Latest Updates
-
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா?
120 மனைவி, 203 பிள்ளைகள்... கடவுளின் நேரடி உத்தரவு என லீலை புரிந்த ஆப்ரிக்க போதகர்!
பாபா மசாபா என்கிற முகமது பெல்லோ அபூபக்கர். இவர் பெரு ஆப்ரிக்கா போதகர். இவருக்கு 120 மனைவிகளும், 203 குழந்தைகளும் இருக்கின்றனர்.
இந்திய சாமியார்களில் சிலர் பாலியல் வன்கொடுமை செய்யததாக, ஆசிரமத்தில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்ட, வழக்கு பதியப்பட்ட நிகழ்வுகளை நாம் கண்டிருப்போம்.
ஆனால், ஆப்ரிக்காவை சேர்ந்த ஒரு போதகர் கடவளின் நேரடி ஆணை என கூறி 120 பெண்களை திருமணம் செய்து 203 குழந்தைகள் பெற்றுள்ளார்...

யாரு சாமி இவரு?
இவரது இயற்பெயர் முகமது பெல்லோ, அபூபக்கர். ஆனால், இவர் பாபா மசாபா என பரவலாக அழைக்கப்பட்டு வந்தார். அபூபக்கர் நைஜீரியாவை சேர்ந்தவர் இவர் இந்த வருடம் ஜனவரி மாதம் 17ம் தேதி காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணையும், பிள்ளைகளும்!
இவர் இறக்கும் முன் வரை 120 திருமணங்கள் செய்திருந்தார். மேலும், இவரது மனைவியர் மூலம் இவருக்கு 203 குழந்தைகள். 120 மனைவிகளில் இவர் 10 பேரை விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாம் கம்யூனிட்டி நோட்டீஸ்!
பொதுவாக அதிகபட்சம் இஸ்மால் மதத்தை சேர்ந்த ஒரு நபர் நன்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக் கொண்டதால் இவர் மீது ஃபத்வா (fatwa) பிறப்பிக்கப்பட்டது.

2008-ல்..
பாபா மசாபா பற்றி 2008-ல் பிபிசிக்கு அவரது மனைவியர் சிலர் பேட்டி அளித்தனர். அதில், தாங்கள் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு தீர்வு காண அவரை பார்க்க சென்றோம் என்றும், அவர் எங்களை குணமாக்கினார் என்றும் கூறியிருந்தனர்.

கடவுளின் செயல்!
பாபா மசாபா, "தானாக எந்த ஒரு பெண்ணையும் தேடி செல்லவில்லை என்றும், அவர்களாக என்னை தேடி வந்தார்கள் நான் ஏற்றுக் கொண்டேன். இது கடவுளின் செயல் என்றும் பல பேட்டிகளில் கூறியிருந்தார்.

கணியாட் முகமது பெல்லா!
பாபா மசாபாவை திருமணம் செய்து இருபது ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த மூத்த மனைவி கணியாட் முகமது பெல்லா, "நான் பள்ளி பயிலும் போது என்னை என் தாய் இவரிடம் அழைத்து சென்றார்.
பிறகு என்னை இவரை திருமணம் செய்துக் கொள்ள கூறினார். நான் இவ்வளவு வயதான நபரை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என மறுத்தேன். ஆனால், அதற்கு பாபா மசாபா இது கடவுளின் நேரடி உத்தரவு என கூறி திருமணம் செய்துக் கொண்டார்" என பதில் கூறியிருந்தார்.



Click it and Unblock the Notifications