Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
ஒரே மாதத்தில் 4 பேர், மொத்தம் 11 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்மணி!
ஒரே மாதத்தில் 4 பேருடன் திருமணம், மொத்தம் 11 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பலே கில்லாடி பெண்மணி!
இதுவரை நாம் செய்திகளில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களை கண்டிருப்போம். ஆனால், தாய்லாந்தை சேர்ந்த ஒரு பெண் அவர்களது பாரம்பரிய வழக்கத்தை கையாண்டு 11 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4 பேரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 11 பேரை ஏமாற்ற இந்த பலே கில்லாடி பெண் ஃபேஸ்புக்கை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தியுள்ளார். இதன் மூலமாக நட்பாகி, அவர்களுடன் உறவு கொண்டு, திருமணம் செய்து பணம்பறித்து ஏமாற்றியுள்ளார்...

11 பேர்!
தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களில் 11 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரே மாதத்தில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
Image Credit: ตีแผ่ / Facebook

தாய்லாந்து பாரம்பரியம்!
தாய்லாந்து நாட்டின் பாரம்பரியத்தில் மணமகன் குடும்பம், மணமகள் குடும்பத்திற்கு டவுரியாக குறிப்பிட்ட பணம் கொடுக்க வேண்டும். அப்படி, இந்த பெண்மணி 11 ஆண்களிடம் இருந்து ஆறாயிரம் டாலர்களில் இருந்து முப்பதாயிரம் டாலர்கள் வரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.
Image Credit: ตีแผ่ / Facebook

தப்பித்து ஓட்டம்!
ஒவ்வொரு திருமணத்திற்கு பிறகும், எனது குடும்ப தொழிலில் பிரச்சனை, ஜாதகத்தில் கோளாறு என பல்வேறு சாக்குப்போக்கு சொல்லி தப்பித்து ஓடியுள்ளார் இந்த பலே கில்லாடி பெண்மணி.
Image Credit: ตีแผ่ / Facebook

ஃபேஸ்புக்கில் மாட்டினார்!
இந்த பெண் ஒவ்வொரு முறையும் ஃபேஸ்புக்கில் தனது படங்களை பதிவு செய்து தான் ஆண்களை மயக்கியுள்ளார். முதலில் நட்பாக பழகி, செக்ஸ் வைத்துக் கொண்டு, பிறகு திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளார். அதே ஃபேஸ்புக் பதிவுகள் மூலமாகவே இவர் மாட்டியிருக்கிறார்.
Image Credit: ตีแผ่ / Facebook

11ல் ஒருவர்!
பிரசார்ன் தியாமியம் எனும் ஒருவர், இந்த பெண்மணியிடம் 2015ல் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு பழகி, திருமணம் செய்து ஏமார்ந்ததை ஊடகத்தில் கூறியுள்ளார்.
நட்பாகி ஒன்பதாவது மாதத்தில், அந்த பெண்மணி கர்ப்பமாகியுள்ளார். அதற்கு பிறகே திருமணம் நடந்துள்ளது. அந்நாட்டின் சட்டத்தின் படி, மணமகள் வீட்டுக்கு ஆறாயிரம் டாலர்கள் மணமகன் வீட்டார் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த பெண்மணி மாயமாகியுள்ளார்.
Image Credit: ตีแผ่ / Facebook

அதிகபட்சமாக...
பிரத் பியூங்சுக் எனும் நபர் அதிகபட்சமாக இந்த பெண்மணியிடம் முப்பதாயிரம் டாலர்கள் ஏமார்ந்து போயுள்ளார். இவர் ஒரு டாக்ஸி ஓட்டுனர் ஆவார்.
தன்னை திருமணம் செய்வதற்கு முன்னர் எங்கள் குடும்ப தொழிலான பழ வியாபாரத்தில் நீ சேர வேண்டும் என கூறி இவ்வளவு பெரிய தொகையை ஏமாற்றியுள்ளார் அந்த பெண்.
Image Credit: ตีแผ่ / Facebook

போலீசில் பிடிபட்டார்!
சென்ற வாரம் இவர் ஏமாற்றவிருந்த 12 வது நபர் மூலமாக, இந்த பெண்மணி போலீஸில் சிக்கினார். ஏறத்தாழ அந்த 11 ஆண்களிடம் இருந்து 90 ஆயிரம் டாலர்கள் இவர் ஏமாற்றியுள்ளார் என்பது விசாரணையின் முடிவில் தெரியவந்தது.
போலீஸ் அந்த பெண்ணின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.
Image Credit: ตีแผ่ / Facebook



Click it and Unblock the Notifications