Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
நீட்'டான, நீட்டாலான கொலை - நாம் மறக்க கூடாத 5 விஷயங்கள்!
நீட் காரணத்தை தாண்டி மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தவை.
நீட் எதற்காக கொண்டு வரப்பட்டது. திறமை உள்ளவர் மட்டும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற காரணம் முன்னிறுத்தி கொண்டு வரப்பட்ட தேர்வு தான் நீட்.
அப்போ அனிதா திறமையானவர் இல்லையா? மாநில தேர்வில் 1176/1200; 196.5 கட் ஆப். இதற்கு பெயர் திறமை இல்லையா?அனிதாவின் மரணத்திற்கு நீட் காரணமல்ல, அரசு தான். அப்டேட் இல்லாத தமிழக பாடத்திட்டங்கள் தான் முதல் காரணம்.

நீதிமன்றத்தின் நறுக் கேள்வி!
10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றாமல், நீட் தேர்வை ரத்து செய்ய கூறுவது சரியான காரணமாக இல்லை என தமிழக அரசின் முகத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டது நீதிமன்றம்.
சரிதானே! கல்வி துறை அமைச்சர், மாவட்டத்திற்கு ஒரு கல்வியியல் அலுவலகம், அதில் முதன்மை அதிகாரிகள் முதல் கடைநிலை அதிகாரிகள் வரை இவ்வளவு வருடம் பாடத்திட்டத்தை மேம்படுத்தாமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை...
இந்தியா முழுக்க ஒரே தேர்வு முறையை நடைமுறைப்படுத்த தெரிந்த மத்திய மைனர் குஞ்சுகளுக்கு... நாடு முழுதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு அதை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பது ஏன் தெரியவில்லை....?

சமச்சீரின் முதல் பலி?
சமச்சீர் கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான கல்வியாக இருக்கிறதே தவிர தரமான கல்வியாக இல்லை. நீட் தேர்வில் தேர்வு பெறும் அளவிற்கு நமது சமச்சீர் பாடத்திட்டம் சிறந்து விளங்குகிறதா? என்றால் அதுவும் இல்லை.

ஸ்டேட் ரேங்க்!
சமச்சீர் கல்வியில் வருகைக்கு முன்னர் ஸ்டேட் ரேங்க் மூன்று பேர் தான் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று? முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பட்டியலில் நூறு பேர் இருக்கிறார்கள்.
இது, மாணவர்களின் திறன் மேம்பட்டதன் வெளிப்பாடு அல்ல, பாடத்திட்டம் மிகவும் எளிதானது.
ஒருவேளை பாடத்திட்டம் தரமாக இருந்திருந்தால்... அனிதா போன்ற தங்க கண்மணிகள் இன்று மென்மேலும் ஜொலித்திருப்பார்கள்.

சி.பி.எஸ்.இ
பிரச்சனை சி.பி.எஸ்.இ இல்ல... சி.பி.எஸ்.இ அளவுக்கு தரமான பாடத்திட்டம் அமைக்காத அரசு தான் பெரும் பிரச்சனை.
தர்மாக்கோல் அமைச்சர்கள் ஒருபுறம், கல்வியை வியாபாரமாக மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மறுபுறம். இதன் மத்தியில் வெறும் கனவுகளுடன் சிறகடிக்க துடித்து, மடிந்து விழும் அனித்தாக்கள்.
கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு திரு பாரத பிரதமர் ஒரு முடிவெடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications