Latest Updates
-
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா? -
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம்
நாட்டில் என்ன நடந்தால் என்ன? தானுண்டு, தன் வேலையுண்டு என வாழும் ஒரே ஜீவராசி!
மக்களிடம் இருந்து பெறும் வரிப்பணத்தை அரசாங்கம் மக்களுக்கு செலவிடுகிறது. மக்களிடம் இருந்து நன்கொடை என்ற பெயரில் இவர்கள் வாங்கும் பணம் எங்கே செல்கிறது?
ரூ.500, ரூ.1000 தடை செய்தால், என்ன? தண்ணீர் வறட்சி உண்டானால் என்ன? விவசாயிகள் போராடினால் என்ன? ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன் லொட்டு, லொசுக்கு என இந்தியாவில் என்ன பிரச்சனை தலைவிரித்தாடுகிறது எனிலும், ஒரே ஒரு துறையும், அந்த துறை சார்ந்த நபர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

யாருப்பா அவங்க?
சாமியார்கள்! ஆம், பணம் தடை உத்தரவு வந்ததும், ஏழை, எளிய மக்களில் இருந்து, செல்வந்தர் வரை அனைவரும் திக்குமுக்காடி போயினர். ஆனால், இவர்கள்? தண்ணீர் வறட்சி, விவசாயம் பாதிப்படைதல், கலாச்சார விளையாட்டுக்கு தடை என ஏதேனும் ஒன்றால் கூட இவர்கள் பாதிக்கப்பட்டார்களா? என்றால் இல்லவே இல்லை என்பது தான் பதில்.

செல்ஃபி புள்ள!
ஓவர் நைட்டில் உலகம் முழுவதும் மாபெரும் பிரபலம் அடைந்தவர். ஆனால், இன்று தனது சிஷ்ய கோடிகளுடன் சேர்ந்து கட்டியணைத்து செல்ஃபி எடுத்து அப்லோட் செய்துக் கொண்டிருக்கிறார். இவரிடம் பணம், பொன், பெண் எதற்கும் பஞ்சமில்லை.

முல்லை!
புரியவில்லையா, இவருக்கு காடும், காடு சார்ந்த பகுதிகளும் என்றால் அவ்வளவு பிரியம். எங்கே வளைத்துப் போட்ட இடத்தை அரசு பிடுங்கிக் கொள்ளுமோ என சிலை வைத்து தப்பித்துக் கொண்டார். யானைகளுக்கு கரண்ட் ஷாக் கொடுப்பதில் வல்லவர். ஹாலிவுட் டூ கோலிவுட் என உலக தரத்தில் என்ஜாய் செய்கிறார் இவர்.

சிட்டுகுருவி லேகியம் முதல் 5G வரை!
இன்னும் சில ஆண்டுகளில் ஃபேஸ்புக் மார்க், மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் எல்லாம் இவருக்கு பின்னால் தான் நிற்க வேண்டும் போல. இவர் துவங்காத, கால் வைக்காத தொழிலே இல்லை என்னும் அளவிற்கு இன்று மகரிஷி பிராடக்ட் மிகவும் பிரபலம்.
இவரது அடுத்த வெளியீடு விண்டோஸ் அல்லது ஆண்ட்ராயிடை குறி வைக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

எப்படி இவங்க மட்டும்?
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... என்ற பாடலுக்கு ஏற்ப... மனிதராய் பார்த்து திருந்தாவிட்டால் இவர்களை திருத்த முடியாது. நூறு, ஐநூறு என ஏழைகள் துவங்கி, இலட்சங்கள், கோடிகள் என பிரபலங்கள், செல்வந்தர்கள் வரை இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான், இன்று இவர்கள் நாட்டு நடப்பு, அரசியல் பிரச்சனைகள், இயற்கை வறட்சிகள் என எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் சுகபோக வாழ்க்கை வாழ காரணமாக இருக்கிறது.

(ஏ)மாற்றம்!
மக்களிடம் இருந்து பெறும் வரிப்பணத்தை அரசாங்கம் மக்களுக்கு செலவிடுகிறது. மக்களிடம் இருந்து நன்கொடை என்ற பெயரில் இவர்கள் வாங்கும் பணம் எங்கே செல்கிறது? இதனால் மக்கள் எந்த அளவில் பயனடைகிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் என்ன? கோடிகளை சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, சில்லறை காசுகளை விட்டெறிந்து உதவி செய்வது நியாயம் ஆகிவிடுமா?



Click it and Unblock the Notifications