Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
அனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீட்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்?
அனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீட்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்
வீட்டில் பணம் மட்டும் இருந்தால் அனைத்தும் கிடைத்துவிடாது. தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி என அனைத்தும் இருக்க வேண்டியது அவசியம். இவை அனைத்தையும் வழங்குபவள் மகாலட்சுமி. லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருட்களாக, நம்முன்னோர்கள் வலியுறுத்தும் பொருட்களை வீட்டில் வைத்தால், அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

கல்கண்டு
இனிப்பு பொருட்கள் என்றால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். எனவே கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.

மஞ்சள், குங்குமம்
மஞ்சள் குங்குமம் என்றாலே லட்சுமி கடாட்சம் தான் நினைவில் வரும். இவை மங்களகரமாகவும், லட்சுமிக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

கல் உப்பு
பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது. அதனால் தான் பணத்தை போலவே உப்பையும் கடனாக கொடுக்க கூடாது என்பார்கள்.

வில்வ இலை
வில்வமரத்தில் லட்சுமி வசிப்பதால், அதற்கு 'லட்சுமி வாசம்' என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது சாதக நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.

சுத்தம்
வீட்டின் முற்றத்தில் சானத்தில் மெழுகுதல் கோலமிடுதல், அதில் பூக்களை வைத்தல் போன்றவையாவும், மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் அமைப்பாகும். காலையில் தலைவாயிலைத் துய்மை படுத்தி படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து லட்சுமியைத் துதிக்க வேண்டும். இவற்றையெல்லாம் தினசரி செய்து வந்தால் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாகும்.

வாஸ்து விதி 1
கஷ்டப்பட்டு சம்பாதித்தால் மட்டும் போதாது. அதை பாதுகாக்கவும், பல்கிப்பெருக செய்யவும் வேண்டும். எவ்வளவு சம்பாதித்தாலும் தங்குவதே இல்லை என்று சிலர் புலம்புவார்கள். வீட்டில் காசு தங்குவதற்கு வாஸ்து சாஸ்திரம் சில வழிமுறைகளை கூறுகிறது.

வாஸ்து விதி 2
பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால், அது எப்போதும் காலியாத்தான் இருக்குமாம். அதில் வைத்து எடுக்கிற அளவுக்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். வடகிழக்கு திசையை நோக்கி பணப்பெட்டியை வைத்தால் வரவுக்கு மீறிய செலவு வரும்.

வாஸ்து விதி 3
தென் கிழக்கில் பணப்பெட்டியை வைத்தால் அக்னியில் போட்ட மாதிரி உடனே கரையும். வீட்டு பூஜை அறையில் சாமி படங்களை மேற்கு திசை நோக்கி வைத்தால் கூட வரவும், செலவும் சரியாக இருக்கும்.

வாஸ்து விதி 4
சாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்தீர்களானால் பணம் வருவதும், போவதுமாக இருக்கும். பணப்பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு என்பது வாஸ்து அறிந்தவர்களின் வாக்கு.



Click it and Unblock the Notifications











