Just In
- 2 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 2 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 3 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 4 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புளிய மரத்தில் பேய் இருக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?
இந்தியா மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமாக இருக்கிறது. நம் முன்னோர்கள் உருவாக்கிய மூடநம்பிக்கைகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் நம் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா மூடநம்பிக்கைகளின் பிறப்பிடமாக இருக்கிறது. நம் முன்னோர்கள் உருவாக்கிய மூடநம்பிக்கைகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் நம் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பல நம்பிக்கைகளுக்கு பின்னால் சில அறிவியல் உண்மைகள் இருக்கிறது ஆனால் பல நம்பிக்கைகள் வெறும் மூடநம்பிக்கைகளாகவே இருக்கிறது.
மூடநம்பிக்கைகளில் பெரும்பாலானவை முடி சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அதில் மிகவும் பிரபலமான ஒரு நம்பிக்கை என்னவென்றால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு முடியை சீவக்கூடாது என்பதாகும். மேலும் முடியை விரித்தும் வைத்திருக்கக்கூடாது என்று கூறுவார்கள். இந்த பதிவில் இதற்கான காரணங்கள் மற்றும் முடி பற்றிய மேலும் பல நம்பிக்கைகளை பற்றி பார்க்கலாம்.
ஏன் மாலை நேரத்தில் தலை சீவக்கூடாது?
மாலை நேரத்தில் தீயசக்திகள் அதிகம் அலையும் அதனால் தலையை சீவக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில்தான் அவை மிகவும் பலம் வாய்ந்தவையாக இருக்கும் எனவும், அழகான நீண்ட கூந்தல் இருக்கும் பெண்கள் அவற்றின் எளிய இலக்காக மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது.
முடியை உதிரவிடக்கூடாது
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு முடி உதிர்வதில் என்ன தவறு இருக்கிறது, ஏன் தலை பின்னி வைத்திருக்க வேண்டும்? பூஜை செய்யும்போது கூட பெண்கள் தங்கள் தலையை பின்னிதான் இருக்க வேண்டும். ஏனெனில் முடி உதிர்வது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.
முடியை அப்புறப்படுத்துவது
முடியை சீவுவது, தலையை பின்னி இருப்பது மட்டுமின்றி இருக்கும் மற்றொரு நம்பிக்கை முடியை அப்புறப்படுத்துவதாகும். முடியை அப்புறப்படுத்தும் போது மிகவும் ஜாக்கிரதையாக அப்புறப்படுத்த வேண்டும் ஏனெனில் அது தவறானவர்கள் கைகளுக்கு கிடைத்து விட்டால் நீங்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாக நேரலாம்.
பௌர்ணமி அன்று தலை சீவுவது
பௌர்ணமி இரவன்று நீங்கள் தலைவாரவே கூடாது என்று கூறப்படுகிறது. அவ்வாறு தலைவாருவது தீயசக்திகளை உங்கள் வீட்டுக்கு நீங்களே அழைப்பது போன்றதாகும்.
MOST READ: இந்த ஜென்மத்தோட ராசிப்படி முன்ஜென்மத்துல நீங்க எப்படிப்பட்டவங்களா இருந்தீங்கனு தெரியுமா?
மாதவிடாயின் போது தலை குளிப்பது
மாதவிடாயின் முதல் நாளில் தலை குளித்தால் பெண்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படும் என்பது இன்றும் நிலவும் ஒரு மூடநம்பிக்கையாகும். மேலும், மாதவிடாய் நேரத்தில் இரவில் தலைக்கு குளிப்பது அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சீப்பை கீழே போடுவது
பிரபலமான மற்றொரு நம்பிக்கை நீங்கள் தலை வாரும் போது சீப்பை கீழே போட்டுவிட்டால் உங்களுக்கு விரைவில் பெரியய கெட்ட செய்தியோ, ஏமாற்றமோ வரப்போகிறது என்று அர்த்தம்.
முடியை வீட்டை சுற்றி போடுவது
வீட்டை சுற்றி ஒருபோதும் முடியை போடக்கூடாது என்று நம்பப்படுகிறது.ஏனெனில் அவ்வாறு முடியை போடுவது குடும்பத்தில் சண்டையையும், குழப்பங்களையும் உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு ரூபாய் நாணயம்
இந்திய கலாச்சாரத்தில் ஒரு ரூபாய் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவில் பணத்தை பரிசாக கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு கொடுக்கும் போது ஒற்றைப்படை எண்ணில் கொடுப்பது வாங்குபவர்களுக்கு நன்மையை உண்டாக்கும் என்பது நம்பிக்கையாகும்.
MOST
READ:
இராவணனின்
வீழ்ச்சிக்கு
பின்னர்
இராமருக்கு
உதவிய
வானர
சேனைக்கு
என்ன
நடந்தது
தெரியுமா?
புளியமரம்
இந்தியாவில் புளியமரமானது பேய்களின் வசிப்பிடமாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது, ஆனால் இது உண்மையல்ல. இதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் புளியமரம் மற்ற மரங்களை விட அதிகளவு கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடும். இதனால் சுவாசிப்பதற்கு பிரச்சினை ஏற்படும். எனவே புளியமரத்திடம் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கை உருவாக்கப்பட்டது.