Latest Updates
-
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்!
முழுக்க, முழுக்க பீர் பாட்டில்களால் கட்டப்பட்டிருக்கும் புத்தர் கோவில்!
புத்தர் என்றாலே முற்றும் துறந்தவர், ஆசைகள் இல்லாதவர் என அறிவோம். ஆனால், தாய்லாந்தில் ஒரு புத்தர் கோவில் வினோதமாக பீர் பாட்டில்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
புத்தர் என்றாலே முற்றும் துறந்தவர், ஆசைகள் இல்லாதவர் என அறிவோம். ஆனால், தாய்லாந்தில் ஒரு புத்தர் கோவில் வினோதமாக பீர் பாட்டில்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
அங்கே வாழும் லோக்கல் மக்கள் இது புத்த மதத்தை பின்பற்றுபவர்களை மனவருத்தம் அடைய செய்யும் என்று தான் எண்ணினர். ஆனால், கட்டிடம் முழுக்க கட்டி முடிக்கப்பட்ட பிறகு அவர்கள் கண்டது வேறு...

80-களில்...
இப்படி ஒரு கோயிலை கட்ட வேண்டும் என்பது இப்போது தோன்றிய ஐடியா இல்லை. 80-களின் மத்தியில் அப்போது வாழ்ந்த துறவிகள் இப்படி ஒரு பாட்டில்கள் கொண்ட கோவிலை கட்ட தீர்மானம் செய்துள்ளனர். அதன் பிறகு மக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட காலி பாட்டில்கள் கொண்டு இந்த புதிய கோவிலை கட்டி முடித்துள்ளனர்.

மில்லியன் கணக்கில்...
துறவிகள் பாட்டில்கள் நன்கொடையாக வாங்க ஆரம்பித்த பிறகு, அவர்கள் எண்ணியதை காட்டிலும் அதிக பாட்டில்கள் கிடைத்தன. எனவே, அதன் பிறகு, ஒவ்வொரு வடிவ பாட்டில்களை கொண்டு கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியை, படிகளை, கூரையை, நடக்கும் இடங்களை கட்டலாம் என பிரித்தனர். அதன் ரிசல்ட்டாக தான் இந்த கோவில் மிக அழகான தோற்றம் கொண்டுள்ளது.

முழுக்க, முழுக்க...
இந்த கோவில் முழுக்க முழுக்க பீர் பாட்டில்கள் கொண்டே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எப்படி சிறப்பாக, அழகாக கட்ட முடியும் என யோசித்து, வியக்கும்படியான கட்டிடமாக முடித்துள்ளனர். கழிவறை முதல் பிணங்களை எரிக்கும் இடம் வரை முழுக்க பீர் பாட்டில்கள் கொண்டே கட்டியுள்ளனர்.

புத்தர் சிலைகள்!
இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ளது புத்தர் சிலைகள் ஆகும். பாட்டிலை பயன்படும் வகையில் இப்படி ஒரு ஐடியா கொண்டு, இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இவர்கள் கலைநயத்துடன் கோவிலை கட்டி முடித்துள்ளனர்.
All Image Source



Click it and Unblock the Notifications