Latest Updates
-
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
முழுக்க, முழுக்க பீர் பாட்டில்களால் கட்டப்பட்டிருக்கும் புத்தர் கோவில்!
புத்தர் என்றாலே முற்றும் துறந்தவர், ஆசைகள் இல்லாதவர் என அறிவோம். ஆனால், தாய்லாந்தில் ஒரு புத்தர் கோவில் வினோதமாக பீர் பாட்டில்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
புத்தர் என்றாலே முற்றும் துறந்தவர், ஆசைகள் இல்லாதவர் என அறிவோம். ஆனால், தாய்லாந்தில் ஒரு புத்தர் கோவில் வினோதமாக பீர் பாட்டில்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
அங்கே வாழும் லோக்கல் மக்கள் இது புத்த மதத்தை பின்பற்றுபவர்களை மனவருத்தம் அடைய செய்யும் என்று தான் எண்ணினர். ஆனால், கட்டிடம் முழுக்க கட்டி முடிக்கப்பட்ட பிறகு அவர்கள் கண்டது வேறு...

80-களில்...
இப்படி ஒரு கோயிலை கட்ட வேண்டும் என்பது இப்போது தோன்றிய ஐடியா இல்லை. 80-களின் மத்தியில் அப்போது வாழ்ந்த துறவிகள் இப்படி ஒரு பாட்டில்கள் கொண்ட கோவிலை கட்ட தீர்மானம் செய்துள்ளனர். அதன் பிறகு மக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட காலி பாட்டில்கள் கொண்டு இந்த புதிய கோவிலை கட்டி முடித்துள்ளனர்.

மில்லியன் கணக்கில்...
துறவிகள் பாட்டில்கள் நன்கொடையாக வாங்க ஆரம்பித்த பிறகு, அவர்கள் எண்ணியதை காட்டிலும் அதிக பாட்டில்கள் கிடைத்தன. எனவே, அதன் பிறகு, ஒவ்வொரு வடிவ பாட்டில்களை கொண்டு கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியை, படிகளை, கூரையை, நடக்கும் இடங்களை கட்டலாம் என பிரித்தனர். அதன் ரிசல்ட்டாக தான் இந்த கோவில் மிக அழகான தோற்றம் கொண்டுள்ளது.

முழுக்க, முழுக்க...
இந்த கோவில் முழுக்க முழுக்க பீர் பாட்டில்கள் கொண்டே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எப்படி சிறப்பாக, அழகாக கட்ட முடியும் என யோசித்து, வியக்கும்படியான கட்டிடமாக முடித்துள்ளனர். கழிவறை முதல் பிணங்களை எரிக்கும் இடம் வரை முழுக்க பீர் பாட்டில்கள் கொண்டே கட்டியுள்ளனர்.

புத்தர் சிலைகள்!
இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ளது புத்தர் சிலைகள் ஆகும். பாட்டிலை பயன்படும் வகையில் இப்படி ஒரு ஐடியா கொண்டு, இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இவர்கள் கலைநயத்துடன் கோவிலை கட்டி முடித்துள்ளனர்.
All Image Source



Click it and Unblock the Notifications











