Latest Updates
-
சனிபகவான் 27 ஆண்டுக்கு பின் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
பிறந்ததில் இருந்து மனித குரங்குகளுடன் வாழ்ந்து வரும் 8 வயது சிறுமி - வீடியோ!
எட்டு வயது பெண் தனியே காட்டில் குரங்குகளுடன் வசித்து வந்தது தெரிய வந்ததுள்ளது. இவர் குரங்குகள் போலவே வாழ்ந்து வந்துள்ளார். எத்தனை வருடமாக இவர் இப்படி வாழ்ந்து வருகிறார் என யாருக்கும் தெரியவில்லை.
மோக்லி என்ற கதாபாத்திரத்தையும் அதன் சுட்டித்தனத்தையும் யாரால் மறக்க முடியும். இந்தியாவின் தார்சான் மோக்லி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்த மோக்லி நிஜமாகவே இந்தியாவில் இருந்தால் நீங்கள் எவ்வளவு ஆச்சரியப்படுவீர்களோ, அவ்வளவு ஆச்சரியத்தை அள்ளித்தருகிறாள் உத்திரபிரதேசம் - நேபாளம் எல்லையில் வனப்பகுதியில் மனித குரங்குகளுடன் வாழ்ந்து வரும் இந்த சிறுமி.

மனிதரை போல அல்ல...
இந்த சிறுமியால் சாதாரண மனிதர்களை போல நடக்க, பேச முடிவதில்லை. போலிஸ் ரோந்து வாகனத்தின் சோதனையின் போது இந்த ரியல் மோக்லி அவர்களது கண்களில் தென்பட்டுள்ளார். எவ்வளவோ பேச முயன்றும், அவருடன் சரியாக உரையாக முடியாமல் போனது. இவர் குரங்குகளை போல நான்கு கால்களில் தான் நடக்கிறார்.

மனித குரங்குகள் தான் சௌகரியம்!
உத்திரபிரதேசம் - நேபாளம் எல்லையில் அமைந்திருக்கும் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் பகுதியில் வாழும் மனித குரங்குகளுடன் வாழ்வதில் தான் இவர் சௌகரியமாக உணர்கிறார்.

முன்னேற்றம் இல்லை!
இரண்டு மாதங்களுக்கு முன் இவரை கண்டெடுத்துள்ளனர். ஆனால், இதுநாள் வரை இவரிடம் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரண்டு கால்களில் எப்படி நடப்பது என கற்றுக் கொடுத்தாலும், இவர் நான்கு கால்களில் மனித குரங்குகள் நடப்பது போன்று தான் நடக்கிறார்.
காணொளிப்பதிவு!
ரியல் இந்தியன் மோக்லியின் காணொளிப்பதிவு!

மோக்லி கற்பிக்கும் பாடங்கள்!




Click it and Unblock the Notifications











