Latest Updates
-
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை!
ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுப்பவர்கள், இதையும் தெரிஞ்சுக்கிட்டு பேசுனா கொஞ்சம் நல்லா இருக்கும்!
மிருக வதை என கூறி தான் ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டுள்ளனர். ஆனால், இந்த விதிகள், விதிமுறைகளில் எங்கு வதை ஏற்படுகிறது.
ஏறுதழுவுதல் எனும் இயற்பெயர் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. குறிப்பாக இளைய தலைமுறை ஆண்கள் சமூக தளங்கள் மூலமாக பெரும் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.
சென்ற வாரம் மெரீனாவில் பெரும் கூட்டமாக திரண்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி, மதுரை, கோவை போன்ற இடங்களிலும் ஆதரவு கூட்டங்கள் தொடரும் என இளைஞர்கள் அறிவிப்புகள் பதிவு செய்தவண்ணம் இருக்கின்றனர்.
மிருக வதை என கூறி தடை செய்யப்பட்ட ஏறுதழுவுதல் விளையாட்டின் உண்மை விதிமுறைகள் என்னென்ன என்பது பற்றி இங்கு காணலாம்...

வாடிவாசல்!
ஏறுதழுவுதல் காளைகளை வாடிவாசல் வழியாக மட்டும் தான் காலத்தினுள் அனுப்ப வேண்டும் / அனுப்பப்படும்!

திமில்!
வீரர்கள் காளையின் திமிலில் மட்டுமே தொங்க வேண்டும். ஒரே சமயத்தில் இருவர் காளையின் திமிலை பிடித்து தொங்க கூடாது.

எல்லைக் கோடு!
காளையின் திமிலை பிடித்து தொங்கியப்படி வரையறுக்கப்பட்ட எல்லை கோடு வரை செல்ல வேண்டும். இந்த தூரம் ஏறத்தாழ ஐம்பது மீட்டர் வரை இருக்கும்.

காளை வெற்றி!
வீரர்களை காளை தூக்கி எறிந்தாலோ, யாராலும் காளையை பிடிக்க முடியாமல் போனாலோ அந்த காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

வீரர் வெற்றி!
களத்தில் ஓடும் காளையின் திமிலை பிடித்து குறிப்பிட்ட தூரம் வரை செல்லும் வீரர் வெற்றியாளர் என அறிவிக்கட்டப்படுவார்கள்.

விதிகள்!
- திமிலை ஒருவருக்கு மேல் ஒரே நேரத்தில் பிடித்து தொங்க கூடாது.
- திமிலை தவிர காளையின் வால் அல்லது கழுத்து பகுதியை பிடித்து தொங்க கொடாது.
- திமிலை தவிர காளையை வேறு இடத்தில் பிடித்து தொங்கினால் அந்த வீரர் நீக்கப்படுவார்.
- காளையை வீரர்கள் சீண்டவோ, அடிக்கவோ கூடாது.



Click it and Unblock the Notifications