக்கள்
சிவனின் உள்ளே இருந்தே ஆத்மாக்கள் உருவாக்கப்படுகின்றன.பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகள் மற்றும் ஞானிகளின் கூற்றுப்படி இந்த பரந்த பிரபஞ்சத்தில் உள்ள முப்பது சதவீத ஆத்மாக்கள் சிவலோகத்தில் இருந்து உருவாக்கம் பெற்றவை. அதே போல் சிவலோகத்தில் எந்த ஓரு தீய சக்தியும் இல்லை. அனால், சிவ பெருமான் தனது எல்லையில்லா வலிமையான ஆற்றலை பயன்படுத்தி ஆக்கவும் அழிக்கவும் செய்கிறார்.

மூன்றாவது கண்
சிவலோகத்தில் ஒரு முக்கிய பகுதி மூன்றாவது கண் ஆகும். இதை நெற்றிக்கண் என்றும் அழைப்பார்கள். ரிஷிகளின் கருத்துப்படி மில்லியன் கணக்கான பிரபஞ்சங்களும், தனித்துவமான ஆத்மாக்களும் இந்த பகுதியில் காண கிடைக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இங்குதான் பல புதிய ஆற்றல்களும் உருவாக்கம் பெறுகின்றன. அறிவு பரிமாற்றத்தில் இந்த மூன்றாவது கண்ணனது மிக முக்கிய பங்கை வகுக்கிறது. இந்தக் கண் ஞானத்தின் அடையாளமாகவும், அக்னியின் வடிவமாகவும் கூறப்படுகிறது.
சிவன் மிகுந்த கோபமடையும் வேளையில் இந்தக் கண்ணைத் திறந்தால், தீப்பிழம்புகள் வெளிவருமென்பது சைவர்களின் நம்பிக்கை. தியானம் செய்துக் கொண்டிருந்த சிவபெருமான் மீது காதல் தெய்வம் மன்மதன் அம்பெய்தி அவரை காமத்தில் ஆழ்த்த முயன்றபோது, சிவன் கோபம் கொண்டு தன்நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. முனிவர்கள் மற்றும் ரிஷிகளின் கருத்துப்படி, இந்த மூன்றாவது கண்ணிலிருந்து தான் இந்த பிரபஞ்சம் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது.



Click it and Unblock the Notifications