Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா?
ஏன் கிருஷ்ணர் தலையில மயிலிறகு வெச்சிருக்காருன்னு தெரியுமா?... அட இதுக்குதாங்க!
ஸ்ரீ கிருஷ்ணர் 5200 ஆண்டுகளுக்கு முன்பு, அதர்மத்தை அழிக்க அவதரித்தவர். ஸ்ரீமன் நாராயணனின் சக்தி வாய்ந்த அவதாரமாக கிருஷ்ணாவதாரம் போற்றப்படுகிறது. தான் ஒரு மன்னனாக முடிசூடிக்கொள்ள முடியாதவாறு சபிக்கப்பட
ஸ்ரீ கிருஷ்ணர் 5200 ஆண்டுகளுக்கு முன்பு, அதர்மத்தை அழிக்க அவதரித்தவர். ஸ்ரீமன் நாராயணனின் சக்தி வாய்ந்த அவதாரமாக கிருஷ்ணாவதாரம் போற்றப்படுகிறது. தான் ஒரு மன்னனாக முடிசூடிக்கொள்ள முடியாதவாறு சபிக்கப்பட்டாலும், பேரரசர்களையும், மாபெரும் சாம்ராஜ்ஜியங்களையும் உருவாக்கியவர் ஸ்ரீ கிருஷ்ணர்.

கிருஷ்ண பகவான் தன் மேனியில் எண்ணற்ற ஆபரணங்கள் அணிந்திருந்தாலும், அவரது மணிமகுடத்தை அலங்கரிக்கும் மயிலிறகு அவற்றில் எல்லாம் சிறப்பு வாய்ந்தது. அது கிருஷ்ணனின் சின்னமாகவும் விளங்குகிறது. பக்தர்கள் "மொர்முக்குட் தாரி", அதாவது 'மயில் இறகுகளின் கிரீடம் அணிந்தவர்' என பகவானை அன்புடன் அழைக்கின்றனர்.

புராணங்கள் என்ன கூறுகின்றன?
ஒரு முறை கோவர்தன மலையில் ஸ்ரீ கிருஷ்ணர் தன் புல்லாங்குழலில் வாசித்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த தெய்வீக கானத்தின் இனிமை பொருந்திய மெல்லிசையில் மயங்கிய மயில்கள் பரவசத்துடன் ஆடின. அப்போது உதிர்ந்த அதன் இறகுகளை எடுத்து இராஜா மயில் இறைவனுக்கு பேரன்புடன் வழங்கியது. இறைவன் அதை கருணையோடு ஏற்றுக்கொண்டு தன் சிரசில் அலங்கரித்துக்கொண்டார்.

ஏழு நிறங்கள்
மயிலிறகில் 7 முதன்மை வண்ணங்களும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இது பகவான் தன்னுள் எல்லா வண்ணங்களையும் கொண்டவர் என்பதை காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் முழு பிரபஞ்சத்தையும் தன்னுள் அடக்கியவர். அவர் பல்வேறு வடிவங்கள், காட்சிகள் மற்றும் நிலைகளில் நம்மை வழிநடத்துகிறார்.

முருகப் பெருமானின் வாகனம்
ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர், முருகப் பெருமானின் தாய் மாமனாக கருதப்படுகிறார். முருகர், மயிலை வாகனமாகக் கொண்டவர். எனவே முருகன் தனது எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற, தன் சிரசில் கிருஷ்ணர் மயிலிறகை சூடியுள்ளார் என்றும் இன்னொரு புராணம் கூறுகிறது.

அழகும் அறிவும்
இது அழகு மற்றும் அறிவின் ஒரு சின்னமாகும். மயிலிறகில் உள்ள கண், ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக ஞானத்தின் அடையாளம். இது தன்னைப் பற்றி ஒருவர் உணர்வதற்கு உதவுகிறது. மனதின் ஞானமும் இதயத்தின் அன்பும் ஒரு மனிதனின் வாழ்வை முழுமையாக்குகிறது என்பதை இது அடையாளப்படுத்துகிறது. மேலும், இந்த அனுகிரஹ நிலை பெற, இறைவனின் மயிலிறகுடன் கூடிய தோற்றதை வழிபடுவது மிகவும் முக்கியம். இறகு, நம்மை எல்லா தீவினைகளிலிருந்தும் காத்து கோபம், பேராசை, பொறாமை, வஞ்சகங்களை அழிக்கிறது.

சொர்க்கம்
இறகுகள், ஆயிரம் கண்களைக் கொண்டது, இது சொர்க்கத்தின் திறவுகோலாக, நட்க்ஷத்திரங்களின் கண்களாக விளங்குகிறது. இதன் மாறுபட்ட வண்ணங்கள், மயிலின் இறக்க குணத்திற்கு இந்திரன் தந்த பரிசு ஆகும்.

வழியாடு
கிரகங்களின் தீய தாக்கத்தை போக்கும் சக்தியும் இறகுகளுக்கு உண்டு. ராதை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இருவரின் அனுகிரஹமும் பெற இந்த மயிலிறகு அணிந்த ரூபத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவது சிறந்தது.



Click it and Unblock the Notifications











