Just In
- 29 min ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 1 hr ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- 1 hr ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- 2 hrs ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரே மாதத்தில் 4 பேர், மொத்தம் 11 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்மணி!
ஒரே மாதத்தில் 4 பேருடன் திருமணம், மொத்தம் 11 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பலே கில்லாடி பெண்மணி!
இதுவரை நாம் செய்திகளில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களை கண்டிருப்போம். ஆனால், தாய்லாந்தை சேர்ந்த ஒரு பெண் அவர்களது பாரம்பரிய வழக்கத்தை கையாண்டு 11 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 4 பேரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 11 பேரை ஏமாற்ற இந்த பலே கில்லாடி பெண் ஃபேஸ்புக்கை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தியுள்ளார். இதன் மூலமாக நட்பாகி, அவர்களுடன் உறவு கொண்டு, திருமணம் செய்து பணம்பறித்து ஏமாற்றியுள்ளார்...
11 பேர்!
தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களில் 11 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரே மாதத்தில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
Image Credit: ตีแผ่ / Facebook
தாய்லாந்து பாரம்பரியம்!
தாய்லாந்து நாட்டின் பாரம்பரியத்தில் மணமகன் குடும்பம், மணமகள் குடும்பத்திற்கு டவுரியாக குறிப்பிட்ட பணம் கொடுக்க வேண்டும். அப்படி, இந்த பெண்மணி 11 ஆண்களிடம் இருந்து ஆறாயிரம் டாலர்களில் இருந்து முப்பதாயிரம் டாலர்கள் வரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.
Image Credit: ตีแผ่ / Facebook
தப்பித்து ஓட்டம்!
ஒவ்வொரு திருமணத்திற்கு பிறகும், எனது குடும்ப தொழிலில் பிரச்சனை, ஜாதகத்தில் கோளாறு என பல்வேறு சாக்குப்போக்கு சொல்லி தப்பித்து ஓடியுள்ளார் இந்த பலே கில்லாடி பெண்மணி.
Image Credit: ตีแผ่ / Facebook
ஃபேஸ்புக்கில் மாட்டினார்!
இந்த பெண் ஒவ்வொரு முறையும் ஃபேஸ்புக்கில் தனது படங்களை பதிவு செய்து தான் ஆண்களை மயக்கியுள்ளார். முதலில் நட்பாக பழகி, செக்ஸ் வைத்துக் கொண்டு, பிறகு திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளார். அதே ஃபேஸ்புக் பதிவுகள் மூலமாகவே இவர் மாட்டியிருக்கிறார்.
Image Credit: ตีแผ่ / Facebook
11ல் ஒருவர்!
பிரசார்ன் தியாமியம் எனும் ஒருவர், இந்த பெண்மணியிடம் 2015ல் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு பழகி, திருமணம் செய்து ஏமார்ந்ததை ஊடகத்தில் கூறியுள்ளார்.
நட்பாகி ஒன்பதாவது மாதத்தில், அந்த பெண்மணி கர்ப்பமாகியுள்ளார். அதற்கு பிறகே திருமணம் நடந்துள்ளது. அந்நாட்டின் சட்டத்தின் படி, மணமகள் வீட்டுக்கு ஆறாயிரம் டாலர்கள் மணமகன் வீட்டார் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த பெண்மணி மாயமாகியுள்ளார்.
Image Credit: ตีแผ่ / Facebook
அதிகபட்சமாக...
பிரத் பியூங்சுக் எனும் நபர் அதிகபட்சமாக இந்த பெண்மணியிடம் முப்பதாயிரம் டாலர்கள் ஏமார்ந்து போயுள்ளார். இவர் ஒரு டாக்ஸி ஓட்டுனர் ஆவார்.
தன்னை திருமணம் செய்வதற்கு முன்னர் எங்கள் குடும்ப தொழிலான பழ வியாபாரத்தில் நீ சேர வேண்டும் என கூறி இவ்வளவு பெரிய தொகையை ஏமாற்றியுள்ளார் அந்த பெண்.
Image Credit: ตีแผ่ / Facebook
போலீசில் பிடிபட்டார்!
சென்ற வாரம் இவர் ஏமாற்றவிருந்த 12 வது நபர் மூலமாக, இந்த பெண்மணி போலீஸில் சிக்கினார். ஏறத்தாழ அந்த 11 ஆண்களிடம் இருந்து 90 ஆயிரம் டாலர்கள் இவர் ஏமாற்றியுள்ளார் என்பது விசாரணையின் முடிவில் தெரியவந்தது.
போலீஸ் அந்த பெண்ணின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.
Image Credit: ตีแผ่ / Facebook