Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
சொட்டை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம்! வினோத புரளியால் தொடர் கொலைகள்!
ஆப்ரிக்காவில் இருக்கும் மொசாம்பிக் எனும் நாட்டில் சொட்டை தலை மண்டையோட்டில் தங்கம் கிடைக்கும் என்ற புரளியால் கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கடந்த அரை நூற்றாண்டில் உலகம் மளமளவென்று தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் எங்கோ சென்று விட்டது. பல கிரகங்கள் கண்டுபிடித்தோம், பல ராக்கெட்டுகள் ஏவினோம் என்பதை எண்ணி மகிழ்வதா? இல்லை, இன்றளவும் ஏதேதோ மூட நம்பிக்கைகள் பின்பற்றி மக்களை ஏமாற்றி, கொலை செய்து வருவதை நினைத்து வருந்துவதா?
இன்னுமா இப்படி என வியப்பவர்களுக்கு... இதோ! ஆப்ரிக்காவில் ஒரு பகுதியில் வழுக்கை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம் தேடி தொடர் கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது...

ஆப்ரிக்கா நாடு!
ஆப்ரிக்கா கண்டத்தில் இருக்கும் ஒரு நாடு தான் மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்கள் மத்தியில் போதிய கல்வி அறிவு இல்லை. மேலும், இவர்கள் பலத்த மூல நம்பிக்கை மத்தியில் வாழ்ந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிலாங்கே மாவட்டம்!
இது போன்ற நிலையில், சமீபத்தில் இந்நாட்டில் இருக்கும் மிலாங்கே எனும் மாவட்டத்தில் யாரோ வழுக்கை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம் கிடைக்கும் என புரளியை கொளுத்து போட்டுள்ளனர்.

கொலைகள்!
மூட நம்பிக்கை நிறைந்த அந்நாட்டு மக்கள் இதை நம்பி, வழுக்கை தலையுடன் சுற்றிவந்த ஆண்களை தேடி பிடித்து கொலை செய்து தங்கம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும்3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மொசாம்பிக் போலீஸ்!
இந்த வினோத காரணத்தால் தொடரும் கொலை வழக்குகளால், மொசாம்பிக் போலீஸார் வழுக்கை தலையுடன் நடமாடி வரும் ஆண்கள் சற்று பத்திரமாக இருந்துக் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு பேர் கைது!
மொசாம்பிக் மாவட்டத்தில் சந்தேகிக்கும் வகையில் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது ஏதோ சூனியக் காரர்கள் பரப்பிய புரளியாக இருக்க வேண்டும் என சந்தேகங்கள் கிளம்பி வருகிறது.

மற்றுமொரு தொடர் கொலை...
இதே போல சரும வெளிறியதன்மையும் கொண்டுள்ள மக்கள் (Albinism People) கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் இருந்தவர்கள் கடந்த சில வருடங்களாக கொலை செய்து வந்த வழக்கும் சூனியக் காரர்களின் வேலை தான் என பரவலாக கூறப்பட்டுவந்தது.



Click it and Unblock the Notifications











