Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும்
சுவாமி விவேகானந்தரின் மறக்க முடியாத சில பொன்மொழிகள்!!!
சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி பிறந்து, 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி காலமானார். இன்று அவர் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது பொன்மொழிகள் ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்து வாழ்ந்து வருகிறது.
Swami Vivekananda Quotes In Tamil: அத்வைத வேதாந்த கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பியவர் தான் சுவாமி விவேகானந்தர். பல திறமைகளை உள்ளடக்கிய சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும், பொன்மொழிகளும் அனைவரது உணர்ச்சியையும் தூண்டிவிடக்கூடியதாக இருக்கும். மேலும் பலர் சுவாமி விவேகானந்தரை ரோல்மாடலாக கொண்டுள்ளனர். குறிப்பாக கடவுள், வாழ்க்கை, இளைஞர்களைப் பற்றி விவேகானந்தர் கூறிய பொன்மொழிகள் அனைத்தும் சிந்திக்க வைக்கக்கூடியவையாக இருக்கும்.
இத்தகைய சுவாமி விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி பிறந்து, 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி காலமானார். இன்று அவர் உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது பொன்மொழிகள் என்றும் அழியாமல் உயிருடன் ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்து வாழ்ந்து வருகிறது. இங்கு சுவாமி விவேகானந்தரின் சில சிறப்பான பொன்மொழிகளைப் பற்றி பார்ப்போம்.

பொன்மொழி: 1
கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும். அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

பொன்மொழி: 2
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். ஆனால் நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. ஆகவே உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

பொன்மொழி: 3
நாம் இப்போது இப்படி இருக்கும் நிலைக்கு நாம் தான் பொறுப்பு.

பொன்மொழி: 4
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! நீ உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

பொன்மொழி: 5
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

பொன்மொழி: 6
உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில், எதையும் வெல்.

பொன்மொழி: 7
லட்சியம் உடையவன் ஆயிரம் தவறுகள் செய்தால் அது இல்லாதவன் ஐயாயிரம் தவறுகள் செய்வான் என்பது உறுதி. ஆதலால் லட்சியம் மிகவும் தேவை.

பொன்மொழி: 8
அரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் ஒருவன் சுதந்திரம் பெறலாம். ஆனால் ஆசைகளுக்கும், கோபத்திற்கும் அவன் அடிமையாக இருந்தால். உண்மையான சுதந்திரத்தின் தூய இன்பத்தை அவனால் உணர முடியாது.

பொன்மொழி: 9
மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.

பொன்மொழி: 10
பிறரிடமிருந்து நல்லதைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.



Click it and Unblock the Notifications