Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பலரும் அறியாத வைகை புயல் வடிவேலுவின் சோகமான ஆரம்பக் கால வாழ்க்கை!
பலரும் அறியாத வைகை புயல் வடிவேலும் சோகமான ஆரம்பக் கால வாழ்க்கை!
அப்பா - நடராசன், அம்மா - சரோஜினி அம்மாள், வைகை புயலை பெற்றெடுத்தவர்கள். இவருக்கு கன்னிகா, கார்த்திகா, கலைவாணி என மூன்று மகள்கள் மற்றும் சுப்பிரமணி என்ற மகனும் இருக்கிறார்.
வடிவேலு மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவர் என பலமுறை மேடைகளில் கூறியுள்ளார். ஆம், இவர் பள்ளிக்கூடமே சென்றதில்லையாம். தனது சிறுவயதில் நண்பர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன நாடகங்களில் நகைச்சுவை நடிகர் வேடம் ஏற்று நடித்து அசத்தியுள்ளார்.

அப்பாவின் மரணம்!
எதிர்பாராதவிதமாக அப்பா மரணம் அடைய, வடிவேலுவின் குடும்பம் மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டது. பிறகு, மதுரையில் புகைப்படங்களுக்கு ஃபிரேம் மாட்டும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார் வடிவேலு.

ராஜ்கிரண் வருகை!
வடிவேலுவின் ஊருக்கு ஒருமுறை ராஜ்கிரண் சென்றிருந்தார். அப்போது, நடிகர் ராஜ்கிரணுடன் வடிவேலுக்கு அறிமுகம் கிடைத்தது. இந்த உறவின் பலனாக சென்னையில் ராஜ்கிரண் வீடு மற்றும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் வடிவேலு.

என் ராசாவின் மனசிலே!
வடிவேலுவின் நடிப்பு திறனை கண்டு, தனது என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பளித்தார் ராஜ்கிரண். தான் நடித்த முதல் படத்திலேயே போடா, போடா புண்ணாக்கு என்ற பாடலையும் பாடியிருந்தார் வடிவேலு!

செந்தில், கவுண்டமணி!
ஆரம்பக் காலத்தில் செந்தில், கவுண்டமணியுடன் சேர்ந்து சின்ன, சின்ன நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் வடிவேலு.
இவர் முதல் முறையாக தனி நகைச்சுவை நடிகராக நடித்து தனது திறமையை நிலைநாட்டிய படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன். இதன் பிறகே தனி முதன்மை நகைச்சுவை நடிகராக வடிவேலு தலைதூக்க ஆரம்பித்தார்.

1990-2000!
1990களின் இறுதிகளில் இருந்து, 2000 துவக்க ஆண்டுகள் என குறுகிய காலத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக உருமாறினார் நடிகர் வடிவேலு. 2003ல் வெளியான வின்னர் வடிவேலுவின் திரை பயணத்தில் ஒரு மைல்கல் என கூறலாம்.

பழையதை மறக்காத மனம்!
தனது ஆரம்பக் கால வாழ்க்கை ஏழ்மையை மறக்காத வடிவேலு, தனது மகனுக்கு சிவகங்கையில் கூரை வீட்டில் வசித்து வந்த ஓர் ஏழை பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.



Click it and Unblock the Notifications











