Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
வாழைமரத்தை பத்திரமா பாத்துகோங்க...கூன் வண்டு அதிகம் தாக்குது!

கூன் வண்டால் தாக்கப்பட்ட கன்றின் நான்குப் பக்கங்களிலும் ஓட்டைகள் அல்லது குழிகள் ஏற்படும். கன்றுகள் அதிகம் தாக்கப்பட்டால், அவை அழுகி விடும். வண்டு தாக்கப்பட்டால், மரங்களுக்கு சத்து செல்வது தடைப்பட்டு, இலைகள் பழுத்து, உதிர ஆரம்பிக்கும். பின் சீப்புகளின் எண்ணிக்கை குறைந்து, பழங்கள் சிறுத்து காணப்படும். அதுமட்டுமல்லாமல் சற்று காற்று அடித்தால் கூட, மரம் அடியோடு சாய்ந்து விடும். இப்படிப்பட்ட இந்த கூன் வண்டை எப்படி கட்டுப்படுத்தலாம்-னு பார்க்கலாமா!!!
கூன் வண்டை கட்டுப்படுத்தும் வழிகள் :
வாழைக்கன்றுகளை நடும் முன், ஒரு லிட்டர் தண்ணீரில் 14 மி.லி. மோனோகுரோட்டோபாஸ் கலந்து, கன்றுகளை அதில் நனைத்து பின் நட வேண்டும்.
வண்டுகள் அடுத்தடுத்து மரங்களுக்குப் பரவமால் இருக்க, வெட்டப்படாமல் உள்ள பழைய வாழை மரங்கள், கழிவுகள், களைகள் மற்றும் காய்ந்த இலைகளை நீக்கி தோட்டத்தை சுத்தமாக வைத்தால் பரவாது.
கன்றுகளை நடும் முன், வண்டுகள் இருக்கிறதா என்று அறிய, வெட்டும் நிலையில் இருக்கும் வாழை மரத்தை நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பிளவுபட்ட பகுதியை தரையை நோக்கி வைத்து வண்டுகளின் நடமாட்டத்தை கண்டறியலாம். அப்படி வண்டுகள் இருந்தால் தொடர்ச்சியாக வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழித்து விடலாம்.
வெட்டப்பட்ட பழைய மரங்களின் வெட்டப்பட்ட பகுதியைக் களிமண் கொண்டு பூசிவிட்டு, புதிய கன்றுகளை நட்டால் மிகவும் நல்லது. இதனால் பெண் வண்டுகள் முட்டையிடுவதைத் தடுக்கலாம்.
மேலும் இந்த வண்டுகளை கட்டுப்படுத்த காஸ்மோலியூர் என்ற கிழங்கு கூண் வண்டு இனக்கவர்ச்சிக் பொறிகளைப் பயன்படுத்தி வண்டுகளைக் கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications