Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
சொட்டை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம்! வினோத புரளியால் தொடர் கொலைகள்!
ஆப்ரிக்காவில் இருக்கும் மொசாம்பிக் எனும் நாட்டில் சொட்டை தலை மண்டையோட்டில் தங்கம் கிடைக்கும் என்ற புரளியால் கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த அரை நூற்றாண்டில் உலகம் மளமளவென்று தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் எங்கோ சென்று விட்டது. பல கிரகங்கள் கண்டுபிடித்தோம், பல ராக்கெட்டுகள் ஏவினோம் என்பதை எண்ணி மகிழ்வதா? இல்லை, இன்றளவும் ஏதேதோ மூட நம்பிக்கைகள் பின்பற்றி மக்களை ஏமாற்றி, கொலை செய்து வருவதை நினைத்து வருந்துவதா?
இன்னுமா இப்படி என வியப்பவர்களுக்கு... இதோ! ஆப்ரிக்காவில் ஒரு பகுதியில் வழுக்கை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம் தேடி தொடர் கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது...

ஆப்ரிக்கா நாடு!
ஆப்ரிக்கா கண்டத்தில் இருக்கும் ஒரு நாடு தான் மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்கள் மத்தியில் போதிய கல்வி அறிவு இல்லை. மேலும், இவர்கள் பலத்த மூல நம்பிக்கை மத்தியில் வாழ்ந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிலாங்கே மாவட்டம்!
இது போன்ற நிலையில், சமீபத்தில் இந்நாட்டில் இருக்கும் மிலாங்கே எனும் மாவட்டத்தில் யாரோ வழுக்கை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம் கிடைக்கும் என புரளியை கொளுத்து போட்டுள்ளனர்.

கொலைகள்!
மூட நம்பிக்கை நிறைந்த அந்நாட்டு மக்கள் இதை நம்பி, வழுக்கை தலையுடன் சுற்றிவந்த ஆண்களை தேடி பிடித்து கொலை செய்து தங்கம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும்3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மொசாம்பிக் போலீஸ்!
இந்த வினோத காரணத்தால் தொடரும் கொலை வழக்குகளால், மொசாம்பிக் போலீஸார் வழுக்கை தலையுடன் நடமாடி வரும் ஆண்கள் சற்று பத்திரமாக இருந்துக் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு பேர் கைது!
மொசாம்பிக் மாவட்டத்தில் சந்தேகிக்கும் வகையில் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது ஏதோ சூனியக் காரர்கள் பரப்பிய புரளியாக இருக்க வேண்டும் என சந்தேகங்கள் கிளம்பி வருகிறது.

மற்றுமொரு தொடர் கொலை...
இதே போல சரும வெளிறியதன்மையும் கொண்டுள்ள மக்கள் (Albinism People) கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் இருந்தவர்கள் கடந்த சில வருடங்களாக கொலை செய்து வந்த வழக்கும் சூனியக் காரர்களின் வேலை தான் என பரவலாக கூறப்பட்டுவந்தது.



Click it and Unblock the Notifications