Latest Updates
-
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
மனிதர்களை மீண்டும் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவிற்கு இதனால் ஆபத்து உள்ளதா? -
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சி வேண்டுமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா? -
மே மாதத்தில் உருவாகப்போகும் ரவி யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
40 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 'டயட் சார்ட்' குறித்து பகிர்ந்து கொண்ட டாக்டர்.பிள்ளை! -
கோடை வெயிலுக்கு இதமான வீடு வேண்டுமா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், அதிர்ஷ்டம் தேடி வரும்!
ஹாட் சம்மர கூல் ஆக்கனுமா? இதோ! வெறும் ரூ.5-க்கு பீர்! - எங்க? எப்போ இருந்து?
பிரபல பீர் விற்பனை நிறுவனம் ஒன்று கோடை கால ஆஃபர் விலையில் பீர் ஐந்து ரூபாய் விற்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
சென்ற 2016 வருடம் தான் உலகத்தின் மிகவும் மோசமான அளவில் வெப்பம் வாட்டியெடுத்த ஆண்டு என பதிவாகியுள்ளது. ஆனால், 2016-க்கு நாம் சற்றும் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வெப்பத்தை மக்கள் மீது வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது நடப்பு 2017-ம் ஆண்டு.
புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுவது போல, வெயில் வாட்டும் நாட்களில் பீர் குடித்து ஆற்றுபவரும் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு குளிர்ச்சியான ஆஃபரை வெளியிட்டுள்ளது ஒரு பிரபல பீர் விற்பனை மையம்...

பதட்டம்!
பீர் வாங்கும் போது, கூலான பீர் கிடைக்கவில்லை என்றாலே, பலருக்கு பதட்டமும், கோபமும் தொற்றிக் கொள்ளும். அதுவே, அந்த ஜில் பீர் மிக குறைந்த விலைக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?

தி பீர் கேப்!
பெங்களூர், மும்பை, டெல்லி, புனே, சண்டிகர் போன்ற இந்தியாவின் பல முன்னணி நகரங்களில் பல கிளைகள் கொண்டு இயங்கி வரும் பீர் விற்பனை மையம் தி பீர் கேப்.

ஐந்து ரூபாய்!
தி பீர் கேப் எனும் இந்த பீர் விற்பனை மையம், தங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு ஆஃபர் அளித்துள்ளது. அந்த பார்ட்டி மிகவும் சுவாரஸ்யம் ஆனதற்கான ஒரே காரணம் ஐந்து ரூபாய்க்கு பீர் என்பது தான்.

எல்லா கிளைகளிலும்!
தங்கள் அனைத்து கிளைகளிலும் இந்த ஆஃபரை அறிவித்துள்ளது தி பீர் கேப் விற்பனை மையம். ஆனால், இதற்கு ஒரு நிபந்தனையும் விதித்துள்ளனர்.

நிபந்தனை!
நீங்கள் குடிக்கும் முதல் பீரின் விலை, விலை பட்டியலில் குறிப்பிட்ட பணம் கொடுத்து வாங்க வேண்டும், அதன் பிறகு நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு இரண்டாவது பீர் தான் ஆஃபர் விலையில் கொடுக்கப்படும். இது அனைத்து வகை பானங்களுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
என்று வரை!
வரும் ஏப்ரல் 15-ம் நாள் வரை இந்த ஆஃபர் தங்களுடைய கிளைகளில் இருக்கும் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications