Just In
- 27 min ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- 36 min ago கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- 1 hr ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 2 hrs ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Don't Miss
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓடும் ரயிலில் காவலர் முன் மானபங்கப் படுத்தப்பட்ட பெண் மும்பையில் பரபரப்பு - வீடியோ!
ஓடும் ரயிலில் காவலர் முன் மானபங்கப் படுத்தப்பட்ட பெண் மும்பையில் பரபரப்பு - வீடியோ!
ஆரம்பத்தில் பெண்களுக்கு எதிரான பாலியை துன்புறுத்தல்கள் நான்கு சுவற்றுக்குள் நடந்துக் கொண்டிருந்தது. நிர்பயா வழக்கில் இருந்து அது வெட்டவெளியிலும், மக்கள் கூடியிருக்கும் பொது போக்குவரத்து வாகனங்களிலும் நடக்க துவங்கியது.
நம் நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே இருக்கிறது? என்று சல்லடைப் போட்டு தான் தேட வேண்டும். வெட்ட வெளியில், பொது இடத்தில் பெண்கள்களை பாலியை துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதற்கு எங்கிருந்து ஆண்களுக்கு தைரியம் வந்தது? சட்டம் கடுமையாக இல்லை என்பதாலா? இல்லவே இல்லை. நம் கண் முன்னே நடக்கும் கொடுமைகளை மக்களாகிய நாம் யாரும் தட்டிக் கேட்பதில்லை என்பதால்.
நாம் கண்டுக் கொள்ளாமலேயே இருப்பதால் தான், மீண்டும் ஒரு பெண் மும்பையில் ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்.
சொந்த கணவன்!
ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டுதிய அந்த ஆண், வேறு யாரும் இல்லை, அந்த பெண்ணின் சொந்த கணவன். அந்த சமயத்தில் அந்த ஆள், குடி போதையில் இருந்தார் என்று அறியப்படுகிறது. இந்த சம்பவம் மும்பையின் லோக்கல் ரயிலில் நடந்துள்ளது.
ஊனமுற்றோர் கம்பார்ட்மெண்டில்...
அப்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இடமானது ஊனமுற்றோருக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு கம்பார்ட்மெண்ட் ஆகும். ஆகையால் தான் அருகே சிலர் இருந்தும் அந்த பெண்ணை காப்பாற்ற முடியாமல் போனது. அவர்களால் ரயிலை நிறுத்த செயினை இழுக்க முடியாமல் போனது. மேலும் இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்த காரணத்தால் கூட்டமும் குறைவாக இருந்ததால், யாராலும், அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.
போலீஸ் இருந்தும்...
பாதுகாப்பு கருதி லோக்கல் ரயிலில் அலாரம் வைக்கப்பட்டிருந்தும். போலீஸ் பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்ததால், ஓடும் ரயிலில் அந்த பெண்ணை காப்பாற்ற முடியாமல் போனது. சுற்றி இருக்கும் நபர்கள் மற்றும் போலீஸ் எத்தனையோ கத்தி, கூச்சலிட்டும் குடிபோதையில் இருந்த ஆணை யாராலும் தடுக்க முடியவில்லை.
கைது!
ரயில் அடுத்த நிறுத்தத்தில் நின்றதும், மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய கணவனை போலீஸ் கைது செய்தனர்.
கைது செய்து என்ன பயன்? எப்படியும் ஒருசில நாட்களில் அல்லது வாரங்களில் அவன் வெளியே வந்துவிட தான் போகிறான். ஆனால், இப்படியான கொடூரமான சமூகத்தில் இருந்து யார் தான் பெண்களை காப்பாற்றுவது.
பெப்பர் ஸ்ப்ரே!
கைப்பைக்குள் பெண்கள் மேக்கப் பொருட்கள் வைத்திருந்த நிலைமை மாறி, பெப்பர் ஸ்ப்ரே, மிளகாய் பொடி, கத்தி என வைத்துக் கொள்ளும் நிலைமைக்கு நாம் ஆளாக்கியுள்ளோம்.
நான்கு சுவர்களுக்குள் நடக்கும் தவறுக்கு கடுமையான தண்டனையும், பொது இடத்தில் நடக்கும் தவறுகளுக்கு பொதுமக்களே எதிர்த்து குரல் உயர்த்தினால் மட்டுமே இத்தகைய குற்றங்கள் குறையும்.
வீடியோ!
மும்பை லோக்கல் ரயிலில் சொந்த கணவனால், ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்மணி - வீடியோ.