Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
இந்த பொருட்களை இரவில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா?
உங்கள் உணவில் நீங்கள் செய்யும் சிறிய மாற்றங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் நாளை சரியான ஊட்டச்சத்துடன் தொடங்குவதற்கு காலை நேரம் மிகவும் பொருத்தமானது.
உங்கள் உணவில் நீங்கள் செய்யும் சிறிய மாற்றங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் நாளை சரியான ஊட்டச்சத்துடன் தொடங்குவதற்கு காலை நேரம் மிகவும் பொருத்தமானது. நம்மில் பலர் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளை சந்திக்க நேரிடலாம், இது சில தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். உதாரணமாக, இரும்பு, ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் B12 மற்றும் A இல்லாமை இரத்த சோகைக்கு வழிவகுக்கும். வைட்டமின் டி குறைபாடு இரத்தத்தில் குறைந்த கால்சியம் அளவுகள், ரிக்கெட்ஸ் மற்றும் எலும்புகளை பலவீனமாக்கும்.

பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் வேர்க்கடலை போன்ற நட்ஸ்கள் பி-வைட்டமின்கள், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இந்த சிறிய சூப்பர்ஃபுட்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். இந்தக் நட்ஸ்களை ஊறவைத்து சாப்பிடும்போது ஊட்டச்சத்துக்கள் உடலால் நன்றாக உறிஞ்சப்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றை இரவில் ஊறவைப்பது, அஜீரணத்தை ஏற்படுத்தும் இந்த பருப்புகளில் உள்ள பைடிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. பருப்புகளை ஊறவைப்பது அவற்றின் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் அவற்றின் சுவை மற்றும் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. நுண்ணூட்டச் சத்து குறைபாட்டிற்கு உதவக்கூடிய மற்றும் நாள்பட்ட அல்லது தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்த எந்தெந்த நட்ஸ்களை இரவில் ஊறவைத்து சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PCOS மற்றும் முகப்பரு பிரச்சினைக்கு ஊறவைத்த பாதாம்
ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது PCOS, முகப்பரு போன்றவற்றிலிருந்து விடுபட்டு, பளபளப்பான சருமத்தை அடைய உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். 5-7 பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து, காலையில் தோலை நீக்கி, தினமும் உட்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஊறவைத்த திராட்சை மற்றும் கேசர்
மாதவிடாய் வலி மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு, 6-8 ஊறவைத்த திராட்சை மற்றும் 2 கேசரை இரவில் ஊறவைத்து, அதனை மறுநாள் காலையில் உட்கொள்ளலாம்.

முடி உதிர்தலுக்கு ஊறவைத்த கருப்பு திராட்சை
முடி உதிர்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்சனைகளுக்கு, கருப்பு திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுங்கள். இது உங்களுக்கு பல அளப்பரிய நன்மைகளை அளிக்கும்.

நினைவாற்றலுக்கு ஊறவைத்த அக்ரூட் பருப்புகள்
இரண்டு அக்ரூட் பருப்புகளை இரவில் ஊறவைத்து, காலையில் உட்கொண்டால் மூளையின் சக்தி, நினைவாற்றல் மற்றும் செறிவு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வித் திறனை அதிகரிக்க இது மிகவும் நல்லது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஊறவைத்த பாசிப்பருப்பு
2 டீஸ்பூன் பாசிப்பயிறை தினமும் இரவில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வர முடி, தசை ஆரோக்கியம் மற்றும் நல்ல சருமம் கிடைக்கும். இது குறிப்பாக இளம் வயதினருக்கும் பெண்களுக்கும் சிறந்தது மற்றும் அவசியமானது.

மலச்சிக்கலுக்கு ஊறவைத்த அத்திப்பழம்
ஊறவைத்த இரண்டு அத்திப்பழங்கள் உங்கள் குடல் ஆரோக்கியத்தில் பல அதிசயங்களைச் செய்யும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு மலச்சிக்கலைப் போக்க இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எப்படி ஊறவைப்பது?
- நன்கு கழுவவும்
- சுத்தமான குடிநீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்
- காலையில் தண்ணீரை வடிகட்டவும்
- அக்ரூட் பருப்புகள்/அத்திப்பழங்களை நேரடியாக உட்கொள்ளுங்கள்.
- பாசிப்பயிறை முளைக்கும் வரும் விட்டு (சல்லடை அல்லது துணியால் மூடி) 6-8 மணி நேரம் விடலாம். ஆவியில் வேகவைத்து சாலட்டுடன் உட்கொள்ளவும்.



Click it and Unblock the Notifications