Latest Updates
-
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுப்பவர்கள், இதையும் தெரிஞ்சுக்கிட்டு பேசுனா கொஞ்சம் நல்லா இருக்கும்!
மிருக வதை என கூறி தான் ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டுள்ளனர். ஆனால், இந்த விதிகள், விதிமுறைகளில் எங்கு வதை ஏற்படுகிறது.
ஏறுதழுவுதல் எனும் இயற்பெயர் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. குறிப்பாக இளைய தலைமுறை ஆண்கள் சமூக தளங்கள் மூலமாக பெரும் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.
சென்ற வாரம் மெரீனாவில் பெரும் கூட்டமாக திரண்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி, மதுரை, கோவை போன்ற இடங்களிலும் ஆதரவு கூட்டங்கள் தொடரும் என இளைஞர்கள் அறிவிப்புகள் பதிவு செய்தவண்ணம் இருக்கின்றனர்.
மிருக வதை என கூறி தடை செய்யப்பட்ட ஏறுதழுவுதல் விளையாட்டின் உண்மை விதிமுறைகள் என்னென்ன என்பது பற்றி இங்கு காணலாம்...

வாடிவாசல்!
ஏறுதழுவுதல் காளைகளை வாடிவாசல் வழியாக மட்டும் தான் காலத்தினுள் அனுப்ப வேண்டும் / அனுப்பப்படும்!

திமில்!
வீரர்கள் காளையின் திமிலில் மட்டுமே தொங்க வேண்டும். ஒரே சமயத்தில் இருவர் காளையின் திமிலை பிடித்து தொங்க கூடாது.

எல்லைக் கோடு!
காளையின் திமிலை பிடித்து தொங்கியப்படி வரையறுக்கப்பட்ட எல்லை கோடு வரை செல்ல வேண்டும். இந்த தூரம் ஏறத்தாழ ஐம்பது மீட்டர் வரை இருக்கும்.

காளை வெற்றி!
வீரர்களை காளை தூக்கி எறிந்தாலோ, யாராலும் காளையை பிடிக்க முடியாமல் போனாலோ அந்த காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

வீரர் வெற்றி!
களத்தில் ஓடும் காளையின் திமிலை பிடித்து குறிப்பிட்ட தூரம் வரை செல்லும் வீரர் வெற்றியாளர் என அறிவிக்கட்டப்படுவார்கள்.

விதிகள்!
- திமிலை ஒருவருக்கு மேல் ஒரே நேரத்தில் பிடித்து தொங்க கூடாது.
- திமிலை தவிர காளையின் வால் அல்லது கழுத்து பகுதியை பிடித்து தொங்க கொடாது.
- திமிலை தவிர காளையை வேறு இடத்தில் பிடித்து தொங்கினால் அந்த வீரர் நீக்கப்படுவார்.
- காளையை வீரர்கள் சீண்டவோ, அடிக்கவோ கூடாது.



Click it and Unblock the Notifications











