Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வாழைமரத்தை பத்திரமா பாத்துகோங்க...கூன் வண்டு அதிகம் தாக்குது!

கூன் வண்டால் தாக்கப்பட்ட கன்றின் நான்குப் பக்கங்களிலும் ஓட்டைகள் அல்லது குழிகள் ஏற்படும். கன்றுகள் அதிகம் தாக்கப்பட்டால், அவை அழுகி விடும். வண்டு தாக்கப்பட்டால், மரங்களுக்கு சத்து செல்வது தடைப்பட்டு, இலைகள் பழுத்து, உதிர ஆரம்பிக்கும். பின் சீப்புகளின் எண்ணிக்கை குறைந்து, பழங்கள் சிறுத்து காணப்படும். அதுமட்டுமல்லாமல் சற்று காற்று அடித்தால் கூட, மரம் அடியோடு சாய்ந்து விடும். இப்படிப்பட்ட இந்த கூன் வண்டை எப்படி கட்டுப்படுத்தலாம்-னு பார்க்கலாமா!!!
கூன் வண்டை கட்டுப்படுத்தும் வழிகள் :
வாழைக்கன்றுகளை நடும் முன், ஒரு லிட்டர் தண்ணீரில் 14 மி.லி. மோனோகுரோட்டோபாஸ் கலந்து, கன்றுகளை அதில் நனைத்து பின் நட வேண்டும்.
வண்டுகள் அடுத்தடுத்து மரங்களுக்குப் பரவமால் இருக்க, வெட்டப்படாமல் உள்ள பழைய வாழை மரங்கள், கழிவுகள், களைகள் மற்றும் காய்ந்த இலைகளை நீக்கி தோட்டத்தை சுத்தமாக வைத்தால் பரவாது.
கன்றுகளை நடும் முன், வண்டுகள் இருக்கிறதா என்று அறிய, வெட்டும் நிலையில் இருக்கும் வாழை மரத்தை நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பிளவுபட்ட பகுதியை தரையை நோக்கி வைத்து வண்டுகளின் நடமாட்டத்தை கண்டறியலாம். அப்படி வண்டுகள் இருந்தால் தொடர்ச்சியாக வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழித்து விடலாம்.
வெட்டப்பட்ட பழைய மரங்களின் வெட்டப்பட்ட பகுதியைக் களிமண் கொண்டு பூசிவிட்டு, புதிய கன்றுகளை நட்டால் மிகவும் நல்லது. இதனால் பெண் வண்டுகள் முட்டையிடுவதைத் தடுக்கலாம்.
மேலும் இந்த வண்டுகளை கட்டுப்படுத்த காஸ்மோலியூர் என்ற கிழங்கு கூண் வண்டு இனக்கவர்ச்சிக் பொறிகளைப் பயன்படுத்தி வண்டுகளைக் கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications