Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா?
பில்லி, சூனியம் வைக்க பெண் குழந்தை உடலில் ஊசிகளை புகுத்திய கொடூரன்!
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கொல்கத்தாவின் ஒரு மருத்துவமனையில் உள்ளுறுப்புகளில் பல காயங்களுடன் 3 வயது குழந்தை அனுமதிக்கப்பட்டது.
இன்றளவும் இந்தியாவில் பில்லி, சூனியம் வைக்கும் நிகழ்வுகள் பல இடங்களில் நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன. இதை அவ்வப்போது நாமும் செய்திகளில் கண்டுதான் வருகிறோம்.
ஆனால், இது போன்ற சம்பவங்களுக்கு பின்னணியல் பலர் உயிரிழந்து வருகிறார்கள் என்பதை நாம் பெரிதாக கவனித்ததில்லை.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கொல்கத்தாவின் ஒரு மருத்துவமனையில் உள்ளுறுப்புகளில் பல காயங்களுடன் 3 வயது குழந்தை அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தையின் உடலில் பெரியளவிலான ஊசிகள் குத்தப்பட்டிருந்தன.

மருத்துவமனையில் அனுமதி!
அதிக காய்ச்சல் என்ற ரீதியில் அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் தாய், தனது முதலாளி துன்புறுத்திய காரணத்தால் தான் காய்ச்சல் வந்தது என எண்ணினார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஊசிகள்!
ஆனால், சோதனையின் போது குழந்தையின் உடலில் நான்கு அங்குல அளவிலான ஏழு ஊசிகள் சொருகப்பட்திருந்ததை அறிந்தனர். கல்லீரல் மற்றும் சிறுநீர் பையில் இரண்டு ஊசிகள், சிறுநீரகம், பெண்ணுறுப்பு, வயிற்றின் அடிபகுதியில் ஒவ்வொரு ஊசிகள் இருந்ததை பரிசோதனையில் கண்டறிந்தனர்.

மரணம்!
அந்த ஊசிகளை மருத்துவர்களால் அகற்ற முடியவில்லை. அகற்றுவதன் காரணமாக மேலும், இன்பெக்ஷன் அல்லது பிரச்சனை அதிகரிக்குமோ என அஞ்சினர்.
மூன்று நாட்கள் போராட்டத்திற்கு பிறகு அந்த ஊசிகளை மருத்துவர்கள் அகற்றினர். பிறகு இன்பெக்ஷன் பரவாமல் தடுக்க மருந்துகள் கொடுத்து பரிசோதனை செய்து வந்தனர்.
ஆனால், பரிதாபத்திற்குரிய குழந்தை, நோய் தொற்றை எதிர்கொள்ள முடியாமல் மடிந்து போனது. அந்த ஊசிகளின் காரணத்தால் உடல் முழுவதும் இன்பெக்ஷன் பரவியதன் காரணமாக அந்த குழந்தை இறந்ததாக காரணம் கூறப்பட்டது.

அந்நபர்!
குழந்தையின் தாய் வேலை செய்து வந்த இடத்தின் உரிமையாளர் தான் இது போன்ற பில்லி, சூனிய வேலைகள் செய்து வந்தவர். ஊசிகளை குத்தி கொடுமைப்படுத்திய அந்த நபருக்கான தண்டனை ஏதும் கிடைக்கவில்லை. இந்தியாவில் இதை எதிர்பார்ப்பது கடினம் தான்.

எத்தனை வழக்கள்!
தொழில்நுட்பங்கள் அதிகவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும், முட்டாள்தனமான காரியங்களில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு எத்தனையோ பேர் பரிதாபமாக உயிரிழந்தும் வருகிறார்கள். இதற்கான முடிவு தான் என்ன?



Click it and Unblock the Notifications











