Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
பிறந்ததில் இருந்து மனித குரங்குகளுடன் வாழ்ந்து வரும் 8 வயது சிறுமி - வீடியோ!
எட்டு வயது பெண் தனியே காட்டில் குரங்குகளுடன் வசித்து வந்தது தெரிய வந்ததுள்ளது. இவர் குரங்குகள் போலவே வாழ்ந்து வந்துள்ளார். எத்தனை வருடமாக இவர் இப்படி வாழ்ந்து வருகிறார் என யாருக்கும் தெரியவில்லை.
மோக்லி என்ற கதாபாத்திரத்தையும் அதன் சுட்டித்தனத்தையும் யாரால் மறக்க முடியும். இந்தியாவின் தார்சான் மோக்லி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்த மோக்லி நிஜமாகவே இந்தியாவில் இருந்தால் நீங்கள் எவ்வளவு ஆச்சரியப்படுவீர்களோ, அவ்வளவு ஆச்சரியத்தை அள்ளித்தருகிறாள் உத்திரபிரதேசம் - நேபாளம் எல்லையில் வனப்பகுதியில் மனித குரங்குகளுடன் வாழ்ந்து வரும் இந்த சிறுமி.

மனிதரை போல அல்ல...
இந்த சிறுமியால் சாதாரண மனிதர்களை போல நடக்க, பேச முடிவதில்லை. போலிஸ் ரோந்து வாகனத்தின் சோதனையின் போது இந்த ரியல் மோக்லி அவர்களது கண்களில் தென்பட்டுள்ளார். எவ்வளவோ பேச முயன்றும், அவருடன் சரியாக உரையாக முடியாமல் போனது. இவர் குரங்குகளை போல நான்கு கால்களில் தான் நடக்கிறார்.

மனித குரங்குகள் தான் சௌகரியம்!
உத்திரபிரதேசம் - நேபாளம் எல்லையில் அமைந்திருக்கும் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் பகுதியில் வாழும் மனித குரங்குகளுடன் வாழ்வதில் தான் இவர் சௌகரியமாக உணர்கிறார்.

முன்னேற்றம் இல்லை!
இரண்டு மாதங்களுக்கு முன் இவரை கண்டெடுத்துள்ளனர். ஆனால், இதுநாள் வரை இவரிடம் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரண்டு கால்களில் எப்படி நடப்பது என கற்றுக் கொடுத்தாலும், இவர் நான்கு கால்களில் மனித குரங்குகள் நடப்பது போன்று தான் நடக்கிறார்.
காணொளிப்பதிவு!
ரியல் இந்தியன் மோக்லியின் காணொளிப்பதிவு!

மோக்லி கற்பிக்கும் பாடங்கள்!




Click it and Unblock the Notifications