Latest Updates
-
கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
நீட்'டான, நீட்டாலான கொலை - நாம் மறக்க கூடாத 5 விஷயங்கள்!
நீட் காரணத்தை தாண்டி மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தவை.
நீட் எதற்காக கொண்டு வரப்பட்டது. திறமை உள்ளவர் மட்டும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற காரணம் முன்னிறுத்தி கொண்டு வரப்பட்ட தேர்வு தான் நீட்.
அப்போ அனிதா திறமையானவர் இல்லையா? மாநில தேர்வில் 1176/1200; 196.5 கட் ஆப். இதற்கு பெயர் திறமை இல்லையா?அனிதாவின் மரணத்திற்கு நீட் காரணமல்ல, அரசு தான். அப்டேட் இல்லாத தமிழக பாடத்திட்டங்கள் தான் முதல் காரணம்.

நீதிமன்றத்தின் நறுக் கேள்வி!
10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றாமல், நீட் தேர்வை ரத்து செய்ய கூறுவது சரியான காரணமாக இல்லை என தமிழக அரசின் முகத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டது நீதிமன்றம்.
சரிதானே! கல்வி துறை அமைச்சர், மாவட்டத்திற்கு ஒரு கல்வியியல் அலுவலகம், அதில் முதன்மை அதிகாரிகள் முதல் கடைநிலை அதிகாரிகள் வரை இவ்வளவு வருடம் பாடத்திட்டத்தை மேம்படுத்தாமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை...
இந்தியா முழுக்க ஒரே தேர்வு முறையை நடைமுறைப்படுத்த தெரிந்த மத்திய மைனர் குஞ்சுகளுக்கு... நாடு முழுதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு அதை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பது ஏன் தெரியவில்லை....?

சமச்சீரின் முதல் பலி?
சமச்சீர் கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான கல்வியாக இருக்கிறதே தவிர தரமான கல்வியாக இல்லை. நீட் தேர்வில் தேர்வு பெறும் அளவிற்கு நமது சமச்சீர் பாடத்திட்டம் சிறந்து விளங்குகிறதா? என்றால் அதுவும் இல்லை.

ஸ்டேட் ரேங்க்!
சமச்சீர் கல்வியில் வருகைக்கு முன்னர் ஸ்டேட் ரேங்க் மூன்று பேர் தான் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று? முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பட்டியலில் நூறு பேர் இருக்கிறார்கள்.
இது, மாணவர்களின் திறன் மேம்பட்டதன் வெளிப்பாடு அல்ல, பாடத்திட்டம் மிகவும் எளிதானது.
ஒருவேளை பாடத்திட்டம் தரமாக இருந்திருந்தால்... அனிதா போன்ற தங்க கண்மணிகள் இன்று மென்மேலும் ஜொலித்திருப்பார்கள்.

சி.பி.எஸ்.இ
பிரச்சனை சி.பி.எஸ்.இ இல்ல... சி.பி.எஸ்.இ அளவுக்கு தரமான பாடத்திட்டம் அமைக்காத அரசு தான் பெரும் பிரச்சனை.
தர்மாக்கோல் அமைச்சர்கள் ஒருபுறம், கல்வியை வியாபாரமாக மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மறுபுறம். இதன் மத்தியில் வெறும் கனவுகளுடன் சிறகடிக்க துடித்து, மடிந்து விழும் அனித்தாக்கள்.
கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு திரு பாரத பிரதமர் ஒரு முடிவெடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications