Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஏன் கிருஷ்ணர் தலையில மயிலிறகு வெச்சிருக்காருன்னு தெரியுமா?... அட இதுக்குதாங்க!
ஸ்ரீ கிருஷ்ணர் 5200 ஆண்டுகளுக்கு முன்பு, அதர்மத்தை அழிக்க அவதரித்தவர். ஸ்ரீமன் நாராயணனின் சக்தி வாய்ந்த அவதாரமாக கிருஷ்ணாவதாரம் போற்றப்படுகிறது. தான் ஒரு மன்னனாக முடிசூடிக்கொள்ள முடியாதவாறு சபிக்கப்பட
ஸ்ரீ கிருஷ்ணர் 5200 ஆண்டுகளுக்கு முன்பு, அதர்மத்தை அழிக்க அவதரித்தவர். ஸ்ரீமன் நாராயணனின் சக்தி வாய்ந்த அவதாரமாக கிருஷ்ணாவதாரம் போற்றப்படுகிறது. தான் ஒரு மன்னனாக முடிசூடிக்கொள்ள முடியாதவாறு சபிக்கப்பட்டாலும், பேரரசர்களையும், மாபெரும் சாம்ராஜ்ஜியங்களையும் உருவாக்கியவர் ஸ்ரீ கிருஷ்ணர்.

கிருஷ்ண பகவான் தன் மேனியில் எண்ணற்ற ஆபரணங்கள் அணிந்திருந்தாலும், அவரது மணிமகுடத்தை அலங்கரிக்கும் மயிலிறகு அவற்றில் எல்லாம் சிறப்பு வாய்ந்தது. அது கிருஷ்ணனின் சின்னமாகவும் விளங்குகிறது. பக்தர்கள் "மொர்முக்குட் தாரி", அதாவது 'மயில் இறகுகளின் கிரீடம் அணிந்தவர்' என பகவானை அன்புடன் அழைக்கின்றனர்.

புராணங்கள் என்ன கூறுகின்றன?
ஒரு முறை கோவர்தன மலையில் ஸ்ரீ கிருஷ்ணர் தன் புல்லாங்குழலில் வாசித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த தெய்வீக கானத்தின் இனிமை பொருந்திய மெல்லிசையில் மயங்கிய மயில்கள் பரவசத்துடன் ஆடின. அப்போது உதிர்ந்த அதன் இறகுகளை எடுத்து இராஜா மயில் இறைவனுக்கு பேரன்புடன் வழங்கியது. இறைவன் அதை கருணையோடு ஏற்றுக்கொண்டு தன் சிரசில் அலங்கரித்துக்கொண்டார்.

ஏழு நிறங்கள்
மயிலிறகில் 7 முதன்மை வண்ணங்களும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இது பகவான் தன்னுள் எல்லா வண்ணங்களையும் கொண்டவர் என்பதை காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் முழு பிரபஞ்சத்தையும் தன்னுள் அடக்கியவர். அவர் பல்வேறு வடிவங்கள், காட்சிகள் மற்றும் நிலைகளில் நம்மை வழிநடத்துகிறார்.

முருகப் பெருமானின் வாகனம்
ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர், முருகப் பெருமானின் தாய் மாமனாக கருதப்படுகிறார். முருகர், மயிலை வாகனமாகக் கொண்டவர். எனவே முருகன் தனது எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற, தன் சிரசில் கிருஷ்ணர் மயிலிறகை சூடியுள்ளார் என்றும் இன்னொரு புராணம் கூறுகிறது.

அழகும் அறிவும்
இது அழகு மற்றும் அறிவின் ஒரு சின்னமாகும். மயிலிறகில் உள்ள கண், ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக ஞானத்தின் அடையாளம். இது தன்னைப் பற்றி ஒருவர் உணர்வதற்கு உதவுகிறது. மனதின் ஞானமும் இதயத்தின் அன்பும் ஒரு மனிதனின் வாழ்வை முழுமையாக்குகிறது என்பதை இது அடையாளப்படுத்துகிறது. மேலும், இந்த அனுகிரஹ நிலை பெற, இறைவனின் மயிலிறகுடன் கூடிய தோற்றதை வழிபடுவது மிகவும் முக்கியம். இறகு, நம்மை எல்லா தீவினைகளிலிருந்தும் காத்து கோபம், பேராசை, பொறாமை, வஞ்சகங்களை அழிக்கிறது.

சொர்க்கம்
இறகுகள், ஆயிரம் கண்களைக் கொண்டது, இது சொர்க்கத்தின் திறவுகோலாக, நட்க்ஷத்திரங்களின் கண்களாக விளங்குகிறது. இதன் மாறுபட்ட வண்ணங்கள், மயிலின் இறக்க குணத்திற்கு இந்திரன் தந்த பரிசு ஆகும்.

வழியாடு
கிரகங்களின் தீய தாக்கத்தை போக்கும் சக்தியும் இறகுகளுக்கு உண்டு. ராதை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இருவரின் அனுகிரஹமும் பெற இந்த மயிலிறகு அணிந்த ரூபத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவது சிறந்தது.



Click it and Unblock the Notifications
