Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
அப்பல்லோவில் இந்திய அரசியலின் மிகப்பெரிய மர்மம் விதைந்த தினம் இன்று!
இந்த நாள், அந்த வருடம் - செப்டம்பர் 22, வரலாற்று நிகழ்வுகள்!
சாதாரண காய்ச்சல், சளி, மூச்சி திணறல் என்ற பெயரில் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள். இரண்டு மாதங்களுக்கும் மேலாக 74 நாட்கள் இந்தியாவின் தலைப்பு செய்தியாக மாறியது அப்பல்லோ.
தினம் ஒரு அறிக்கை, புதுப்புது மருத்துவ வார்த்தைகளில் ஏதோ பிரச்சனைகள், எழுந்துவிட்டார், பிசியோதெரபி அளிக்கப்படுகிறது, அவர் இன்று சாப்பாடு சாப்பிட்டார், நாளை மறுதினம் வீடுதிரும்பி விடுவார் என அவரை தவிர, வெறும் செய்திகள் மட்டுமே வெளிவந்தன.

எம்பாமிங் என்ற சொல்லை டிசம்பர் ஐந்தாம் நாளுக்கு முன்னர் தமிழகத்தில் பெரும்பாலானோர் அறிந்தது இல்லை. செப்டம்பர் 22 சென்னை அப்பல்லோவில் ஒரு மர்மம் விதைக்கப்பட்ட தினம் இன்று...
இந்த நாள், அந்த வருடம் : வரலாற்றில் செப்டம்பர் 22!

விடுதலை!
1499 - சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாக உதயமான தினம் செப்டம்பர் 22.
1908 - உதுமானியப் பேரரசிடம் இருந்து பல்கேரியா விடுதலை பெற்றது.
1960 - பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை பெற்றது.

அரசு!
1896 - பிரிட்டன் அரச குடும்பத்தில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பெருமையை அடைந்தார் விக்டோரியா மகாராணி.
1970 - மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியை விட்டு விலகிய தினம் இன்று.

அசம்பாவிதங்கள்!
1692 - அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
1934 - வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - யூதர்களின் புத்தாண்டில் உக்ரேனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜெர்மனியினரால் கொல்லப்பட்ட தினம் இன்று. இவர்கள் யாவரும் முதலில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் இருந்து உயிர் தப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1993 - ஜார்ஜியாவின் பயணிகள் விமானம் சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதில், 108 பேர் கொல்லப்பட்டனர்.
1995 - யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய கொலைவெறி தாக்குதல் குண்டுவீச்சு சம்பவத்தில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
1997 - அல்ஜீரியாவில் 200 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

போர்!
1944 - இரண்டாம் உலகப் போர்: ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரினுள் நுழைந்தனர்.
1965 - இந்திய-பாகிஸ்தான் போர்: ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் காஷ்மீர் தொடர்பாக உண்டான போர் முடிவுக்கு வந்த தினம் இன்று.
1980 - ஈரான் - ஈராக் போரில், ஈரானை ஈராக் நாட்டை முற்றுகையிட்டது.

பிறப்பு!
1930 - தென்னிந்தியா சினிமாவின் பழம்பெரும் முன்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் பிறந்த தினம் இன்று. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் மூன்றாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் இவர்.
1931 - தமிழ் மொழியின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் பிறந்த தினம் இன்று. இவரது இயற்பெயர் தியாகராஜன் ஆகும். ஆந்திராவை சேர்ந்த அசோகமித்திரன், தனது தந்தையின் மறைவிற்கு பிறகு 21 வயதில் சென்னை வந்தார். எளிமை மற்றும் நகைச்சுவை கலந்த இவரது தமிழ் நடை பெரிய அங்கீகாரம் பெற்றது.



Click it and Unblock the Notifications